Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ அரசுக்கு அனுமதியில்லை இலங்கைக்கு தூதரகம் ! ஆறு கோடி இறந்துவிட்டதா ?

Featured Replies

தமிழீழ அரசுக்கு அனுமதியில்லை இலங்கைக்கு தூதரகம் ! ஆறு கோடி இறந்துவிட்டதா ?

தாய் தமிழகமே ! எங்கள் கண்ணீர் கொஞ்சம் துடைக்க இன்றாவது முன் வருகிறீர் !! அதற்கு எம் நன்றிகள் ! தாய் தமிழகம் வேட்டிக்கும் பணத்துக்குமாய் ஒட்டு போட்டு எங்கள் குழந்தைகளை கருவிலேயே சிங்களம் கொல்ல வைத்துவிட்டீரே என்று உங்களை அன்று திட்டி தீர்த்தவன் நான் ! உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து பரிதாபப்பட , நீங்கள் மானாட மயிலாட பார்த்து மயங்கி கிடந்த பொது , எப்படி எங்களை பொறுத்து கொல்ல சொல்வீர் ? ஒரு ஆயிரம் அமெரிக்கர் இறந்ததற்காய் ஈராக் , ஆப்கானிஸ்தான் , என்று மத்திய கிழக்கே இன்று அடக்க பட்டதே ! ஒரு யூதன் கொல்லபட்டால் உலக போறே வெடிக்கும் அளவுக்கு ஒரு அரசியல் உருவாக்க பட்டதே ! இவை எல்லாம் எப்படி ? ஆம் ஒரு தேசிய இனம் , நாடுகளை கடந்து தம் இனத்துக்காக குரல் கொடுக்கவும் , அரசியலில் செல்வாக்கு செலுத்தி அந்த நாடுகளை தம் பக்கம் இழுக்கவும் முயற்சிக்க வேண்டும் !

தமிழ் இனத்தின் தாய் நாடான தமிழ் நாட்டில் என்னதான் நடந்தது ? ஒன்றல்ல இரண்டல்ல நாப்பதினாயிரம் உடன் பிறப்புகள் ரத்த வெள்ளத்தில் குளிக்க நீங்கள் திரைப்பட கதா நாயர்களுக்கு பால் ஊத்தி நின்றீர் ! இந்தியாவை தவிர எல்லா நாட்டையும் எங்களுக்காக குரல் கொடுக்க வைத்தோம் ! ஒரு பக்கம் எங்கள் வாக்கு வங்கி அடுத்த பக்கம் அவர்கள் மனதின் நியாயத்தை தட்டி எழுப்பி , எதனை வழிகளில் என்றும் போராடுகிறோம்! போராடுவோம் !

ஈழதமிழனாய் புகலிடம் தேடி போன நாடெல்லாம் வெறும் நூறாயிரம் பேர் சேர்ந்து தெருவெல்லாம் முடக்கினோம் ! பிரித்தானியா , பிரான்ஸ் , கனடா , அமெரிக்கா , நெதர்லாந்து , டென்மார்க் , ஸ்வீடன் ...என்று பல நாடுகள் தமிழருக்கு குரல் கொடுக்க முன் வர , ஆறு கோடி மக்கள் இருந்தும் எல்லா நாடுகளுக்கும் தடையாய் நின்றது பாரதம் !

உம்மால் வெறும் இலங்கை துணை தூதரகத்தை கூட அகற்ற முடியவில்லை ! இந்திய அரசியலை கொஞ்சம் மாற்ற முன்வரவில்லை ! புலிகளை மீறி தமிழர்களை ஒட்டு மொத்தமாக சிங்கள கொன்ற பொது நாங்கள் கடும் பணியில் தெரு எல்லாம் முடக்கி வெறும் பத்தாயிரம் பேர் நாங்கள் எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லாத நாடுகளையே நிர்பந்திக்க , எமக்கே அழிவு செய்து சிங்களத்துக்கு பக்க பலமாக நின்ற இத்தாலிய அரக்கியை உம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை ! முள்ளி வாய்காலில் இந்திய கொடியையும் சேர்த்து பிடிக்கும் அளவுக்கு தமிழ்நாடு பிணமாகி கிடந்தது ! அன்றைய தளபதி சரத் பொன்சேகா தமிழ்நாடு வெறும் கோமாளி கூட்டம் என்று கூறும் போதும் , முதல்வர் என்று தனை கூறிகொள்ளும் அந்த முதுகெலும்பற்ற மனிதனுக்கு கொஞ்சம் கூட சூடு வரவில்லை ! அவரின் நாடகத்தை பார்த்தும் தமிழ்நாடு பொங்கி எழவில்லை ! அன்று நீர் பொங்கி இருந்தால் , நான்கு மாதம் டெல்கி நகரை முடக்கி இருந்தால் தமிழ்நாடே கொந்தளித்து இருந்தால் நிச்சயம் ஒரு பெரும் இனப்படுகொலை தடுக்க பட்டு இருக்கும் ! முடியவில்லை என்னால் திட்டி திட்டி உங்கள் நாடே அழியட்டும் என்று கொதித்து இருந்தேன் !

இன்று எங்கள் கண்ணீரில் கொஞ்சம் நிறத தோன்றுகிறது ! தமிழ்நாட்டின் புதிய புரட்சியை பார்த்து இலங்கை கொஞ்சம் யோசிக்க தொடக்கி இருக்கிறது ! ஆனால் அண்மையில் மீண்டும் இலங்கையின் ஊடக அமைச்சர் உங்கள் எழுச்சியை ஒரு தற்காலிக உணர்ச்சி என்றும் . கொஞ்ச நேரத்தில் கொதி அடங்க வீடு சென்று விடுவார்கள் என்றும் ஊடக மாநாட்டில் கூறி உள்ளார் !

புலி புலி என்று எங்களை பார்த்து ஓடியவர் இன்றுவரை புலத்தில் நடக்கும் போராட்டங்களை பார்த்து ஒன்றுமே கூறுவதில்லை . புலம் பெயர் தமிழரை பற்றி ஏதேனும் கூறினால் அதையே பெரும் அரசியல் சிக்கலாக்கி இனவாதத்தின் கூற்றை உலகெங்கும் கொண்டு சென்று இன்னமும் பலம் சேர்த்து விடுவோம் என்று சிங்களவன் பயப்படுகிறான் ! முள்ளிவாய்க்கால் முடிவல்ல இது தமிழீழ போராட்டத்தை பெரும் சமுத்திரங்களில் சேர்த்து விட்டது என சிங்கள தேசம் உணர தொடக்கி விட்டது . உள்ளூரில் ஈழத்தில் ஒரு தமிழன் மேல் கைவைக்க முடியாத படி புலம் பெயர் தமிழர் பலம் இருக்கிறது . இன்றும் பெரியதொரு இனவாதம் தன்னை மூடி மறைத்து தமிழர்களோடு சேருவோம் என்று கூறி போராட்டம் அடக்க பட்ட பின்னும் தமிழரை முற்றும் முழுதாக அழிக்க முடியாமல் கைகளை கட்டி நிற்கின்றது என்றால் அது புலம் பெயர் தமிழர் பலமே !

ஆனால் எத்தனை நாளைக்குதான் இனவாதம் பார்த்து கொண்டு இருக்கும் என்பது அண்மையில் நடக்கும் கொலைகள் மூலம் நிரூபணம் ஆகிறது. என்பது மூன்றில் வெலிக்கடை படுகொலைகளின் பின்னர் புல்களுக்கு பயத்தில் தமிழ் சிறை கைதிகளை தொட பயந்தவர்கள் இன்று மீண்டும் தொடங்கி விட்டனர் ! அன்று கொழும்பு இன்று அனுராதபுரம் , ஏன் இனி யாழ் மண்ணிலே வைத்தே கொள்ளபடுவர். எங்கும் சிங்களம் , எதிலும் சிங்கள இராணுவம் என்று அடிமைப்பட்ட தேசத்தில் இனி எதுவும் நடக்கலாம் ! புலம் பெயர் தமிழர்கள் போராட்டத்தின் பலத்துக்கு ஒரு எல்லை உண்டு ...அந்த எல்லை இந்திய அரசின் அதிகார எல்லை !

நாங்கள் எப்படி எடுத்து கூறினாலும் கத்தி கூறினாலும் கெஞ்சி பார்த்தாலும் அமெரிக்காவோ பிரித்தானியவோ எண்ணை இல்ல எங்கள் ஊரை பற்றி கவலை படபோவதில்லை . நாங்கள் ஆயுத போராட்டத்தை மீண்டும் தொடங்கினால் அன்றி வேறு தீர்வை யாரும் தர போவதில்லை . சரி ஆயுத போர் என்றால் , எங்கே போராடுவது ? ஒரு பெரும் வராலாற்று நாயகம் கேழ் நடந்த போறே தொற்ற்கடிக்க பட்ட பொது , பாதி மக்கள் வெளிநாடு என்று ஓடிவிட்ட பிறகு , மனித வாழ்வின் காணக்கூடாத கொடூரத்தை கண்ட பிறகு எப்படி எங்கள் மக்களை இன்னமும் போராட எதிர்பார்க்கலாம் ? அப்படிதான் போராட நினைத்தாலும் வெல்வோம் என்பதற்கு என்ன இன்று மாறி விட்டது ? என்ன மாற வேண்டும் ?

அங்கேதான் ஒட்டு மொத்த சுவராக பெரும் தடையாக இந்தியா நிற்கிறது ! தர்மத்தை நிலைநாட்ட முன்வருவோம் ! இன்று தமிழீழ கொடுமைகளை நிறுத்தும் ஒரே பலமாக தமிழ்நாடு இருக்கிறது ! தமிழ்நாட்டில் வரும் அரசே இந்திய அரசின் நிலைப்பாட்டை மற்ற வேண்டும் ! அப்போது புலம் பெயர் நாட்டில் நடக்கும் அரசியலால் முன்னகர்தபடும் நாடுகளுடன் இந்தியாவும் இணைத்து வைக்கப்பட்டு சிறீ லங்கா தனிமை படுத்த பட்டு , தமிழர்களுக்கான தனாட்சி உரிமையை வென்றெடுக்கும் தேர்தலை நடாத்தப்பட வேண்டும் ! புலத்தில் , தமிழர் பெரவைகளாக , நாடு கடந்த அரசாங்கமாக , தமிழ் இளையோர் அமைப்பாக , அரசியல் கட்சிகளுக்கான தமிழர் என்ற பெயரில் , சகலரும் தமிழீழ பயணத்தை தொடங்கி உள்ள நிலையில் தமிழ் நாடும் தன் பொறுப்பை அற்ற முன் வரவேண்டும் !

இலங்கை துணை தூதரகம் மூடப்படவேண்டும் ! செவ் தமிழ் , மே பதினேழு இயக்கம் , நாம் தமிழர் , சீமான் , வைகோ , வேல்முருகன் , திர்மாழவன் ...என்று சகலரும் இணைந்து தமிழன உணர்வுள்ள ஒரு அரசை அமைக்க முன்வரவேண்டும் ! அந்த அரசு இந்திய அரசின் பலத்தை இலங்கைக்கு எதிராக திருப்ப வைக்க முனைய வேண்டும் ! தமிழ்நாட்டின் அரசு என்று இல்லாமல் மக்கள் போராட்டமாக இது வளர்த்தெடுக்க பட வேண்டும் !

எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லாத நாடு எல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசை இயங்க அனுமதிக்க , ஆறு கோடி ஊமையர் வாழும் நாட்டில் மட்டும் எங்களுக்கு உங்களோடு பேச ஒரு அலுவலகம் திறக்க வழியில்லை ! அனால் சிங்களவனுக்கு தூதரகம் உங்கள் மண்ணிலேயே ! என்ன கொடுமை இது ? எந்த நாட்டில் எந்த இனம் இதை பார்த்து கொண்டு இருக்கும் ! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றால் இணைகி தூதரகமும் இழுத்து மூட படவேண்டும் ! இத்தாலி அரக்கி அசையமாட்டாள் ...காங்கிரசை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே அந்த கொட்டத்தை அடக்க முடியும் ! ஒரு எம் ஜி ஆர் , போல ஒரு உரிமைக்காக வாழும் மனிதர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் !

தாய் தமிழகமே தூக்கம் விடு! தமிழர் துயர் துடைக்கும் தாயாக புலம் பெயர் பலத்துடன் இனி மற்றம் நிகழும் ! தமிழக இளையோர் இனி புலம் பெயர் இளையோரோடு இணைந்து போராடுவர் ! பேசி ஏமாற்றி எம்மை ஆண்டவர் அடங்கட்டும் ! கொள்ளையடித்தவர் விரட்டப்படட்டும் !

தமிழீழம் நிச்சயம் விடியும் ! அன்று தமிழ் நாட்டில் போராடும் அத்தனை உள்ளங்களும் தெய்வத்தின் இடத்தில வைக்கபடுவர் ! உயிர்னும் மேலான தாய் நாட்டை சுடு காடாய் மாற்றிய இலங்கைக்கு எதற்கு சென்னையில் தூதரகம் ? இளயோர் இணைந்து இதை அகற்றின் அது எங்கள் முதல் படி !

Raj Suthan <suthan777@yahoo.com>

"Lets voice for Tamil Freedom"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.