Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தம் செய்

Featured Replies

ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும். சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்?

சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு டப்பாவில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐடி டிஎஸ்பி. கொஞ்சம் கொஞ்சமாய் கிடைத்த கைகளை வைத்து தன் விசாரணையை ஆரம்பிக்க, அங்கொன்றும், இங்கொன்றுமாய் லிங்க் கிடைத்து, ஒரு வட்டம் வருகிறது. கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப் படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின் பின்னணி என்று மிக டீடெயிலாக சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கமாய் இம்மாதிரியான படங்களில் பரபரவென திரைக்கதை ஓடும், அல்லது பிஷுக், விஷுக்கென காமெராவை அங்கும் இங்கும் ப்ளாஷ் பேன் செய்து, எபெக்ட் போட்டு மிரள வைக்கும் காலத்தில், நிஜ விசாரணை எப்படி போகுமோ அதே வேகத்தில் விசாரணையை காட்டியிருப்பது ஒரு விதத்தில் அழகாய் இருக்கிறது.

படத்தில் முக்கியமாய் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம் காஸ்டிங். வழக்கமாய் மிஷ்கின் அவரது படங்களில் இதைச் சரியாக செய்வார். நடு ராத்திரி தூக்கத்தில் எழுப்பினாலும் விரைப்பாகவே “வால்ல்ல்ல்ல்ல்டர் வெற்றிவேல்” என்று எச்சில் தெரிக்க, நேர் பார்வை பார்த்தபடி பேசும் ஆபீஸர்களையே பார்த்து பழகிய நமக்கு மிகச் சாதாரணமாய் இருக்கும் ஆபீசர்களை பார்க்கும் போது என்னடா இது என்று தோன்றினால் அதற்கு காரணம் பெரும்பாலனர்வகள் சினிமாவில் மட்டுமே போலீஸை பார்பதும், நம் தமிழ் சினிமா சொல்லிக் கொடுத்திருக்கும் போலீஸ் பற்றிய கான்செப்டும் தான் காரணம்.

சேரன் மிக இயல்பாய் இந்த கேரக்டரில் பொருந்துகிறார். சோகமயமாய் இருக்கும் அவரது முகத்தின் தன்மைக்கு, தங்கையை தொலைத்த சோகமும், இறுக்கமான முகத்துடனான விசாரணை செய்யும் முறையும் மிக அருமையாய் பொருந்துகிறது. டிஎஸ்பி நரேன், அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், அஸிஸ்டெண்ட் கமிஷனர் திரிசங்கு, ஜவுளிக்கடை அதிபர், அடிக்கடி ஆங்கிலம் பேசும் கமிஷனர், காணாமல் போன ஒருவனது செம குண்டு அம்மா, ஜூடாஸ் ஜெயப்பிரகாஷ், மார்சுவரி ஆள், ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மனைவி லஷ்மி, அந்த பையன் என்று சரியான ஆட்களை பொறுக்கி போட்டிருக்கிறார் இயக்குனர். சேரனின் உதவியாளராய் வரும் தீப்திஷாவும் இன்னொரு இளைஞரை பற்றி பெரிதாய் சொல்ல முடியவில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிப்பு லஷ்மி நரசிம்மனுடயது. சும்மா மிரட்டியிருக்கிறார்.

இசை ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்படத்தில் வரும் பின்னணியிசை மிக அருமை. முக்கியமாய் பல நேரங்களில் வசனம் கொடுக்க வேண்டிய பல இம்பாக்டுகளை இசை கொடுக்கிறது. என்ன கொஞ்சம் வெஸ்டர்னாக இருப்பதால் சில இடங்களில் அன்னியப்படத்தான் செய்கிறது.

ஒளிப்பதிவாளர் சத்யா. பி.சியின் வாரிசு வரிசையில் வந்திருக்கும் இன்னொரு சிறந்த டெக்னீஷியன். பெரும்பாலான லாங் ஷாட்டுகள், நீண்ட ஷாட்டுகள், கால் ஷாட்டுகள், பரபரவென பத்து செகண்டுக்கு ஷாட் வைக்காமல் நின்று நிதானித்து, மெல்ல நம் ஆர்வத்தை அதிகமாக்கி ஸ்கீரினுக்குள் நுழையச் செய்யும் வேலையை கேமரா அருமையாய் செய்திருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியில் சேசிங் ஷாட் கம்போசிங்கும், அதன் எக்ஸிகூயூசனும் அருமை. இவருக்கு மிகப் பெரிய பலம் எடிட்டர் கெகின்.இயக்குனர் மிஷ்கின் சீனுக்கு சீன் அவரது குரு டக்கேஷின் பாதிப்பை வெளிப்படுத்துகிறார். முக்கியமாய் அந்த அடர்மழை ஓப்பனிங் டாப் ஆங்கிள் ஷாட் சின், நீண்ட மெளனமான காட்சிகள், குறைவான வசனங்கள், ஆனால் ஷார்ப்பான வசனங்கள். முக்கியமாய் பாரன்சிக் டாக்டர் ஜேகேவை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கோட் களோடு பேசுவது. வித்யாசமான லோ ஆங்கிள் ஷாட்டுகள், மெல்ல,மெல்ல கதையை அன்போல்ட் செய்யும் முறை என்று மிரட்டுகிறார். மிகச் சிறிய விஷயங்களைக்கூட விடாமல் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஒரு ஆபீஸரின் விசாரணையை அதன் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான். தமிழ் சினிமாவில் இது வரை சவக்கிடங்கு காட்சிகளை இவ்வளவு நுணுக்கமாய் காட்டியிருக்கிறார்களா? என்பது சந்தேகம்தான். ஆனா ஊனா கான்ஸ்டபிள் கூட துப்பாக்கி வச்சிருக்கிறா மாதிரி பார்த்த நம் சினிமா வரலாற்றில், முதல் முறையாய் ஒரு ஆபீஸர் வெப்பன் வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு விஷயங்கள் செய்ய வேண்டும் என்பது போன்ற டீடெய்லாக காட்டியிருக்கிறார்கள். மூகத்தில் டாக்டர் கோட்டை போட்டு மூடி பிணங்களூடே படுத்து தூங்கிக் கொண்டிருகும் டாக்டர் ஜூடாஸின் அறிமுகக் காட்சி, இன்ஸ்பெக்டரும், சேரனும் கேஸ் பத்தி பேசிக் கொள்ளும் வசனங்கள், அதனூடே அவர் சொல்லும் ப்ளேஷ் பேக் காட்சி, டிஎஸ்பி தன் கோபத்தை, தன் மறுப்பை தெரிவிக்க சிகரெட் கேட்டு கத்தும் காட்சி, அதே ரியாக்‌ஷனை சேரனிடன் இன்ஸ்பெக்டர் காட்டும் காட்சி என்று மிரட்டலாய்த்தான் இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸில் அந்த களனை பயன் படுத்திக் கொண்ட முறையும், அத்துனை நடிகர்களை வைத்து கோரியோகிராப் செய்யப்பட்ட ஆக்‌ஷன் காட்சி, இண்டெர்வெல் ப்ளாக்கின் போது வரும் சண்டைக்காட்சி எல்லாம் மிஷ்கினின் முத்திரைகள்

மிக இயல்பான இன்வெஸ்டிகேஷனை காட்டியதற்காக பாராட்டினாலும், அதே இயல்பு தன்மையே படத்தின் விறுவிறுப்புக்கு கேடு விளைவிக்கிறது. முக்கியமாய் படத்தின் முதல் பகுதி சேரனின் விசாரணையை போலவே படு ஸ்லோ. இடைவேளைக்கு பிறகு கதையின் ஓட்டத்தை ஒரளவுக்கு சினிமா அறிவுள்ளவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள். சமீபத்தில் வந்த ஈசன் ப்டத்தின் கருவும் இப்படத்தின் கருவும் ஒரே விதமாய் வாடை வருவதை மறக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் சேரன் ஏன் அவரது அஸிஸ்டெண்டுகளை பற்றிய பைல்களை அவர்கள் கண் முன்னே குப்பை தொட்டியில் போட வேண்டும்? அவர் ஒன்று அவ்வளவு அரகண்டான ஆளாய் காட்டவில்லையே? அதே போல் கடைசியில் வரும் குத்து பாட்டு பெரியதாய் எதுவும் இம்பாக்டை கொடுக்கவில்லை. அங்கு நடக்கும் ஹைஃபை கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. அமீருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நல்ல இயக்குனர். தயவு செய்து இம்மாதிரியான வேடங்களில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். என்னைப் பொறுத்தவரை அந்த பாடல் படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் குறைக்கிறது என்றே தோன்றுகிறது. கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்குமோ? என்ற யோசனை வருவதை தடுக்க முடியவில்லை. ஆஹா நான் ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். நம்ம சாரு நடித்திருக்கிறார். ஒரு ஷாட் வந்தாலும் சும்மா நின்னு பாடறாரு.. சிலாகிக்க நிறைய விஷயங்கள் படத்தில் இருந்தாலும், சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால்.

thanz..cable sankar blogspot.com

Edited by வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.