Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத் தமிழில் சங்கத்தமிழ்

Featured Replies

...

... தனித்துவம் வாய்ந்த யாழ்ப்பாணத் தமிழிலே சங்கப் பாடல்களிற் பயின்று வந்த சொற்களும் சொற்றொடர்களும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உண்மையினை நிறுவுதற்குச் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகிய குறுந்தொகையிலிருந்து சான்று காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

1.தொடரியங்கள்

குறுந்தொகைப் பாடல்களிலே பல இடங்களில், இன்று யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே பயன்படுத்தப்படும் தொடரிய (வாக்கிய) அமைப்புகள் இடம்பெறுகின்றன.

1. “நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ?” (75 : 1)

2. “உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர்” (127 : 5-6)

3. “உது எம் ஊரே” (179 : 3)

4. “மழை இன்னும் பெய்யும்; முழங்கி மின்னும்” (216 : 6-7)

5. “கெட்ட இடத்து உவந்த உதவி...மறந்த மன்னன் போல”(225 : 3-4)

6. “நோய்க்கு மருந்து ஆகா” (263 : 3)

7. “படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ” (266 : 3)

8. “மெல்ல மெல்ல இல்லாகுதுமே” (290 : 6)

9. “தங்கினிர் ஆயின் தவறோ” (345 : 1)

10. “சொல்லவும் ஆகாது அஃகியோனே” (346: 2)

மேற்காட்டிய தொடரியங்களும் இலக்கிய நடையுடையன. ஆயினும் அவற்றுள் பெரும்பாலானவை அவ்வாறே யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே பயின்றுவருகின்றன.

* முதலாவது தொடரியம் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அப்படியே இடம்பெறுகிறது.

* இரண்டாவது, “நீ கண்டனியே கண்ட ஆக்களைக் கேட்டனியே?” என யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்றது.

* மூன்றாவது தொடரியம், “உது எங்கட ஊர்” என யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்றது. உது என்னும் அண்மைச் சுட்டுப்பெயர் தமிழ் இலக்கணங்கள் குறிப்பிடும் மூன்று சுட்டுகளுள் ஒன்றாகும். தொல்காப்பியர் குறிப்பிட்ட இச்சுட்டு தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கிலே முற்றாக வழக்கிழந்துவிட்டது. ஈழத்திலும் யாழ்ப்பாணம், மன்னார், வன்னி ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வட ஈழத்திலேயே இச்சுட்டு வழக்கிலுள்ளது. யாழ்ப்பாணத்தவர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் உது பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய குறுந்தொகைச் செய்யுள் தொடரியங்கள் எவ்வாறு யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்றன என்பதைப் பின்வரும் எடுத்துக்காட்டுகள் புலப்படுத்துகின்றன:

* “உள்ள ஆக்கள் எல்லாம் கள்ளரைப்போல இருக்கு”

* “(எங்கட வீட்டில) தங்கினீர் என்றால் தவறே?”

* “மெல்ல மெல்ல இல்லாமல் போகும்”

* “(தன்ர) சாப்பாட்டுக்கு மறந்திட்டாரோ?”

* “இது நோய்க்கு மருந்து ஆகாது”

* “நாங்கள் கெட்ட இடத்தில (நேரத்தில) செய்த உதவியை மறக்கக்கூடாது.”

* “சொல்லவும் முடியாமல் போயிட்டான்”

2. சொற்களும் சொற்றொடர்களும்

“வேற ஆரும் இல்ல அவன்தான் இதைச் செய்தவன்” என்னும் இயல்பான யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்ற தொடரிலே இடம்பெறும் “ஆரும் இல்ல” என்னும் தொடர் குறுந்தொகை 25 ஆம் செய்யுளில் இடம்பெறும் “யாரும் இல்லை” என்னும் தொடருடன் ஒத்துள்ளது. பின்வரும் அட்டவணையில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்ற தொடர்களும் அவை இடம்பெறும் குறுந்தொகைச் செய்யுளடிகளும் தரப்பட்டுள்ளன:

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் குறுந்தொகைச் செய்யுளடிகள்

1. இந்தச் சாப்பாடு எனக்கும் ஆகாது. 1. எனக்கும் ஆகாது. (27:3)

2. ஒரே அலமலக்காய் இருக்கு. 2 அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே (43:6)

3. மரம் பாறிப்போய்விட்டது 3. காலொடு பாறி (51:2)

4. அழுகல் தண்ணி 4. அழுகற் சில் நீர் (56:2)

5. இன்னாள் இது செய்தவள் 5. இன்னள் செய்தது இது (173: 5)

6. வேற ஊர் ஆக்கள் 6. வேறு ஊர் வேந்து (242:4-5)

7. கரும்புப் பாத்தி 7. கரும்பு நடு பாத்தி (262:7)

8. எங்களப்பற்றி உசாவிக்கொண்டு போகினம். 8. உசாவுநர்ப் பெறினே. (269:2)

9. பனங் கருக்கு 9. கருக்கு (281:1)

10. சோத்துக்கு சம்பல் பிசைந்தாள். 10. குழை பிசைந்தனையேம். (289:3)

11. மம்மர் (இருள்கின்ற) நேரம் 11. வானமும் மம்மர்த்து ஆகி. (310:2-3)

12. பூ எல்லாம் உதிர்ந்து போச்சு 12. மலர் உதிர்த்து (312:5)

13. குமரி வாழை 13. குமரி வாகை (347:2)

14. நீ அதுக்கு உடம்படுவியோ? 14. நீ உடம்படுதலின் (383:1)

சங்கப்பாடல்களில் பயன்பட்ட பல சொற்கள் எவ்வித மாற்றமும் இன்றி யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே இடம்பெறுகின்றன. அவற்றுள் சில வகைமாதிரிக்காகப் பின்வரும் அட்டவணையில் நிரைப்படுத்தப்பட்டுள்ளன:

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் குறுந்தொகைச் செய்யுளடிகள்

கோலி (பனை ஓலையால் பிளா கோலுதல்) உட்கைச் சிறுகுடை கோலி (60:3)

பெண்டிலை ஊரன் பெண்டினை ஆயின் (91: 3)

தப்பல் (இளையது) ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற (121 :1)

மாடு குழறிக்கொண்டு கிடக்கு குன்றக் கூகை குழறினும் (153 :1)

நுங்கு நுங்கு (293:3)

பூ கொய்துகொண்டு வா கொய்யும் (311 :6)

தங்கையார் தங்கை (335 :6)

அ. சண்முகதாஸ் பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகம் ,இலங்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.