Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் கடத்தல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் கடத்தல்களும்

18 பெப்ரவரி 2011

ஹெந்தவித்தாரணவும் வெளிவராத தகவல்களும் - விசேட தமிழாக்கம் GTN

சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் கடத்தல்களும்

இராணுவப் புலனாய்வுப்பரிவினரால் சித்திரவதைக்குள்ளான இரண்டு சாட்சிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் எச்.கே.ஜி. ஹெந்தவிதாரண இலங்கையில் நடைபெறும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கின்றார், இருந்து வருகின்றார் என்பது வெளிப்படையாகிறது.

இராணுவத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ஹெந்தவித்தராண ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமான பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றுவதுடன் நாளாந்தம் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியும் வருகிறார்.

மேஜர் ஜெனரல் ஹெந்தவித்தாரணவின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் சட்டபூர்வமற்ற வன்முறைகளை எதிர்கொண்டு அதிலிருந்து தப்பி மேற்கு நாடுகளுக்கு வந்து சேர்ந்த மேற்படி இரண்டு தமிழர்களும் இதுகுறித்த பல முக்கியமான தகவல்களை நேரடியாகவே வழங்கியுள்ளார்கள்.

அவர்களுடைய கதைகள் அச்சமூட்டக்கூடிய சாட்சியங்களாக அமைகின்றன. அதோடு மட்டுமன்றி இலங்கை அரசின் திட்;டமிட்ட வன்முறைகள் அதுவும் எத்தகைய விசாரணைக்கும் உள்ளாகாதவாறு தடுக்கப்பட்ட சூழலில், அவை வெளிவர முடியாத சூழ்நிலைகளில் இடம் பெறுகிற்து என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

பாதிக்கப்பட்ட அவ்விருவரையும் நேர்கண்ட போது தமக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி அவர்கள் விலாவாரியாகப் பேச விரும்பிய போதும் அவை ஊடகங்களில் வெளிவரும் போது இலங்கையில் உள்ள தங்களது உறவினர்கள் ஆபத்துக்குள்ளாக நேரிடும் என அஞ்சினார்கள்.

எனவே இவர்கள் யார் என அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தொடர்பான தனிப்பட்ட சம்பவங்களையும், அவர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான அவர்கள் மீதான கொடூரமான நடவடிக்கைகளையும் சிறிலங்கா கார்டியன் அவர்களுடைய பாதுகாப்புக் கருதி வெளியிடவில்லை.

எவ்வாறாயினும் நாட்டை குற்றவியலுக்குள் ஆழ்த்திவிடும் அரசாங்கத்தின் ஆதரவுடனான மேஜர் ஜெனரல் ஹெந்தவித்தாரணவின் தலைமையிலான நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் எந்த சர்வதேச மனித உரிமை நிறுவனங்களோ அல்லது ஐநாவின் ஆணைக்குழுவோ பாதிக்கப்பட்டவர்களுடன் நேர்காணல் செய்ய விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா கார்டியன் செய்து கொடுக்கும்.

இவர்களுடைய சாட்சியங்களின்படி நாட்டின் மக்களுக்கெதிராக, அரச ஆதரவுடனான சட்டத்துக்குப் புறம்பான பல நடவடிக்கைகளை ஹெந்தவிதாரண வழிநடாத்தி வருகிறார்.

இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியை உருவாக்கியவர் இவர் தான். இது தான் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்களை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது. அத்தோடு இந்த ஆழஊடுருவும் படையணி பல அப்பாவிப் பொது மக்களின் படுகொலைக்கும் காரணமாக இருந்துள்ளது.

ஜனாதிபதிக்கு எதிரானவர்களையும் எதிரான சக்திகளையும் ஒழித்துக் கட்டுவதற்கென பல்வேறு தளத்திலும் அடையாளம் காணப்பட முடியாத இராணுவக்குழுக்களை தனது தலைமையில் உருவாக்கியவர் மேஜர் ஜெனரல் ஹெந்தவித்தாரண.

குற்றவியல் பண்புடைய இராணுவ அதிகாரிகளின் தலைமையில் இக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தலைமையினால் வழிநடத்தப்பட்டார்கள். இக்குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது இருப்பதை ஹெந்தவித்தாரண உறுதிப்படுத்தினார்.

வடக்கில் இராணுவத்தின் கீழ் முக்கியமான இரண்டு குழுக்கள் இவ்வாறு தொழிற்பட்டன. ஒன்று ரஞ்சித் குறூப் என அறியப்பட்டிருந்தது. இதற்குப் பொறுப்பாக ஒரு முஸ்லிம் இராணுவ அதிகாரி செயற்பட்ட போதும் சட்டச் சிக்கல்களிலிருந்து தப்பவதற்காகவும் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் ரஞ்சித் என்ற பெயரில் அவர் இயங்கினார்.

ரஞ்சித் குறூப் மிக மோசமான கொடூரமான ஒரு குழுவாக வடக்கில் அடையாளம் காணப்பட்டிருந்தது. தற்போது வன்னியில் இரகசியமாக இயங்கும் இந்தக் குழு அங்கு நடைபெறும் வெளிவராத பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டுள்ளது.

ரஞ்சித்தினாலும் ரஞ்சித் குழுவினராலும் அயன்பொக்சினாலும் சிகரெட்டாலும் உடம்பெங்கிலும் பிறப்புறுப்பிலும் சுடப்பட்டும், இரும்பக்கம்பிகளால் தாக்கப்பட்டும் சித்தரவதைக்கு உள்ளானவரின் படங்கள் சிறிலங்கா கார்டியனிடம் இருக்கின்றன. அந்த நபர் தற்போது எந்த வேலையும் செய்ய முடியாத உடல் ஊனமுற்ற ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று 2008இல் யாழ்ப்பாணம், கொக்குவிலில் இரண்டு குழந்தைகளின் தாயாரான அனிதா அன்னலிங்கம் ரஞ்சித் குழுவினரால் இரகசியமாகப் குழுவாகப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான முதற்தர ஆதாரங்களும் சிறிலங்காhர்டியனிடம் இருக்கின்றது.

ரஞ்சித்தினாலும் அவரது குழுவினராலும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட அனிதாவின் உடல் அடையாளம் காணமுடியாதவாறு அசிட் ஊற்றப்பட்டு சிதைக்கப்பட்டு, கொட்டடி ஒஸ்மானியா றோட்டில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றிலிருந்து பின்னர் மீட்கப்பட்டிருந்தது. இது குறித்து சிறிலங்கா கார்டியன் 26 ஒக்.2010இல் அறிக்கையிட்டிருந்தது.

இரகசியமாக இயங்கும் இரண்டாவது குழு ரஞ்சன் குறூப் என்பதாகும். இதுவும் ரஞ்சித் குழு போல வடக்கில் செயற்பட்டு வருகிறது. ரஞ்சனின் உண்மைப் பெயர் எதுவென்று தெரியவில்லை. இராணுவத்தின் மேல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் வராதபடிக்கு உண்மைப் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.

கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த இரண்டு குழுக்களும் தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகளுடன் தொடர்புபட்டனவாக உள்ளன.

தெற்கில் இடம் பெற்ற படுகொலைகள் பலவும் கூட மேஜர் ஜெனரல் ஹெந்தவித்தாரண தலைமையிலான இந்த இரகசியக் குழுக்களாலேயே நேரடியாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மீதான படுகொலை உட்பட பல ஊடகவியலாளர்கள் காணாமல் போனதற்கும் இந்த விசேட குழுக்களே காரணமாய் இருந்திருக்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய ஒருவருடன் இது தொடர்பாகப் பேசிய போது, இலங்கையின் இந்த சட்டத்துக்குப் புறம்பான படுகொலகைள், வெள்ளைவான் கடத்தல்கள், மற்றும் வன்முறைகள, போர்க்குற்றங்;கள் மேஜர் ஜெனரல் ஹெந்தவித்தாரணவுக்கு தொடர்பிருப்பதையும் அல்லது அவை குறித்து முழுமையாக அறிந்துள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

2008 பெப்.8 ஆம் திகதி எதிர்க்கட்சி அரசியல்வாதியான சிறிபதி சூரியாராய்ச்சி விபத்தில் கொல்லப்பட்டார். ஆனால் எங்களுடைய தகவல் வட்டாரங்களின்படி இது கூட மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண தலைமையிலான இந்த இரகசிய இராணுவக்குழுவின் நடவடிக்கையே எனத் தெரிய வருகிறது.

ஹெந்தவித்தாரணவின் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள அந்த தகவல் வட்டாரங்கள் ஹெந்தவித்தாரண மேற்கொண்ட நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் மேற்கொண்ட குற்றங்களைவிடவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகளை விடவும் அதிகமானவை எனக் கூறுகின்றன.

ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாக அவை சுயதணிக்கையைக் கடைப்பிடிக்கப்படுவதும், மறுபுறத்தில் ஹெந்தவிதாரணவன் நடவடிக்கைகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் இன்று வரை இவை தொடர்வதற்குக் காரணமாக இருக்கின்றன எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

விசேட தமிழாக்கம் ஜிரிஎன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.