Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களைத் தொலைப்பதிலேயே கவனம் செலுத்துகின்ற மகிந்த அரசாங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் விமர்சனம்:

சிங்களத்திடம் புலிகள் முன்வைத்த கோரிக்கை..?

இவ் விடயம் 02. 03. 2011, (புதன்),தமிழீழ நேரம் 11:15க்கு பதிவு செய்யப்பட்டது

தமிழர்களைத் தொலைப்பதிலேயே கவனம் செலுத்துகின்ற மகிந்த அரசாங்கம்

நெருக்கடியான தருணங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமது அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்கு அவர் இத்தகைய உத்தியைக் கையாண்டு வருகிறார்.

அனைத்துலக நெருக்கடிகளும் உள்ளூர் நெருக்கடிகளும் அதிகரித்துள்ள கட்டத்தில் கடந்த வாரம் ஊடக ஆசிரியர்களுடனான ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார் ஜனாதிபதி.

இதற்கு முன்னர் நடந்த கூட்டத்தில் அவர் தமிழ் ஊடகங்களை காட்டமாக விமர்சித்திருந்தார்.

இப்போது நடந்துள்ள சந்திப்பில் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளைக் குறைத்துக் கொண்டு அரசின் மீது அனுதாபம் தேடிக் கொள்ள முயன்றுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அவர் பல விடயங்கள் குறித்த தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

அரசியல்தீர்வு,போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள்,ஊடகங்கள், இந்திய மீனவர் விவகாரம், இரட்டைக்குடியுரிமை,எதிர்க்கட்சிகளின் போக்கு, விலைவாசி அதிகரிப்பு, அனைத்துலக நெருக்கடிகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு விடயத்தில் அவர் ஒரு அடி கூட முன்னோக்கிச் செல்லாத போதும் ஏதோ செய்து கொண்டிருப்பது போன்று காட்ட முனைந்திருக்கிறார்.

எல்லா தமிழ்க்கட்சிகளுடனும் பேசி அவர்களின் விருப்பங்களை அறிந்து அரசியல்தீர்வை உருவாக்கப் போவதாக அவர் கூறியுள்ளது இதில் முக்கியமானது. இதன் மூலம் இப்போது தன்னிடம் எந்தத் தீர்வு யோசனையும் கிடையாது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் உரையில் அரசியல்தீர்வு யோசனையை தெளிவுபடுத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதைக் கெடுத்து விட்டார்கள் என்றும் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியது நினைவிருக்கலாம். அதற்கு முன்னதாக அவர் தன்னிடம் அரசியல் தீர்வு யோசனை இருப்பதாகவும் அதை அனைத்துக் கட்சிகள், மக்களினதும் விருப்பை அறிந்து நிறைவேற்றப் போவதாகவும் கூறி வந்தார்.

ஆனால் இப்போது அவர் தமிழ்க் கட்சிகளின் விருப்பங்கள் பற்றிக் கூறியுள்ளார்.

ஆனால் அவர்களும் புலிகள் கேட்டதைக் கேட்டால் நிச்சயம் கிடைக்காது என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் கேட்டது எது என்பதை அவர் கூறவில்லை.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று கேட்டதாக அவர் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

புலிகள் ஒருபோதும் தமிழீழத்தை முன்வைத்து அரசுடன் பேச்சுக்களை நடத்தவில்லை.

ஏனென்றால் அது பேச்சுக்களின் மூலம் சாத்தியப்படப் போதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதைவிட அத்தகைய கோரிக்கையை முன்வைத்து புலிகளுடன் பேச எந்த அரசாங்கம் தான் இணங்கியது?

அப்படியான நிலைப்பாட்டில் எந்தவொரு பேச்சுக்களுமே நடக்கவில்லை.

எனவே புலிகள் கேட்டது கிடைக்காது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியது தனித் தமிழீழம் அல்ல என்பது வெளிப்படை.

அப்படியானால் புலிகள் முன்வைத்த கோரிக்கை எது?

பிற்காலத்தில் புலிகள் கூட்டாட்சி முறையை முன்வைத்துப் பேச முன்வந்தார்கள்.

ஆனால் அந்தப் பேச்சுக்கள் முளையிலேயே கருகிப்போனது.

இப்போதும் ஜனாதிபதி அதையே தான் சொல்கிறாரா என்பது தெரியவில்லை.

புலிகள் கேட்ட கூட்டாட்சிக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வலியுறுத்தினால் அவர் வழங்கப் போகும் தீர்வுத்திட்டம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையாவது கூறியிருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு தமிழ்க்கட்சிகளுடன் பேசித் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது காலம் கடத்தும் ஏற்பாடாகத் தான் தெரிகிறது.

தமிழ்க்கட்சிகளிடையே மோதலைத் தூண்டி அரசியல் தீர்வை பின்னகர்த்துவதற்கான எத்தனமாகவே படுகிறது.

தமிழர் பிரச்சினைக்கும் அரசியல்தீர்வு ஒன்றைக் காணும் எண்ணம் இருந்தால் அதற்குச் சரியான அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கிறதா என்பதே சந்தேகமாகத் தான் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்கனவே இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் நடந்து விட்டன. இன்னொரு சுற்றுப் பேச்சுக்கள் அடுத்த முதலாம் திகதி நடக்கப் போகிறது. என்றிருந்த நிலையில் அப்பேச்சுவார்த்தையை பிற்போட்டுள்ளது

இதையே அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. இப்படியே மாதம் ஒரு கூட்டத்தை நடத்தி எப்போது இறுதி இலக்கை அடைவதென்று தெரியவில்லை.

வெறும் பேச்சுக்கள் தீர்வுக்கு உதவப் போவதில்லை என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் அந்த வட்டத்தைப் போட்டுக் கொடுத்து விட்டு அதற்குள் சுற்றிக் கொள்ளுமாறு இருதரப்பையும் விட்டுள்ளார்.

இந்த ஒளித்துப் பிடிக்கும் விளையாட்டு இருதரப்புக்கும் புளித்துப் போகும் வரை தொடரும். பின்னர் பேச்சுக்கள் தோல்வி என்று செய்திகள் வரும். பிறகு மீண்டும் ஆரம்பித்த இடத்தில் இருந்தே தொடங்கும். இப்படித் தான் கடந்த காலங்களில் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் நடந்தன.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இப்போது அரசியல்தீர்வு பற்றிப் பேசினாலும் அதைவிட முக்கியமான பிரச்சினைகள் அதற்கு வரத் தொடங்கி விட்டன. அனைத்துலக நெருக்கடிகள் வலுவடைகின்றன. விலைவாசி உயர்வுப் பிரச்சினையைச் சமாளிப்பதும் நெருக்கடியாகி விட்டது.

இவற்றை சமாளிப்பது பற்றியே அரசாங்கம் அதிகம் கவலைப்படுகிறது.

இதற்கிடையில் எதிர்க்கட்சியான ஐதேக இக்கட்டான தருணத்தில் அரசுடன் இணைந்து செயற்படாமல் முதுகில் குத்துவதாகவும் காட்டிக் கொடுப்பதாகவும் வேறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும் போது எதிர்க்கட்சியான ஐதேக அரசுடன் இணைந்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் ஐதேக நெருக்கடிக்குள் இருந்த போது அரசாங்கம் அதற்கு உதவியிருந்தால் இப்படி எதிர்பார்க்கலாம்.

ஐதேக நெருக்கடிக்குள் சிக்கிய போது அதிலிருந்து அந்தக் கட்சியினரை பிரித்து எடுத்து அரசதரப்புக்குக் கொண்டு வருவதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. இதன் காரணமாகவே அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது கட்சியினரை அனுப்ப ஐதேக போன்ற கட்சிகள் பயப்படுகின்றன.

இதுதான் உண்மைநிலை. இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புரிந்து கொள்ளாமல் இருக்கமாட்டார். இந்தநிலையில் தான் அவர் ஊடகங்களாவது தமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது போல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெருக்கடிகளுக்கு மத்தியில் இருக்கும் போது,ஊடகங்களும் தன் மீதான பிரசாரங்களைத் தீவிரப்படுத்தி விடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். அதன் காரணமாகவே அவர் ஊடகங்களின் ஆசிரியர்களை சந்திப்புக்கு மீளவும் அழைத்துள்ளார்.

நெருக்கடிகள் பலவற்றைச் சந்திக்கின்ற நிலையில் உள்நாட்டுக்குள் நண்பர்களைத் தொலைப்பதிலேயே அரசாங்கம் ஈடுபடுகிறது.

குறிப்பாக தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து நண்பர்களாக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

தமிழர்களை நண்பர்களாக்கி நாட்டில் நல்லிணக்க சூழலை உருவாக்கினாலே அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். இப்போதும் புலம்பெயர் சமூகத்தை வசப்படுத்தலாம் என்று கூறிக் கொண்டிருந்தால் மட்டும் அது சாத்தியமாகாது. அரசியல் தீர்வு தீர்வு பற்றிப் பேசுகிறோம் என்று கூறிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. இப்படிக் கூறிக் கொண்டிருப்பது தமிழர்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்கும் வழியும் அல்ல. அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கும் காரணம் புலம்பெயர் தமிழர்கள் தான்.

எந்த நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்குத் தொடுத்தாலும் அச்சப்படப் போவதில்லை என்று ஆணித்தனமாக ஜனாதிபதி கூறினாலும் உண்மை அதுவல்ல. அவர் எங்கு முட்டிக் கொள்ள வேண்டும் எங்கே மோதிக் கொள்ளக் கூடாது என்பதை தெரிவு செய்வதில் இன்னமும் தவறே இழைக்கிறார்.

அனைத்துலக நீதிமன்றங்களில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்ற நிலையில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வில் கவனம் செலுத்தியிருக்கலாம். அது வெளிநாடுகளின் வாயையும் மூடிவிடும். அதையெல்லாம் செய்யாமல் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை எந்த வகையிலும் ஜனாதிபதியால் குறைக்க முடியாது. அந்த உண்மையை அவர் போகப் போகப் புரிந்து கொள்வார்.

- கட்டுரையாளர் ஹரிகரன் இன்போதமிழ் குழுமம்

http://www.nerudal.com/nerudal.26526.html

நன்றி - நெருடல் இணையம்

ஒரு முட்டாளால் பலரை முட்டாள் ஆக்க முடியுமா? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.