Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலித கோகன்னவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலித கோகன்னவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது -

12 மார்ச் 2011

இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களில் வகித்த பாத்திரத்திற்காக இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றுள்ள பாலித கோகன்னவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாலித கோகன்னவை ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது அவர் இது குறித்து முகம் கொடுத்துப் பேசுவதற்கு மறுத்து விட்டார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்னதாக பாலித கோகன்ன அவுஸ்ரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார் என்பதனாலும், தற்போது அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதனால் அது தொடர்பிலும், ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமக்கு ஆலோசனை வழங்க அமைத்துள்ள நிபுணர் குழுவின் செயற்பாடுகள் - அது இன்னமும் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - தொடர்பாகவும் இன்னர் சிற்றி பிரஸ் அவுஸ்ரேலியப் பிரதமரான ஜுலியா கிளாட்டிடம் மார்ச் 9ஆம் திகதி கருத்துக் கேட்டிருந்தது.

'இந்த வழக்குத் தொடர்பான முழுமையான விபரங்கள் எதுவும் தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது எனப் பதிலளித்த அவர், அதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை நாம் ஆதரிப்பதோடு, முறையான சட்ட நடவடிக்கைகளையும் சட்ட நடைமுறைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்றும்; தெரிவித்தார். தற்போதைய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடாமல் இருப்பது தான் நல்லது' என்றும் அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிளார்ட் தெரிவித்தார்.

பிரதமர் ஜுலியா கிளார்ட்டுடன் பயணம் செய்யும் ஊடகவியலாளர் சிலர் இதுவிடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், 'பிரதமர் தந்திரமான பதில் ஒன்றைக் கூறித் தப்பிவிட்டார், இது ஐநா தெரிவித்த பதிலை விட மோசமானது எனத் தெரிவித்தனர்.

முன்னதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பாலித கோகன்னவுக்கு எதிரான வழக்கினைப் பதிவு செய்திருக்கிறது என்பதனை பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் முற்றாக மறுத்திருந்தார். அத்தோடு, வெள்ளைக்கொடி விவகாரம் எனப்படும் இந்தச் சம்பவத்தில் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் வகித்த பங்கு என்ன என்பது தொடர்பாகவும் சர்வதேசக்; குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கினது மேற்படி கூற்றுத் தொடர்பாக விளக்குவதற்கு பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நேர்ஸ்கி மறுத்து விட்டார். அத்தோடு

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் குழு தொடர்பிலான கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டார். நிபுணர் குழு தான் இவை தொடர்பில் பதிலளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நிபுணர்கள் குழுவிற்கு பேச்சாளர் எவரும் இல்லாத நிலையில் அவர்களது அஞ்சல் பெட்டிகள் கூட பாதிப்புக்குள்ளானவர்கள் வழங்கிய முறைப்பாடுகளால் நிறைந்து வழிகிறது.

அடிக்குறிப்பு : 'போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைவதற்கான முயற்சியில் முக்கிய பங்கு வகித்தவரும், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையினைப் பெற்றவரும், அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சினது முன்னாள் அலுவலருமான கலாநிதி பாலித கோகன்னவிற்கு எதிராக சுதந்திரமான விசாரணையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். மே 18 2009 அன்று வெள்ளைக் கொடிகளைக் கையில் ஏந்தியவாறு வந்த அப்பாவித் தமிழர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்' என அவுஸ்ரேலியாவின் தொழில் கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மோர்பி கூறியிருக்கிறார்.

gtn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலித கோகணவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டில்...

14 மார்ச் 2011

பாலித கோகணவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டில் விஜய் நம்பியார் குறித்தும் கூறப்பட்டுள்ளது – தமிழில் -

இலங்கை தொடர்பில் பாலித கோகணவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தலைமைச் செயலாளராக விளங்கும் விஜய் நம்பியார் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

'விஜய் நம்பியார் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஒரு மத்தியஸ்தரா அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமூகம் ஒன்றின் குற்றத்திற்கு உடந்தையானவரா என்ற அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டு மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த கீழ் வரும் பந்தியை இன்னர் சிற்றி பிரஸ் பெப்ரவரி 21ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

'நியூயோர்க்கில் உள்ள ஐநாவின் 24 மணி நேர தகவல் வழங்கும் நிலையத்தின் ஊடாக நம்பியார் பதிலளித்துள்ளார். அதாவது, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வெள்ளைக் கொடியுடன் வந்து இலங்கை இராணுவத்திடம் சரணடைவார்களாயின் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கப்படுவதோடு, அவர்கள் சாதாரண போர்க் கைதிகள் போன்றே நடத்தப்படுவார்கள் என மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பாலித கோகண ஆகிய மூவரும், தமக்கு (நம்பியாருக்கு) உறுதியளித்துள்ளார்கள் என நம்பியார் கொல்வினுக்குப் பதிலளித்துள்ளார்.'

சில நாட்களின் பின்னர், பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் செய்தியாளர் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் 'இன்னர் சிற்றி பிரஸின் செய்தி சரியானது அல்ல, அவ்வாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எவ்வாறான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு பான் கீ மூனின் தலைமைப் பேச்சாளர் மார்ட்டின் நேர்ஸ்கியிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. எனினும் நேர்ஸ்கி பதிலளிக்க மறுத்து விட்டார். அத்தோடு அதனை ஹக் வேறொரு செய்தியாளருக்கு அனுப்பியிருந்தார். இன்னர் சிற்றி பிரஸ}க்கல்ல என்றும நேர்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால் அது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பதிலாகும். இது வரை நம்பியார் உட்பட எவரும் இதற்குப் பதில் சொல்லவில்லை.

சில வாரங்களின் பின் முதல் தடவையாக மார்ச் 11ஆம் திகதி ஐநாவின் மதியவேளை செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை நேர்ஸ்கி அல்லாமல் ஹக் எடுத்துக் கொண்டார். லிபியாவுக்கான பான் கீ மூனின் தூதுக்குழு விவகாரம், சூடான் தொடர்பான ஐநாவின் நடவடிக்கை என்பவற்றோடு ஹக்கிடம் அவருடைய அறிக்கை குறித்தும் விபரிக்குமாறு இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.

இக்கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிரித்துக் கொள்ள முயன்ற அவர், இது தனிப்பட்ட கேள்வியென்றும், இதற்கு செய்தியாளர் சந்திப்பின் பின்னர் அறைக்கு வெளியே வைத்துப் பதிளிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் அறைக்கு வெளியே வைத்து இக்கேள்வியை மீளவும் கேட்டது, ஹக் அதற்குப் பதிலளிக்காமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற குற்றச்சாட்டில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா என்றும், அது நம்பியாருக்கு எதிரானதா என்றும் வாதித்தார்.

ஆனால், ஹக் இது தொடர்பில் ஏற்கெனவே அனுப்பி வைத்திருந்த மின்னஞ்சலை பெப்.23ஆம் திகதி பிரசுரித்திருந்தது. அது இங்கே கீழே முழுமையாகப் பிரசுரிக்கப்படுகிறது. அவ்வறிக்கையில் நம்பியாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தியாவானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர் அல்ல, நம்பியார் இந்தியப் பிரஜையாக இருப்பதால் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்த முடியாது என்பதே அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயமாகும். (கோகணவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஏனெனில் அவர் இரட்டைக்குடியுரிரிமை பெற்றவர். அதன்படி அவர் அவுஸ்ரேலியக் குடிமகனும் கூட.

இன்னர் சிற்றி பிரஸின் அறிக்கை சரியானது அல்ல என்று ஹக் தெரிவித்திருந்தார். இன்னர் சிற்றி பிரஸ் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் மனுவிலிருந்தே மேற்படி விடயத்தை எடுத்தாண்டிருந்தது. அது பிழையான ஒரு தகவலல்ல.

ஹக்கிடமிருந்து மின்னஞ்சலைப் பெற்ற ஏனைய செய்தியாளர்கள், நம்பியாருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருப்பின் அதனைக் கவனத்திலெடுக்காதிருப்பதற்கும். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்குமான ஒன்றாக இது உள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிடுகிறது. அத்தோடு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 'வெள்ளைக் கொடிப்படுகொலைகள்' உட்பட்ட படுகொலைகளை மறைப்பதனையும் இது இலக்காகக் கொண்டிருக்கிறது.

பான் கீ மூனுக்கு நெருக்கமான பலரும் பான் ஏன் இலங்கைக்கு முன்னாள் இந்தியத் தூதுவர் நம்பியாரை அனுப்பினார் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்தியாவுக்கு இலங்கையின் மீதிருந்த ஆர்வம் அதிகரித்திருந்தமை, குறிப்பாக ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் அது அதிகரித்திருந்தமை, போர்க்குற்றச்சாட்டுக்கள் எழுவதற்குக் காரணமான ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளை நம்பியாரின் சகோதரர் சதீஸ் நம்பியார் வெளிப்படையாகவே பாராட்டி எழுதியிருந்தமை என்பனவும் நடைபெற்றிருக்கின்றன.

இதேவேளை இது நம்பியாரின் தவறல்ல. நம்பியாரை பான் கீ மூன் ஒரு போதும் இலங்கைக்கான தூதுவராக நியமித்திருக்கக் கூடாது என்கிறார் பான் கீ மூனின் உள்வட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.

ஐநாவில் இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கான வழங்கப்பட்ட நம்பியாரின் பாத்திரம் மிகத் தவறாக வழங்கப்பட்டிருக்கிறது. அது பான் கீ மூனின் நிர்வாகம் தொடர்பான அபிப்பிராயத்தைச் சீர் குலைத்துள்ளது. அத்தோடு பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கை தொடர்பாக எவரைச் சந்தித்தது என்பது தொடர்பாகவும் எதுவித பதிலும் இல்லை. ஐநா செயலாளராக பான் கீ மூன் பதவி வகித்த காலகட்டத்தில் இது மிகவும் கீழ் நிலைக்குச் சென்ற ஒரு காலகட்டமாகும். நன்றி: இன்னர் சிற்றி பிரஸ் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.