Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தமிழ்க்கடையொண்டின் மீதி சராமாரியான துப்பாக்கிப்பிரயோகம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, April 1st, 2011 | Posted by thaynilam

லண்டனில் 5வயது தமிழ்ச்சிறுமி மீது துப்பாக்கி சூடுநடத்திய நபர் கைது

தெற்கு லண்டன் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான பலசரக்கு கடை ஒன்றில் வைத்து துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேகநபர்களில் ஒருவரான 19வயது இளைஞர் ஒருவரை லண்டன் நகர காவல்துறையினர் வியாழன் பிற்பகல் கைது செய்துள்ளனர்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சியை காவல்துறையினர் பெற்று விசாரணை நடத்தியதையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 5வயது சிறுமியான துஷா கமலேஸ்வரன், கடைஉரிமையாளரான 35வயதுடைய ரொசான் செல்வகுமார் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமி துஷாவிற்கு நெஞ்சில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும் எனினும் இப்போது அச்சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிசிரிவி கமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சியில் கைது செய்யப்பட்ட நபரை தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இருப்பதாக விசாரணை நடத்தி வரும் குற்றத்தடுப்பு காவல்பிரிவின் பிரதம பரிசோதகர் ரொனி பௌக்ரொன் தெரிவித்தார்.

இத்துப்பாக்கி சூட்டை நடத்;திய நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 50ஆயிரம் பவுண் சன்மானமாக வழங்கப்படும் என ஏற்கனவே லண்டன் காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

இத்துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உள்ளதாகவும் லண்டன் குற்றத்தடுப்பு பிரதம பரிசோதகர் ரொனி பௌவ்டன் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுமி கடை உரிமையாளரின் உறவினர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டன் நகர குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணைகளிலிருந்து ஏனையவர்களையும் கைது செய்வதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஏனைய நால்வரும் தற்போது தலைமறைவாகி இருக்கின்றனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=4285

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துஷாவின் இடுப்பின் கீழ் பகுதி முற்றாக செயலிழப்பு!

வியாழன், 12 மே 2011 12:42

லண்டனில் இளவயது கும்பல் ஒன்றின் துப்பாக்கிச் சண்டையின் போது சூடுபட்டு காயமடைந்த ஐந்து வயதுச் சிறுமியான துஷா கமலேஸ்வரனால் இனிமேல் நடக்கவே முடியாது.

அவரது உடலில் இடுப்பின் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 29ம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் துஷாவின் மார்பில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்தது.

தென் லண்டனில் ஒரு பொருள் கொள்வனவு நிலையத்துக்கு துஷா தனது பெற்றோர் சகிதம் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் தேடி வந்து இந்தக் கடைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதே துஷா பாதிக்கப்பட்டார்.

துஷாவின் உடம்பில் பாய்ந்த குண்டு அவரின் முதுகெலும்புத் தொகுதியை வன்மையாகப் பாதித்துள்ளது.

ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர்.

ஆனால் தொடர்ந்து அவர் மயக்க நிலையில் இருந்தார், இரண்டு வாரங்களுக்கு முன் தான் அவருக்கு உணர்வு திரும்பியது.

அதன் பிறகு தான் அவரின் கால்கள் உணர்வற்று இருப்பதை டாக்டர்கள் உணர்ந்தனர்.

தொடர்ந்து வழங்கப்பட்ட சிகிச்சைகளின் பின்பே, அவரால் இனிமேல் நடக்க முடியாது என்றும், இடுப்புக்குக் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்றும் டாக்டர்கள் இப்போது தெரிவித்துள்ளனர்.

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்
:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.