Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செலக்டிவ் அம்னீசியாவும் ஈழத்தமிழர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செலக்டிவ் அம்னீசியாவும் ஈழத்தமிழர்களும்

ச.ச.முத்து

பாவம் சோனியாகாந்தி!, போனவாரம் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னர் அவருக்கு சிறீலங்காவில் ஈழத்தமிழினம் என்ற ஒன்றே இருப்பது தெரியாது!

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் உரையாற்ற இங்கிலாந்து வருவதற்கு

முதல் அவருக்கு இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு நடைபெறும் எந்தவொரு

அநீதியும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.பாவம் அவர்.1987முதல் 1989வரை

தமிழீழமண்ணில் கொடும் பாலியல் வல்லுறவுகளும்,கொலைகளும் நடாத்தி காட்டாட்சி

செய்த இந்தியஅமைதிப்படையைப்பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை

சரி அதைவிடுவோம்.அதற்குபிறகுதன்னும் இந்தியாவில் இருந்து கொண்டு

தமிழீழவிடுதலைப்போராட்டத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்காக தமிழ்நாட்டிலும்

தமிழ்ஈழத்திலும் அரங்கேற்றப்பட்ட எந்தஒரு சதியும் இவருக்கு தெரியாமல்தான் – ரோ செய்திருக்கும்.

எல்லாவற்றையும்விட,2006 நடுப்பகுதிக்கு பின்னர் மாவிலாற்றிலிருந்து தமிழர்நிலங்

களை அபகரித்தபடி தமிழ்மக்களை கொன்றொழித்து முன்னேறிவந்த சிங்களப்

படைகளுக்கு ஆயுதஉதவிகளும்,ஆளணி,நிபுணத்துவ உதவிகள் எதுவும் பாரதம்

செய்ததும் இவருக்கு தெரியாமல்தான் நடந்திருக்கும்.கிளிநொச்சியை வீழ்த்தும்

போரின்போது இந்தியஜவான்கள் சிங்களப்படைகளுடன் கூட்டாக செயற்பட்டதும்

அதிலிருந்து முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைவரை அவர்களே நின்று செயற்படுத்தியதும் பாரதஅன்னை சோனியாவுக்கு தெரியாமல்தான் நடந்தி

ருக்கும்.

அதற்கு பின்னர்கூட புதியபுதிய அணிகள்மூலம் தமிழீழதேசியத்தை

சிதைக்க இந்தியா எடுத்துவரும் எத்தனங்கள் எதுவும் அவருக்கு தெரியாததுதான்.சிங்களபடைகளின் தற்போதைய கெடுபிடிகளுக்கும்,ராணுவஅடக்

குமுறைக்கும் எதிராக மக்கள் திரண்டெழுந்துவிடாமல் பெட்டிக்குள் வைத்திருப்ப

தற்காக அடிக்கடி இந்தியவெளியுறவு செயலர் நிருபமாராவ் சென்றுவருவதும்

சோனியாவுக்கு தெரியாமல் வெளியுறவுஅமைச்சர் கிருஸ்ணா தனது எண்ணத்தின்

படியே செயற்படுத்தும் திட்டங்கள்தான்.பாவம் சோனியா,அவருக்கு ஏதேனும் ‘செலக்டிவ் அம்னீசியா’இதுநாள்வரைக்கும் இருந்திருக்கலாம்.அதாவது ஒரு குறிப்பிட்டவிடயங்கள்மட்டுமே மறந்துவிடுகின்ற வியாதிமாதிரி ஏதேனும் இருந்திரு

க்கலாம். இப்போது அவருக்கு சிவசங்கர் மேனனையும்,நாராயணணையும்கூட

மறந்திருக்கும்.

பாவம் சோனியா. பேரப்பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுக்கும் மந்திரி

பதவி யாசிப்பதற்காக டெல்லிக்கு ஓடியோடி வந்த கலைஞர் முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் விடுதலைப்போராட்டமும் சிதைக்கப்பட்ட

பொழுதும், தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோதும் இருந்த இடத்தில் இருந்தபடியே

ஏழுதி அனுப்பிய கடிதங்களைக்கூட சோனியா அம்மா மறந்திருப்பார்.

இப்படியாக எதுவுமே தெரியாத சோனியா அண்மையில் இங்கிலாந்து வந்தபோது

தான் அவருக்கு ஈழத்தமிழர்கள் என்றொரு இனம்இருப்பதும், அவர்களை மகிந்த என்றொரு கொடுங்கோலன் அழித்துவருவதும் தெரிந்திருக்கின்றது என்பதுபோல

அறிக்கைகளும்,பேட்டிகளும் அண்மைக்காலத்தில் முளைத்துள்ளன.

பலம் எதுவுமே இல்லாமல் வெற்று இராசதந்திரம் மட்டுமே செய்ய வெளிக்கிட்ட

ராசதந்திரப் பெருமான்கள் இதற்கும் ஏதேனும் இராசதந்திர நொக்கத்தையும்,

இதற்கு பின்னுக்கு யாருக்கும் தெரியாத (குறிப்பாக சாதரணமக்களுக்கு புரியாத

ஏதேனும் ஈழத்துவிடுதலை ரகசியம்)ஏதோ ஒரு பகடையாட்டம் இருப்பதுபோன்ற

வெற்று மௌனத்தையும், காரணங்களையும் கற்பிக்கலாம்.

இதற்குபின்னுக்கு இருக்கும் ஏதோ பெரிய நோக்கங்கள் எதுவுமே இருக்கமுடியாது.

எமது மக்கள்மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் முக்கிய

பங்குதாரர்கள் இந்தியஆளும் வர்க்கம்தான். பெயருக்கு இந்த இறுதிப்போரை

சிங்களம் நடாத்தினாலும் இதற்கு சகல திட்டமிடல்களையும், ஒத்துழைப்பையும்

வழங்கி நேரடியாக நின்றது பாரதம்தான். இதன் பாதிப்பு இன்று இல்லாவிட்டாலும்

என்றாவது ஒருநாள் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் தோன்றக்கூடும் என்று இந்தியமத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

அதனை தடுத்துநிறுத்துவதற்காகவும்,ஈழத்துமக்களே எங்களை புரிந்துகொண்டு

இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டுதமிழர்களுக்கு காட்டவேண்டிய தேவையும்

காங்கிரஸ்ஆட்சிக்கு தேவையாக இருக்கிறது.யுத்தம் மிகமோசமாக முள்ளிவாய்க்காலின் கரையெங்கும் நடந்து கொண்டிருந்த போதே இதற்கான வேலைகளை இந்திய வெளியுறவு அமைச்சும், இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான ரோவும் செயற்படுத்த தொடங்கிவிட்டிருந்தார்கள்.

தேசியத்தலைவர் ஆழமாக ராசதந்திரம் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்

டு 2009 மே 18க்கு பின்னர் புறப்பட்டிருக்கும் கனவான்வான்களில் சிலர் முள்ளிவாய்க்கால்ப் பொழுதுகளில் சிவசங்கர் மேனனுடனும், விஐய்நம்பியாருடனும்

கூட்டாக நின்று புகைப்படங்களுக்கு முகம்காட்டியதும் இதன் ஆரம்பம்தான்.

2009 மே யில் ஈழத்தமிழினம் பிய்த்து எறியப்பட்டு ஆறுமாதங்கள் முடிய முன்னரே

2009 இறுதியில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி சென்ற இன்னுமொரு இராசதந்திர

தமிழர் அங்கு இந்தியாவின் இளவரசர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வந்து

வந்திருந்தார்.

இராகுல்காந்தியின் உடம்பில்ஓடும் ரத்தத்துக்குகூட அந்த இங்கிலாந்துதமிழ் பிரமுகர் ‘அது உண்மையிலேயே ஐரோப்பியரத்தம்தான் என்றும் சான்றிதழ்கூட கொடுத்தும் இருந்தார். ஏனென்றால் இவர் சொன்ன ஈழத்தமிழம்மக்களின் அவலங்களை எல்லாம் ராகுல்காந்தி மிகவும் கவனத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். இன்று சோனியாவுக்கு இங்குசில தமிழர்கள் கொடுக்கும் அதே சான்றிதழான ‘எங்கடை பிரச்சனைகளை அவர் மிக அனுதாபத்துடனும்,மிக அவதானத்துடனும் கேட்டுத்தெரிந்து கொண்டிருந்தார் என்பதன் ஆரம்பம் அடிபணிவுஅரசியல்தான் இனிமேல் என்று ஒருசிலர் முடிவு எடுத்தபோதே முளைவிட்டுவிட்டது.

சோனியாகாந்தியும் கொஞ்சமும் குறைந்தவர் இல்லைதான்.அவரை ஒரு ஏதும் தெரியாத,எல்லாம் மறந்துபோன கஜனிபட சு10ர்யாபோல புலம்பெயர்தமிழ் மேத்தி

ரிகள் வர்ணிக்கிறார்கள்.அவரும் அதற்கு ஏற்றாற்போல,தனக்கு ஏதோ இவர்கள்

விளங்கப்படுத்துவதற்கு முன்னர் ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்கள் ஏதும்

புரிபட்டு இருக்கவில்லை என்பதபோல,இப்போதுதான் சிதம்பரசக்கரத்தின் முடிச்சுகள் அவிழ்ந்தது போலவும் தான் ஈழத்தமிழர்களின் பக்கத்திலேயே நிற்பேன்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

இதில் மிகவேடிக்கையான விடயம் என்ன வென்றால் சந்திப்பு நடந்ததாக இருதரப்பும் சொல்லும் 11நிமிடங்களுக்குள் நமது புலம்பெயர் ராசதந்திரிகள் தமது விளக்கங்களை சொன்னதும்,அந்த 11 நிமிடங்களுக்குள் சோனியா மிக இலகுவாக அவற்றை கிரகித்துக்கொண்டதும் ஆகும். தமிழர்களின் 60வருட விடுதலைப்போராட்டத்தை 11 நிமிடங்களுக்குள் சொல்லிப்புரியவைக்க இவர்கள் மிகவும் கஸ்டப்பட்டிருப்பார்கள்.

இந்த சந்திப்பு இரகசியமானது என்று நம்ம புத்திமான்களும், இந்த சந்திப்பின்

வுpடயங்கள் வெளியே தெரியப்படுத்த முடியாதது என்று நமது புலம்பெயர் டிப்லோமற்றிகுகளும் சொல்லிக்கொண்டும், பேட்டிகளில் முழங்கிக்கொண்டு இருக்கும்போதே இந்தியாவின் ஊடகங்களில் ஈழத்தமிழர்கள் சோனியாவை

ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் ஈழத்தமிழர்களின் மனங்களை சோனியா

வென்றுவிட்டார் என்றும் செய்திகள் முன்பக்கத்தில் வெளியிட்டபிறகும்கூட

இந்த சந்திப்பு சோனியாவுக்கு எந்தவித்தில் உதவுவதற்காக அமைக்கப்பட்டு

விட்டதை இவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

அண்மையில்கூட விக்கிலீக்ஸ் இன்னுமொரு உண்மையை வெளியிட்டு இருந்தது.சிங்களம் நடாத்திய கொடும்தாக்குதல்களை நிறுத்தும்படி இறுதிநேரத்தில் மேற்குநாடுகளும், லத்தீன்நாடுகளும் கொடுத்த ராசதந்திர நெருக்கடிகளை சாந்தப்படுத்தி, இறுதிவரை தாக்குதலை நடாத்த இந்தியவே உதவியது என்று

சுட்டிக்காட்டியுள்ளது. ஓன்றை இவர்கள் தெளிவாக புரிpந்துகொள்ளவேண்டும். தமிழீழவிடுதலைப்போராட்டத்தை சிதைப்பதற்கு 80களின் ஆரம்பத்தில் சந்திரசேகரன் என்ன செய்தாரோ, இப்போது லோக்கல் அதிகாரி ஜாபர்சேட் என்ன செய்துகொண்டு இருக்கிறாரோ அதனை எல்லாம் தீர்மானிக்கும் சக்திதான் சோனியாவும் அவரின் ஆளும்கட்சியும்.

இந்தியாவின் கைப்பொம்மை முதல்வர் வரதராசப்பெருமாளை ஒரிசாவில் தங்க

வைத்து இருந்ததும்,இப்போது பரந்தன்ராஜனை சாணைதீட்டுவதும் இதே சோனியாவின் அதிகாரவர்க்கம்தான். யுத்தத்தை நிறுத்தும் இறுதி ஆயுதமான ஐநா சபையின் பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் சிங்களத்துக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த தீர்மானத்தை இல்லாமல் செய்ததும் இதே சோனியாதான்.

அண்மையில் தென்சு10டான் சர்வசனவாக்கெடுப்பில் விடுதலைபெறுவத உறுதியான

போது தமிழீழத்தின் அச்சுவேலிப்பகுதியை சேர்ந்த ஒரு கவிஞர் உதயன் பத்திரி

கையில் எழுதியிருந்த கவிதையின் ஒரு வாசகத்தை இப்போது சோனியாவுக்கு

ஒன்றும்தெரியாத உத்தமர் என்று சான்றிதழ்கொடுக்கும் பெருமான்கள் திரும்பதிரும்ப வாசித்துபார்க்கட்டும்.

ஒற்றைத் தாலிக்காய்

ஒருலட்சம் தாலிகேட்ட

இத்தாலிக்காரி எவளும்

இருக்கவில்லையா

உனக்கிடைஞ்சலாய்..?

நன்றி : ஈழமுரசு

செலக்டிவ் அம்னீசியாவும் ஈழத்தமிழர்களும்

ச.ச.முத்து

பாவம் சோனியாகாந்தி!, போனவாரம் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னர் அவருக்கு சிறீலங்காவில் ஈழத்தமிழினம் என்ற ஒன்றே இருப்பது தெரியாது!

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் உரையாற்ற இங்கிலாந்து வருவதற்கு

முதல் அவருக்கு இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு நடைபெறும் எந்தவொரு

அநீதியும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.பாவம் அவர்.1987முதல் 1989வரை

தமிழீழமண்ணில் கொடும் பாலியல் வல்லுறவுகளும்,கொலைகளும் நடாத்தி காட்டாட்சி

செய்த இந்தியஅமைதிப்படையைப்பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை

சரி அதைவிடுவோம்.அதற்குபிறகுதன்னும் இந்தியாவில் இருந்து கொண்டு

தமிழீழவிடுதலைப்போராட்டத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்காக தமிழ்நாட்டிலும்

தமிழ்ஈழத்திலும் அரங்கேற்றப்பட்ட எந்தஒரு சதியும் இவருக்கு தெரியாமல்தான் – ரோ செய்திருக்கும்.

எல்லாவற்றையும்விட,2006 நடுப்பகுதிக்கு பின்னர் மாவிலாற்றிலிருந்து தமிழர்நிலங்

களை அபகரித்தபடி தமிழ்மக்களை கொன்றொழித்து முன்னேறிவந்த சிங்களப்

படைகளுக்கு ஆயுதஉதவிகளும்,ஆளணி,நிபுணத்துவ உதவிகள் எதுவும் பாரதம்

செய்ததும் இவருக்கு தெரியாமல்தான் நடந்திருக்கும்.கிளிநொச்சியை வீழ்த்தும்

போரின்போது இந்தியஜவான்கள் சிங்களப்படைகளுடன் கூட்டாக செயற்பட்டதும்

அதிலிருந்து முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைவரை அவர்களே நின்று செயற்படுத்தியதும் பாரதஅன்னை சோனியாவுக்கு தெரியாமல்தான் நடந்தி

ருக்கும்.

அதற்கு பின்னர்கூட புதியபுதிய அணிகள்மூலம் தமிழீழதேசியத்தை

சிதைக்க இந்தியா எடுத்துவரும் எத்தனங்கள் எதுவும் அவருக்கு தெரியாததுதான்.சிங்களபடைகளின் தற்போதைய கெடுபிடிகளுக்கும்,ராணுவஅடக்

குமுறைக்கும் எதிராக மக்கள் திரண்டெழுந்துவிடாமல் பெட்டிக்குள் வைத்திருப்ப

தற்காக அடிக்கடி இந்தியவெளியுறவு செயலர் நிருபமாராவ் சென்றுவருவதும்

சோனியாவுக்கு தெரியாமல் வெளியுறவுஅமைச்சர் கிருஸ்ணா தனது எண்ணத்தின்

படியே செயற்படுத்தும் திட்டங்கள்தான்.பாவம் சோனியா,அவருக்கு ஏதேனும் ‘செலக்டிவ் அம்னீசியா’இதுநாள்வரைக்கும் இருந்திருக்கலாம்.அதாவது ஒரு குறிப்பிட்டவிடயங்கள்மட்டுமே மறந்துவிடுகின்ற வியாதிமாதிரி ஏதேனும் இருந்திரு

க்கலாம். இப்போது அவருக்கு சிவசங்கர் மேனனையும்,நாராயணணையும்கூட

மறந்திருக்கும்.

பாவம் சோனியா. பேரப்பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுக்கும் மந்திரி

பதவி யாசிப்பதற்காக டெல்லிக்கு ஓடியோடி வந்த கலைஞர் முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் விடுதலைப்போராட்டமும் சிதைக்கப்பட்ட

பொழுதும், தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோதும் இருந்த இடத்தில் இருந்தபடியே

ஏழுதி அனுப்பிய கடிதங்களைக்கூட சோனியா அம்மா மறந்திருப்பார்.

இப்படியாக எதுவுமே தெரியாத சோனியா அண்மையில் இங்கிலாந்து வந்தபோது

தான் அவருக்கு ஈழத்தமிழர்கள் என்றொரு இனம்இருப்பதும், அவர்களை மகிந்த என்றொரு கொடுங்கோலன் அழித்துவருவதும் தெரிந்திருக்கின்றது என்பதுபோல

அறிக்கைகளும்,பேட்டிகளும் அண்மைக்காலத்தில் முளைத்துள்ளன.

பலம் எதுவுமே இல்லாமல் வெற்று இராசதந்திரம் மட்டுமே செய்ய வெளிக்கிட்ட

ராசதந்திரப் பெருமான்கள் இதற்கும் ஏதேனும் இராசதந்திர நொக்கத்தையும்,

இதற்கு பின்னுக்கு யாருக்கும் தெரியாத (குறிப்பாக சாதரணமக்களுக்கு புரியாத

ஏதேனும் ஈழத்துவிடுதலை ரகசியம்)ஏதோ ஒரு பகடையாட்டம் இருப்பதுபோன்ற

வெற்று மௌனத்தையும், காரணங்களையும் கற்பிக்கலாம்.

இதற்குபின்னுக்கு இருக்கும் ஏதோ பெரிய நோக்கங்கள் எதுவுமே இருக்கமுடியாது.

எமது மக்கள்மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் முக்கிய

பங்குதாரர்கள் இந்தியஆளும் வர்க்கம்தான். பெயருக்கு இந்த இறுதிப்போரை

சிங்களம் நடாத்தினாலும் இதற்கு சகல திட்டமிடல்களையும், ஒத்துழைப்பையும்

வழங்கி நேரடியாக நின்றது பாரதம்தான். இதன் பாதிப்பு இன்று இல்லாவிட்டாலும்

என்றாவது ஒருநாள் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் தோன்றக்கூடும் என்று இந்தியமத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

அதனை தடுத்துநிறுத்துவதற்காகவும்,ஈழத்துமக்களே எங்களை புரிந்துகொண்டு

இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டுதமிழர்களுக்கு காட்டவேண்டிய தேவையும்

காங்கிரஸ்ஆட்சிக்கு தேவையாக இருக்கிறது.யுத்தம் மிகமோசமாக முள்ளிவாய்க்காலின் கரையெங்கும் நடந்து கொண்டிருந்த போதே இதற்கான வேலைகளை இந்திய வெளியுறவு அமைச்சும், இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான ரோவும் செயற்படுத்த தொடங்கிவிட்டிருந்தார்கள்.

தேசியத்தலைவர் ஆழமாக ராசதந்திரம் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்

டு 2009 மே 18க்கு பின்னர் புறப்பட்டிருக்கும் கனவான்வான்களில் சிலர் முள்ளிவாய்க்கால்ப் பொழுதுகளில் சிவசங்கர் மேனனுடனும், விஐய்நம்பியாருடனும்

கூட்டாக நின்று புகைப்படங்களுக்கு முகம்காட்டியதும் இதன் ஆரம்பம்தான்.

2009 மே யில் ஈழத்தமிழினம் பிய்த்து எறியப்பட்டு ஆறுமாதங்கள் முடிய முன்னரே

2009 இறுதியில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி சென்ற இன்னுமொரு இராசதந்திர

தமிழர் அங்கு இந்தியாவின் இளவரசர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வந்து

வந்திருந்தார்.

இராகுல்காந்தியின் உடம்பில்ஓடும் ரத்தத்துக்குகூட அந்த இங்கிலாந்துதமிழ் பிரமுகர் ‘அது உண்மையிலேயே ஐரோப்பியரத்தம்தான் என்றும் சான்றிதழ்கூட கொடுத்தும் இருந்தார். ஏனென்றால் இவர் சொன்ன ஈழத்தமிழம்மக்களின் அவலங்களை எல்லாம் ராகுல்காந்தி மிகவும் கவனத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். இன்று சோனியாவுக்கு இங்குசில தமிழர்கள் கொடுக்கும் அதே சான்றிதழான ‘எங்கடை பிரச்சனைகளை அவர் மிக அனுதாபத்துடனும்,மிக அவதானத்துடனும் கேட்டுத்தெரிந்து கொண்டிருந்தார் என்பதன் ஆரம்பம் அடிபணிவுஅரசியல்தான் இனிமேல் என்று ஒருசிலர் முடிவு எடுத்தபோதே முளைவிட்டுவிட்டது.

சோனியாகாந்தியும் கொஞ்சமும் குறைந்தவர் இல்லைதான்.அவரை ஒரு ஏதும் தெரியாத,எல்லாம் மறந்துபோன கஜனிபட சு10ர்யாபோல புலம்பெயர்தமிழ் மேத்தி

ரிகள் வர்ணிக்கிறார்கள்.அவரும் அதற்கு ஏற்றாற்போல,தனக்கு ஏதோ இவர்கள்

விளங்கப்படுத்துவதற்கு முன்னர் ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்கள் ஏதும்

புரிபட்டு இருக்கவில்லை என்பதபோல,இப்போதுதான் சிதம்பரசக்கரத்தின் முடிச்சுகள் அவிழ்ந்தது போலவும் தான் ஈழத்தமிழர்களின் பக்கத்திலேயே நிற்பேன்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

இதில் மிகவேடிக்கையான விடயம் என்ன வென்றால் சந்திப்பு நடந்ததாக இருதரப்பும் சொல்லும் 11நிமிடங்களுக்குள் நமது புலம்பெயர் ராசதந்திரிகள் தமது விளக்கங்களை சொன்னதும்,அந்த 11 நிமிடங்களுக்குள் சோனியா மிக இலகுவாக அவற்றை கிரகித்துக்கொண்டதும் ஆகும். தமிழர்களின் 60வருட விடுதலைப்போராட்டத்தை 11 நிமிடங்களுக்குள் சொல்லிப்புரியவைக்க இவர்கள் மிகவும் கஸ்டப்பட்டிருப்பார்கள்.

இந்த சந்திப்பு இரகசியமானது என்று நம்ம புத்திமான்களும், இந்த சந்திப்பின்

வுpடயங்கள் வெளியே தெரியப்படுத்த முடியாதது என்று நமது புலம்பெயர் டிப்லோமற்றிகுகளும் சொல்லிக்கொண்டும், பேட்டிகளில் முழங்கிக்கொண்டு இருக்கும்போதே இந்தியாவின் ஊடகங்களில் ஈழத்தமிழர்கள் சோனியாவை

ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் ஈழத்தமிழர்களின் மனங்களை சோனியா

வென்றுவிட்டார் என்றும் செய்திகள் முன்பக்கத்தில் வெளியிட்டபிறகும்கூட

இந்த சந்திப்பு சோனியாவுக்கு எந்தவித்தில் உதவுவதற்காக அமைக்கப்பட்டு

விட்டதை இவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

அண்மையில்கூட விக்கிலீக்ஸ் இன்னுமொரு உண்மையை வெளியிட்டு இருந்தது.சிங்களம் நடாத்திய கொடும்தாக்குதல்களை நிறுத்தும்படி இறுதிநேரத்தில் மேற்குநாடுகளும், லத்தீன்நாடுகளும் கொடுத்த ராசதந்திர நெருக்கடிகளை சாந்தப்படுத்தி, இறுதிவரை தாக்குதலை நடாத்த இந்தியவே உதவியது என்று

சுட்டிக்காட்டியுள்ளது. ஓன்றை இவர்கள் தெளிவாக புரிpந்துகொள்ளவேண்டும். தமிழீழவிடுதலைப்போராட்டத்தை சிதைப்பதற்கு 80களின் ஆரம்பத்தில் சந்திரசேகரன் என்ன செய்தாரோ, இப்போது லோக்கல் அதிகாரி ஜாபர்சேட் என்ன செய்துகொண்டு இருக்கிறாரோ அதனை எல்லாம் தீர்மானிக்கும் சக்திதான் சோனியாவும் அவரின் ஆளும்கட்சியும்.

இந்தியாவின் கைப்பொம்மை முதல்வர் வரதராசப்பெருமாளை ஒரிசாவில் தங்க

வைத்து இருந்ததும்,இப்போது பரந்தன்ராஜனை சாணைதீட்டுவதும் இதே சோனியாவின் அதிகாரவர்க்கம்தான். யுத்தத்தை நிறுத்தும் இறுதி ஆயுதமான ஐநா சபையின் பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் சிங்களத்துக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த தீர்மானத்தை இல்லாமல் செய்ததும் இதே சோனியாதான்.

அண்மையில் தென்சு10டான் சர்வசனவாக்கெடுப்பில் விடுதலைபெறுவத உறுதியான

போது தமிழீழத்தின் அச்சுவேலிப்பகுதியை சேர்ந்த ஒரு கவிஞர் உதயன் பத்திரி

கையில் எழுதியிருந்த கவிதையின் ஒரு வாசகத்தை இப்போது சோனியாவுக்கு

ஒன்றும்தெரியாத உத்தமர் என்று சான்றிதழ்கொடுக்கும் பெருமான்கள் திரும்பதிரும்ப வாசித்துபார்க்கட்டும்.

ஒற்றைத் தாலிக்காய்

ஒருலட்சம் தாலிகேட்ட

இத்தாலிக்காரி எவளும்

இருக்கவில்லையா

உனக்கிடைஞ்சலாய்..?

நன்றி : ஈழமுரசு

அடாடா... சோனியாவுக்குச் சான்றிதழ் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுபவர்களும், கட்டுரையை வெளியிட்டுன்ன ஈழமுரசும் சில நாட்களுக்கு முன்புவரை ஒரே அணியில் அல்லவா இருந்தார்கள்? என்ன நடந்தது?

இதுதான் ஜனநாயகம் என்று சொல்லாம் என்றால், மற்றொரு சிக்கல். வழக்கமாக ஒரே அணிக்குள் உள்ள முரண்பாடுகள் பத்திரிகை வாயிலாகச் சந்திக்கு வருவதில்லையே.

ஒருவேளை இனி ஜனநாயக முறையில் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுக்க முடிவெடுத்துள்ளார்களோ! அப்படியானால் அது வரவேற்க்கப்பட வேண்டியதே. நல்ல ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள்மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் முக்கிய

பங்குதாரர்கள் இந்தியஆளும் வர்க்கம்தான். பெயருக்கு இந்த இறுதிப்போரை

சிங்களம் நடாத்தினாலும் இதற்கு சகல திட்டமிடல்களையும், ஒத்துழைப்பையும்

வழங்கி நேரடியாக நின்றது பாரதம்தான். இதன் பாதிப்பு இன்று இல்லாவிட்டாலும்

என்றாவது ஒருநாள் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் தோன்றக்கூடும் என்று இந்தியமத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

இது தான் உண்மை. இந்தியா தலையிடாமல் இருந்தால், எங்கள் பிரச்சினை ஏதோ ஒருவகையில் தீர்க்கப் பட்டிருக்கும்.

'உண்மை சுடும்' என்று சொல்வார்கள். இந்தியாவின் மனச்சாட்சி அதனைச் சுடுகின்றது.

'ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இந்தியா உள்ளது'.

இதில் பரிதாபம் என்னவென்றால்., எங்களர்வர்களே இந்தியாவுக்கு வெள்ளை வேட்டி கட்டும் பணியைச் செய்கின்றார்கள்.

திராவிட மன்னன் ராவணனை அழித்த ஆரிய ராமனையே திராவிடத் தெய்வமாக்கிய மூளையுள்ளது தான் இந்த இந்திய ஆளும் வர்க்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.