Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் 29 பேர் உறுப்புரிமைய இழந்துள்ளனர்! - தநாகஅ உள்விவகார அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் 29 பேர் உறுப்புரிமைய இழந்துள்ளனர்! - தநாகஅ உள்விவகார அமைச்சு

ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011 06:17

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்புறுமையை 29 பேர் இழந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சு ஏப்ரல் 2, 2011 என தேதியிடப்பட்டு வெளியிட்ட ஊடகக் குறிப்பில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சுக்கு அரசவைத் தலைவர் பொன் பாலராஜன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளதாக அறிவித்தனைத் தொடர்ந்து உள்விவகார அமைச்சு ஊடகங்களுக்கு இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஊடகங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையினை அப்படியே இங்கே தருகின்றோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் 29 பேர் உறுப்புரிமைய இழந்துள்ளனர்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளனர். அரசவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அறியத்தந்துள்ளதோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளக விவகார அமைச்சகத்திற்கும் அறியத் தந்துள்ளார்.

அரசவைத்தலைவர் அறிவித்தலின் பிரகாரம், கீழ்வரும் உறுப்பினர்கள் தங்களது உறுப்புரிமையை இழந்து விட்டார்கள் என்பதனை மக்களுக்குத் அறியத்தருகின்றோம்.

கனடா: திரு. பாலன் இரட்ணராஜா, திரு. ஈசன் தெய்வேந்திரன் குலசேகரம், திரு. மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன், திரு. சுரேஸானந்த் ரட்ணபாலன், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. வனிதா ராஜேந்திரம்.

பிரித்தானியா: திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன், திரு. கார்த்திகேசன் பரமசிவம், திரு. மகேஸ்வரன் சசிதர், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா

ஜெர்மனி: திருமதி. வித்தியா ஜெயசங்கர், திரு. சந்திரபாலா கணேசரட்ணம், திரு. முகுந்தன் இந்திரலிங்கம், திரு. நடராஜா திருச்செல்வம், திரு. இராசையா தனபாலசுந்தரம், திரு. ரேணுகா லோகேஸ்வரன், திரு. பரமு ஆனந்தசிங்கம்.

பிரான்சு: திரு. சரவணமுத்து சசிகுமார், திரு. சிவகுரு பாலச்சந்திரன், திரு. தர்மேந்திரன் கிரிசாந்

நோர்வே: திருமதி. ஜெயசிறி பாலசுப்பிரமணியம், திரு. சிவானந்தன் முரளி, திரு. சிவகணேசன் தில்லையம்பலம்,

டென்மார்க்: திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன், திரு. ரேமன் ராஜீவ், திருமதி. சுகேந்தினி நிர்மலநாதன்

அவுஸ்ரெலியா: திரு. சிறீபாலன் சேரன்

இத்தாலி: திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்

மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் எனும் தகுதியுடன் எந்தெவொரு செயற்பாடுகளிலும், மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதலும் அற்றவர்கள் என்பதை இத்தால் மக்களுக்குத் அறியத்தருகின்றோம்.

நன்றி.

நாகலிங்கம் பாலச்சந்திரன்

உள்ளக விவகார அமைச்சர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

tamilenn

  • 4 months later...

எம் தமிழ் உறவுகளில் தான் எத்தனை பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் யாப்பினை ஏற்று, உறுதி மொழி எடுக்க முடியாதவர்கள்..... ஏன் தேர்தலில் போட்டியிட்டவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடிந்த பின்னர்தானே யாப்பே உருவானது.இப்படி எல்லா அதிகாரமும் ஒருவரிடம் குவியும் என்றால், அனைத்துலக செயலகம் . தேர்தலுக்கு ஆதரவே கொடுத்து இராது. அப்படி நடந்திருந்தால் பல இடங்களில், ஏன் பல நாடுகளிளேயே தேர்தல் நடந்து இராது, நீங்கள் நினைகிறீர்களா, கனவிலாவது, இந்த இடங்களில் எல்லாம் மறுதேர்தல் நடக்கும் ஏன்று. பத்து பேர் போட்டி இட்ட இடத்தில் ஜந்து பேரை நீக்கி இருந்தால். 6,7,8,9,10 ஆக வந்தவர்களை நியமிப்பார்கள். 7,8,9,10 ஆக்கள்பெற்ற வாக்குகளைபார்த்தால் 300,220,112,6 என இருக்கும் இத்தைனை ஆயிரம் இருக்கும் மக்களின் பிரதி நிதி பெற்ற வாக்குகள், வெறும் 6, கேட்க காமடியாகவும் ரெம்ப கேவலமாகவும் இல்லை :lol: :lol: :lol: .

வன்னில அப்போ இருந்த , இயக்கத்துக்கும் தலைமைக்கும் பயப்பிட்டதைவிட,

சிங்களவன் ...நாடுகடந்த இந்த அரசுக்குத்தான் ரொம்பபயபிட்டான்னு மக்கள் பேசினாங்க...

இனிமே அந்த கவலையே சிங்களவனுக்கு இல்ல!

தூத்தெரி............

என்னமோ சர்வாதிகாரி, கடும்போக்காளன் ,பிடிவாதக்காரன்னு , எவர் எவர் என்ன தலைவரைபத்தி சொல்லி இருந்தாலும்................

கடவுளே.......... எப்பிடிப்பா.......இதுகளை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொஞ்சகாலமாவது வைத்திருந்தீங்க?

புலத்து பன்னாடைகளையும் .....தாயகத்தையும் , இணைத்து வைத்திருந்தது ..உணர்வுகளல்ல..........

பிரபாகரன் என்ற ஒற்றை கயிறு & மந்திரம்!!

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசாங்கம் என்றால்.... அதன் குறிக்கோள் தமிழீழத்துக்காக உழைப்பது மட்டுமே... அன்றி வேறெதுவாக இருக்க முடியும்?

அதற்குள் தேர்தலில் போட்டியிட்டு, உள்ளே போய் விட்டு... யாப்பு சரியில்லை என்று, முட்டையில் மயிர் புடுங்க நினைப்பது ஏன்? அவர்களாக ஒண்றிணைந்தே..... ஒரு நேர் கோட்டுக்கு வரமுடியாதவர்கள், இப்படியான விடயங்களில் ஈடுபட்டு தமிழனை சந்தி சிரிக்க வைப்பதுடன், எதிரி எம்மை கேவலமாக பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே.... அவர்கள் தமிழனுக்கு செய்யும் உதவியாக இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிக்கோளில்சரியாக இருந்தால் மக்கள் ஆதரிப்பர், குறிக்கோளில் இருந்து தவறினால் காணாமால் போவர், யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.