Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய விசா பெறுவதில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு சிக்கல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய விசா பெறுவதில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு சிக்கல்கள்!

Posted by admin2 On April 5th, 2011 at 10:00 pm / No Comments

பிரித்தானியாவின் குளுஸ்டர்ஷையர் மாநிலத்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெறுவதற்காக அங்கு செல்லவுள்ள முத்தையா முரளிதரன், அதற்கான விசா பெறுவதில் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கணணியைப் பயன்படுத்தக் கூடிய திறன் இல்லாமையே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது.

கிரிக்கட் விளையாட்டில் உலக சாதனையை நிலைநாட்டியுள்ள முத்தையா முரளிதரனுக்கு பிரித்தானியாவுக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்கான புதிய நடைமுறையின்படி, தனது ஆங்கில அறிவுத் திறனை கணணி மூலமான பரீட்சையில் வெளிப்படுத்தத் தெரியாது என்பதை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

‘பிரித்தானியாவுக்குச் சென்று வருவதற்கு 2013 ஆம் ஆண்டு வரையில் எனக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கான விசா பெறுவதற்காகப் கணணி மூலமாகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியுள்ளது. ஆனால் எனக்குக் கணணியைப் பயன்படுத்தத் தெரியாது’ என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

‘கணணி என்றால் எனக்குப் பயம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

’1988 ஆம் ஆண்டு நான் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை எழுதி, 6 பாடங்களில் சித்தியடைந்ததோடு பாடசாலையில் இருந்து விலகிவிட்டேன். அதற்குப் பின்னர், எனக்கு வேண்டியதெல்லாம் கிரிக்கட் விளையாடுவது மட்டுமே’ என்றார் அவர்.

39 வயதுடைய முத்தையா முரளிதரன், பம்பாயில் நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான கிரிக்கட் போட்டியில் தோல்வியடைந்ததுடன், சர்வதேச கிரிக்கட் விளையாட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றுள்ளார். 800 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும், ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கட்டுகளை வீழ்த்தியும் அவர் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணணியென்றாலே அவருக்குப் பிடிக்காது. இருந்தாலும், தகவல் தொழில்நுட்பத்திற்கான பயிற்சி, பாடசாலைகளைப் பராமரித்தல், உட்பட வசதியற்ற ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அறக்கட்டளை நிலையங்களை முரளி நடத்தி வருகின்றார்.

’20 ஆயிரம் பிள்ளைகளுக்கு பாடசாலைப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் அமெரிக்க டொலர் நிதி எனக்குத் தேவைப்படுகின்றது’ என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கி;ல் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் விளையாட்டுப் பயிற்சிக்கான வசதிகள், பாடாசலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கான நிதியைத் திரட்டுவதில் குட்னஸ் சரிட்டி என்ற அவரது அறக்கட்டளை நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கட்டமைப்புக்கள் மாங்குளத்தி;ல் அமைக்கப்படவுள்ளன.

கடந்த 2004 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின்போது பாதிக்கப்பட்ட நாட்டின் தென்பகுதியில் இத்தகைய அமைப்பொன்றை முரளிதரன் நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் மத்தியில் நிதி திரட்டுவதற்கும் முத்தையா முரளிதரன் திட்டமிட்டுள்ளார்.

‘கிரிக்கட்டே எனது வாழ்க்கையாகியிருந்தது. என்னிலும் பார்க்த அதிர்ஸ்டம் குறைந்த மக்களுக்கு உதவுவதே இனிமேல் என்னுடைய நோக்கமாகும்’ என்றும் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

saritham

பிரித்தான்னியர்களில் 25 வயதுக்கு மேற்பட்ட வர்களில் 20 % பேருக்கு ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது....பேச மட்டுமே தெரியும்.... அவர்கள் அந்த நாட்டு பிரஜை தானே....அப்படியிருக்க அந்த நாட்டுக்கு வருபவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பதில் எந்தவொரு நியாயமுமில்லை....இந்த விடயங்களை பிரித்தான்னிய ஊடகங்கள் வெளியிடுவதே இல்லை....

பிரிட்டான்னியா நகர்ப்புறங்களில் ஓரளவுக்கு மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நாடு.... அது எந்தவொரு இயற்க்கை வளமோ, கனிம தாது பொருட்களையோ தன்னகத்தே கொண்ட ஒரு தேசமல்ல.... 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் இப்பொழுது அது இல்லை.... அடுத்த ௨௦ வருடங்களில் அது ஒரு சோமாலியாகவோ இல்லை கொலை கொள்ளைகள் மிகுந்த நாடாகவோ மாறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்...

பிரித்தானிய விசா பெறுவதில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு சிக்கல்கள்!

வடக்கி;ல் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் விளையாட்டுப் பயிற்சிக்கான வசதிகள், பாடாசலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கான நிதியைத் திரட்டுவதில் குட்னஸ் சரிட்டி என்ற அவரது அறக்கட்டளை நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கட்டமைப்புக்கள் மாங்குளத்தி;ல் அமைக்கப்படவுள்ளன.

கடந்த 2004 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின்போது பாதிக்கப்பட்ட நாட்டின் தென்பகுதியில் இத்தகைய அமைப்பொன்றை முரளிதரன் நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் மத்தியில் நிதி திரட்டுவதற்கும் முத்தையா முரளிதரன் திட்டமிட்டுள்ளார்.

கிடைக்கும் சர்வதேச உதவிகளை எமது மக்களுக்கு சரியான வழியில் போய்ச்சேர உதவுவதே முக்கியதேவை. அதை செய்யக்கூடிய வல்லமை முரளிக்கு உள்ளது. அதைச்செய்யாமல் புலம்பெயர் மக்களிடம், அமைப்புக்களிடம் பணத்தை வேண்டி சிங்களத்தை முன்னேற்றுவது அர்த்தமற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.