Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதியும் கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் துரோகம் இழைத்ததிருந்தனர்:இந்திய ஊடகங்களில் தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும் கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் துரோகம் இழைத்ததிருந்தனர்:இந்திய ஊடகங்களில் தகவல்.

[Monday, 2011-04-11 14:31:00]

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் உதவி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது புதல்வி கனிமொழி ஆகியோருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கருணாநிதியும், கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகம் இழைத்ததாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடேசன் இந்தக் கடிதங்களை எழுதியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு ருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

யுத்தத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக அழுத்தம் கொடுக்குமாறு நடேசன் கோரியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் உரிய பதிலளிக்கத் தவறியதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், கனிமொழி குறித்த கடிதங்களுக்கு பதிலளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து போராட்டத்தைக் கைவிட்டால் இந்தியா மத்திய அரசாங்கம் உதவி வழங்கும் என கனிமொழி தமது பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும், 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் திகதி இந்தக் கடிதம் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈழமுரசை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமான இந்தியன் ஏசியன் நியூஸ் சேர்விஜ் (IANS) தகவல் வெளியிட்டுள்ளது.

seithy.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மீது தாக்குதல் தொடுத்துள்ள எல்டிடிஈ ஆதரவு பத்திரிகை

First Published : 11 Apr 2011 02:02:40 PM IST

புதுதில்லி, ஏப்.11: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி எம்பி ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக புலிகள் ஆதரவு பத்திரிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

கனிமொழியுடன் புலிகளின் மூத்த தலைவர் ஒருவர் தொடர்பில் இருந்து வந்தார். ஆனால் கனிமொழியோ, அவரது தந்தையோ விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை என மேற்குப் பகுதியில் தமிழர்களிடையே வெளியிடப்படும் ஈழமுரசு தெரிவித்துள்ளது.

கனிமொழிக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பி.நடேசன் 2008 அக்டோபர் மற்றும் 2009 மார்ச்சுக்கு இடைப்பட்ட காலங்களில் எழுதிய கடிதங்களை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி எழுதிய 2 பதில் கடிதங்களையும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. கருணாநிதிக்கும் நடேசன் ஒரு கடிதம் எழுதியதாகவும், ஆனால் அதற்கு பதில் இல்லை என்றும் அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு.காம் இணையதளச் செய்தியின்படி. நடேசனிமிருந்து வந்த கடைசி கடிதம், தந்தையிடமும், மகளிடமும் அவசரகால உதவி கோரி எழுதப்பட்டது. அதில் திமுக அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணி அரசை வலியுறுத்தி ராணுவ தாக்குதலை நிறுத்த இலங்கையை சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நேரத்திலும் கருணாநிதியும், கனிமொழியும் செயல்படவில்லையெனில் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் போரினால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்படும் என நடேசன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு நெருக்கடியான அந்த காலகட்டத்தில் நடேசனின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை என ஈழமுரசு பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 7-ம் தேதி கனிமொழி எழுதிய பதில் கடிதத்தில், விடுதலைப் புலிகள் அவர்களது ஆயுதங்களை கைவிட்டால், மேலும் தனது அறிவுரையை கவனத்தில் எடுத்துக்கொண்டால், அவர்களின் உதவிக்கு இந்திய அரசு வருவதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது சாத்தியமில்லை எனில் விடுதலைப் புலிகள் இந்திய அரசுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என கனிமொழி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு கடிதத்திலும் கனிமொழி இதைக் குறிப்பிட்டுள்ளார்.

2009-ல் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் கோரி ஏப்ரல் இறுதியில் சென்னையில் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் இருந்ததாக ஈழமுரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்தம் ஒருபோதும் ஏற்படவில்லை. மேலும் மே 3-வது வாரத்தில் இலங்கை அரசால் விடுதலைப் புலிகள் ராணுவரீதியாக ஒடுக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் மே மாதம் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் போலீஸ் பிரிவுத் தலைவரான நடேசனும் உயிரிழந்தார்.

முதல்வர் என்ற வகையில் கருணாநிதி மீது பெரும் எதிர்பார்ப்புகளை தமிழ் மக்கள் வைத்திருந்தனர். அவர்களுக்கு கருணாநிதி. மரணத்தை பரிசாகக் கொடுத்துவிட்டார். மேலும் ஒரு துரோகியைப் போன்று அவர் நடந்துகொண்டார் செயல்பட்டார் என அந்த பத்திரிகையில் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விடுதலைப் புலிகளுக்கும், திமுக தலைவர்களுக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

d_2098-01.jpg

ம்கூம் காலத்துக்கும் இந்தியாவை சொறிவது ........சத்தியமா இங்குள்ளவன் நான் சொல்கிரேன்......... அது சரி வராது.... மம்மி ! இயற்கையையும் நறுமணமும் நிறைந்தது எது ? அமாம் சோப்பு ..

இங்கிட்டு என்ன அமாம் சோப்பு சூட்டிங்கா நடந்திட்டு இருக்கு ?

டிஸ்கி :

அருவா யார் வீசனாலும் வெட்டும் :D தெளிவாக

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

d_2098-01.jpg

ம்கூம் காலத்துக்கும் இந்தியாவை சொறிவது ........சத்தியமா இங்குள்ளவன் நான் சொல்கிரேன்......... அது சரி வராது.... மம்மி ! இயற்கையையும் நறுமணமும் நிறைந்தது எது ? அமாம் சோப்பு ..

இங்கிட்டு என்ன அமாம் சோப்பு சூட்டிங்கா நடந்திட்டு இருக்கு ?

டிஸ்கி :

அருவா யார் வீசனாலும் வெட்டும் :D தெளிவாக

:blink:

மன்னிக்க வேண்டும் தோழரே புரிய வில்லை தெளிவாக சொல்லுங்கள் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.