Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டதாக ஜனாதிபதி ஆத்திரம்- கொழும்பில் கேட்டவை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டதாக ஜனாதிபதி ஆத்திரம்- கொழும்பில் கேட்டவை:-

15 ஏப்ரல் 2011

Bookmark and Share

ஜகாதிபதி ஆத்திரம் - கொழும்பில் கேட்டவை

பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டடார் ...

பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லங்காதீப பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் நேற்று காலை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு புது வருட வாழ்த்தை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை தொடர்புக் கொண்ட குறித்த ஊடகவியலாளர் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரித்துள்ளார். இதனையடுத்து, கடும் ஆத்திரத்துடன் ஜனாதிபதி மேற்கண்டாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதியை தொடர்புக்கொண்ட ஊடகவியலாளர் ஜனாதிபதியுடனும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுடனும் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளவர். நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தனக்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த சூழ்ச்சிக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும் பங்களிப்புச் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பான்-கீ-மூனின் அறிக்கைக்கு எதிராகவும் டைம்ஸ் பத்திரிகை உலகில் பலவாய்ந்த தலைவர்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாகவும் விளம்பரங்களை செய்யுமாறும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து எதனையும் வெளியிட வேண்டாம்

பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கும் வரை அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து எதனையும் வெளியிட வேண்டாம் என அந்த கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படாததாலும், அது குறித்து அரசாங்கம் உத்தியோபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடாத நிலையிலும் குழப்பமடைந்து அறிக்கைகளை வெளியிடும் தேவையில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு சென்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் அவர், இதனை தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கு கட்சியின் மற்றுமொரு பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவும் இணக்கம் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர், கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அழைத்து கலந்துரையாடவுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா 75 லட்சம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அந்த அறிக்கை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக விமர்சிப்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா 75 லட்சம் ரூபாவையும் வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதேபோல், நிபுணர் குழுவின் அறிக்கையை விமர்சித்து கட்டுரைகளை எழுதுபவர்கள், அறிக்கைகளை வெளியிடும் நபர்கள், அமைப்புகள் போன்றவற்றின் முக்கியத்துவம் கருதி தேவையான நிதியுதவி, பாதுகாப்பை வழங்குமாறும் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்துள்ளார். இதற்குத் தேவையான பணத்தை பாதுகாப்பு அமைச்சின் இரகசிய கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக புதுவருடக் கொண்டாட்டத்தின் பின்னர் உடனடியாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, அமைச்சர் விமல் வீரவங்ச நாடு திரும்பியதும் அவரது பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய நிதிக் கணக்கிலிருந்து கோடிக் கணக்கான பணம் செலவு

2011ஆம் ஆண்டு உலகில் பலம்வாய்ந்த 100 நபர்களைத் தெரிவுசெய்வதற்காக சர்வதேச ரைம்ஸ் சஞ்சிகை நடத்தும் மின்னஞ்சல் வாக்கெடுப்பில் அந்த 100 பேரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை உச்சத்திற்கு கொண்டுசெல்வதற்காக ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய நிதிக் கணக்கிலிருந்து கோடிக் கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளதாக நம்பிக்கைக்குரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்கான இணைப்புப் பணிகளுக்கான பொறுப்பு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட இலங்கை தூதரகங்கள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் அதற்குத் தேவையான நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. உலகில் பலம்வாய்ந்த 100 நபர்களைத் தெரிவுசெய்யும் மின்னஞ்சல் வாக்கெடுப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 28ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ, சில இந்தியப் பிரஜைகளுடன் திடீரென பூட்டானுக்குச் சென்றமை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியின் மூத்தப் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சில இந்தியப் பிரஜைகளுடன் திடீரென பூட்டானுக்குச் சென்றமை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். பூட்டானில் கிரிக்கெட் சூதாட்டக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் பிரதிநிதியொருவரை நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவின் பயணத்திற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஜனாதிபதி, இலங்கைத் தூதரக சேவையின் சிரேஷ்ட அதிகாரியொருவரையும் பூட்டானுக்கு அனுப்பியிருந்தார்.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.