Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோ தமிழியல் மாநாடு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்

Featured Replies

வரும் யூலை மாதம் 13-14 திகதிகளில் ரொறன்ரோவில் தமிழியல் மாநாடு நடைபெறவிருக்கிறது. மேற்குநாடுகளில் அதிக தமிழர்கள் வாழும் நகரமான ரொறன்ரோவில் கனடாவின் இரு பெரும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் தமிழியல் மாநாடு நடைபெறுவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் தெரியலாம். ஆனால் தமிழ் மொழிக்கோ, தமிழ் மொழி மாணவர்களுக்கோ இந்த தமிழியல் மாநாட்டால் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் இருக்குமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழியல் துறையின் அல்லது தமிழியல் மாநாடுகளின் முதன்மை நோக்கமாக தமிழ் மொழியைப் பேணுதலும், வளர்ப்பதும், கற்பித்தலுமே இருக்க முடியும். தமிழ்ச் சூழலின் இன்றைய தேவைகளையும், சிக்கல்களையும் கருத்தில் எடுப்பதும் தமிழியல் துறையை நடைமுறைக்குப் பயன்படும் துறையாக திசைவதில் முக்கியம் பெறுகிறது. ஆனால் இந்த முதன்மை இலக்குகளுக்கு ரொறன்ரோ தமிழியல் மாநாடு சற்றேனும் உதவுவதாக இல்லை.

தமிழியல் மாநாடு முழுவதும் அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடக்கும். அதில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளும், வெளியிடப்பட்டும் மாநாட்டு மலர்களும் ஆங்கிலத்திலேயே இருக்கும். அவர்களின் வலைத்தளத்தில் தற்போது தமிழில் ஒரு வசனம் கூட இல்லை. இங்கு தமிழ் வகுப்புகளுக்கு போகும் மாணவர்களை நோக்கி இவர்கள் எந்த செயற்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. இங்கு தமிழ் வகுப்புகளுக்கு வந்து அழைப்பு விடுக்கவும் இல்லை. தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் இசுகார்புரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் நிறுத்தப்பட்ட போது இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்தாகவும் அறியமுடியவில்லை. எனவே இவர்களின் அக்கறை அல்லது ஈடுபாடுதான் என்ன என்று நீங்கள் எண்ணலாம்.

இவர்களின் அக்கறை பெரும்பாலும் ஒரு கல்விக்களம் சார் நடவடிக்கையாகவே இருக்கிறது. பல தேவைகளுக்காக தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை பல மேற்குநாட்டினர் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் பலர் இங்கு இருப்பதால் எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. எவ்வாறு காலனித்துவ காலத்தில் அவர்களுக்கு எம்மைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருந்ததோ, அது போலவே. எவ்வாறு இசுலாமியர்களை, சீனர்களை இவர்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்களோ, அது போலவே. இந்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்களை நோக்கினாலே அதைப் புரிந்து கொள்ளலாம்.

Munk School of Global Affairs இக்கு தமிழ் மொழி மீது, தமிழ் மக்கள் மீது எப்படி அக்கறை வந்தது. மற்றயது Center For South Asian Studies – Asian Institute, இது காலனித்துவ இந்தியவியல், ஆசியவில் துறையின் இன்றைய உருவம், பொதுவாக Areas Studies கீழே வருகிறது. இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த மாநாடு ஓரளவு உதவுகிறது.

அடுத்தது இது முழுமையாக ஒரு நுண்புல, புலமைசார் நிகழ்வு. இவர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளுக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு எந்தத் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள். அல்லது தற்போது தமிழ்ச் சூழலில் தமிழர்கள் பேசவேண்டிய தலைப்புக்களையும் இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. அவை சவால் மிக்கவை. பொதுவாக ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமது ஆய்வுக் கட்டுரைகளை மாநாடுகளில் சமர்ப்பிக்க வேண்டிய பணித் தேவை இருக்கிறது. அதை நிறைவு செய்யக்கூடிய ஒரு களமாகவே இது இருக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதி வைத்து தமிழ் பாட்டுப் படிப்பவர்கள் போல, ஆங்கிலத்தில் துணை உரை பார்த்து தமிழ்த் திரைப்படம் பார்ப்பவர்கள் போல, தமிழ் லிட்ரிச்சர் பற்றி ஆங்கிலத்தில் விவாதிப்பர்கள் போல இந்த தமிழியல் மாநாடும் தமிழ் இலாமல், தமிழ் அக்கறைகள் இல்லாமல் நடக்கும். அதிலை எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அதற்கு தமிழியல் என்று பெயர் வைக்காமல் இருந்திருக்கலாம். இந்த மொழிக்கா இத்தனை பேர் செத்தவை, முட்டாள்கள்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1655:2011-04-17-02-40-16&catid=298:2011-02-18-08-43-02&Itemid=392

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.