Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆட்டம்!-2

அது என்ன மக்கள் விஞ்ஞானம்?

மூட நம்பிக்கைக்கான விஷ முறி மருந்து அறிவியல்! - ஆடம் ஸ்மித்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்இ அவரது துணை​வியார் டி.ஏ.மதுரமும் பாடிய பாடல்களில் அற்புதமான தத்துவங்களும்இ அரசியல் தர்க்கங்களும்இ யதார்த்த அலசல்களும் நிறையவே இருக்கும். ஒரு பாடலில் கலைவாணர் பாடுவார்...

''கோழியில்லாமல் தன்னால முட்டை​களில்

குஞ்சுகளைப் பொரிக்கவெச்சான்இ

உங்கொப்பன்இ பாட்டன் காலத்தில்

யாரிந்த கோளாறைக் கண்டுபிடிச்சா

யாரிந்தக் கோளாறைக் கண்டுபிடிச்சா?''

விஞ்ஞானபூர்வஇ தர்க்க ரீதியானஇ அதிகார​வர்க்கஇ ஆணாதிக்கப் பார்வைகளைஇ சிந்தனை​களைஇ வாதங்களை அவர் முன்வைக்கஇ மதுரம் அம்மையார் அவற்றை லாகவமாகஇ நறுக்கென எடுத்தெறிவார்:

''அந்தக் குஞ்சுகள் பொரிக்கவெச்ச கோளாறுக்​காரனை

முட்டை ஒண்ணு பண்ணச் சொல்லுங்க பார்ப்போம்இ

முட்டை ஒண்ணு பண்ணச் சொல்லுங்க!''

தயாரிக்கும் திராணியின்றிஇ பொரிக்க​வைப்பதை மட்டுமேஇ ''என்னே பெரும் விந்தை!’ எனக் கொண்​டாடுகிறது நவீன விஞ்ஞானம். மனித வாழ்வைப் பொறுத்த வரைஇ விஞ்ஞான - அஞ்ஞான வரம்புகள் தெளிவாக வரையறுக்கப்பட முடியாதவை. அஞ்ஞானத்​தில் விஞ்ஞானம் கலந்துஇ அதை நம்பிக்கைஇ மதம் என்று அழைக்கிறோம். விஞ்ஞானத்தில் அஞ்ஞானமும் கலந்து இருப்பதைஇ பலரும் ஏற்கவே மறுக்கிறோம்.

ஒருவர் வாழ்வின் அனைத்து சுகஇ துக்கங்களையும் அனுப​வித்துஇ 100 வயதில் முழுமை அடைகிறார். இன்​னொருவர்இ ஐந்து வயதிலேயே அகால மரணமடைகிறார். இதை எப்படி விஞ்ஞான ரீதியாக விளக்குவது? கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டுவதுபோலஇ ''நடக்குமென்பார்இ நடக்காது; நடக்காதென்பார்இ நடந்துவிடும்!''. அப்படி 'நடப்பது’ விஞ்ஞானமா... அஞ்ஞானமா அல்லது கலவையாஇ மந்திர தந்திரமாஇ வினோதமாஇ விந்தையாஇ சாகசமாஇ அற்புதமா... என்னவென்பது?

'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி’ என்று தொடங்கும் இன்னொரு பாடலில் கலைவாணர் சொல்கிறார்...

'அஞ்ஞானத்தை அழிக்கப் போறேன்டிஇ

அணுசக்தியாலே ஆயுள் விருத்தி பண்ணப் போறேன்டி!’

அரச விஞ்ஞானம் பற்றி அவர் பேசிக்கொண்டு இருக்கஇ மக்கள் விஞ்ஞானம்பற்றிக் கேட்கிறார் மதுரம் அம்மையார்இ

'வீட்டுக்கென்ன செய்யப்போறீங்க -

அதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லிப்​போடுங்க!’

இந்த அணுவின் கதையைத்தான் நான் சொல்ல விழை​கிறேன்இ மக்கள் விஞ்ஞானப் பார்வையில் இருந்து!

சரிஇ அது என்ன மக்கள் விஞ்ஞானம்?

மக்கள் விஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்தின் அணுகு​முறைகளைஇ அனுபவங்களைஇ அனுகூலங்களைஇ சாதாரண மக்கள் மத்தியில் பரவலாக்கும் ஓர் இயக்கம். இப்போதைய உலகில் ஆளும் வர்க்கமும்இ அதன் அடியாட்களும் மட்டுமே விஞ்ஞானத்தின் பயன்களை அனுபவித்துஇ தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள அறிவியலை உபயோகிக்கின்றனர்.

'கஞ்சி குடிப்பதற்கிலார்

அதன் காரணங்கள்

எவையென அறிவுமிலார்’ என்கிறார் பாரதி.

பெரும்பான்மையான மக்கள்இ அறியாமைஇ இய​லாமைஇ மூடநம்பிக்கை ஆகிய மூன்றுக்குள் முடங்கிக்​கிடப்பதற்கான காரணம்இ விஞ்ஞானம் அவர்களுக்கு மறுக்கப்படுவதுதான். அந்த மறுத்தலை உடைத்தெறிய உலகின் பல்வேறு இடங்களிலும் பொதுஜன அறிவியல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இயக்கங்கள் தோன்றுகின்றன. பரிசோதனைக்காகவும்இ சிகிச்சைக்காகவும்இ மருத்துவர் நம் மீது மருந்து​களைப் பயன்படுத்தும்போதுஇ அவற்றைப்பற்றிய தகவல்​களைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை நமக்கு இருப்பதுபோலஇ நம் சுற்றுச்சூழலில் இயங்கும் அணு உலைகள்இ கதிரியக்கம்இ அதன் விளைவுகள் போன்றவைபற்றி உண்மைகளையும் கேட்டுப் பெற நமக்கு உரிமை இருக்கிறது. 'கேட்டுப் பெற’ என்கிற உரிமையைக் காட்டிலும்இ 'தகவல்கள் தெரிவிக்கும்’ கடமை அவர்​களிடத்தில் அதிகமாகவே இருக்க வேண்​டும். அது இல்லை என்பதுதான் இப்போது பிரச்னை!

ஆயினும்இ அந்தத் தகவல்களைஇ கருத்துகளைஇ கண்டுபிடிப்புகளை எல்லாம் மக்கள் விஞ்ஞான இயக்கத்தார்இ அறிவியல் நூல்கள் மூலமாகவும்இ கைப்பிரதிகள் மூலமாகவும்இ குறும் படங்கள் மூலமாகவும் வட்டார மொழி​களில் மக்களிடையே கொண்டு​சென்று விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விஞ்ஞான அறிவை விருத்தி செய்யவைக்கும் அதே வேளையில்இ மக்கள் மத்தியில் தங்களுக்கு உள்ள நேர்மறை உணர்வுகளைப் பெருக்கிஇ ஒரு சிறந்த மாற்று எதிர்காலத்தை தங்களால் கட்டமைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்க உழைக்கின்றனர்.

சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்கவும்இ நீடித்த நிலைத்த வளர்ச்சி எனும் மாற்று வளர்ச்சிச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும்இ மக்கள் தொழில்நுட்பத்தை ஊக்குவித்துஇ அதற்கான ஆய்வு மற்றும் உருவாக்கலை (சுநளநயசஉh ரூ னுநஎநடழிஅநவெ) பெருகச் செய்யவும் முனைகிறது மக்கள்

விஞ்ஞானம். சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முதல் பல்வேறு மக்கள் இயக்கங்களும்இ தொண்டு நிறுவனங்களும்இ மக்களுக்கான அறிவியலை எடுத்துச் செல்வதில் சீரிய பணி ஆற்றி வருகின்றன.

தவிரஇ பல்கலைக்கழக அளவில் நம் நாடு முழுக்க உள்ள அறிவியல் ஆசிரியர்கள்இ அறிவியலாளர்கள் ஆகியோர் வெளியிடும் கட்டுரைகளின் அளவு... சீனாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ ஒப்பிடும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறது. ஆனால்இ ஆராய்ச்சிகளுக்குச் செலவிடப்படும் தொகையோ மிக அதிகம். உங்களின் ஆய்வுகள் தவறாக இருந்தாலும்இ அதைக் கட்டுரை வாயிலாகப் பதிவு செய்துவிடுங்கள். காரணம்இ நாளை அதே துறையில் உங்கள் வழியைப் பின்பற்றி வரும் ஒருவர்இ நீங்கள் விழுந்த அதே இடத்தில்... விழுந்துவிடாமல் இருக்கஇ அது உதவும். அவர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு உங்களின் 'தவறு’ எந்த விதத்திலேனும் பயன் அளிக்கவும் செய்யலாம். ஆனால்இ அதைச் செய்யவும் யாரும் முன்வருவது இல்லை என்பதுதான் பிரச்னை.

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான அரசு ஊக்குவிப்பும் போதிய அளவு இருக்க வேண்டும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை அரசு நூலகங்களில் வாங்கச் செய்ய வேண்டும் என்றால்இ அதனை வேண்டிய வழியில்இ வேண்டிய அளவில் 'கவனித்து’ வாங்கவைக்கஇ அதற்கெனத் தனி லாபி செயல்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் அல்லது பதிப்பாளர்இ அரசு நூலகங்களிடம் காசு கொடுத்துத்தான் நூல்களை வாங்கச் செய்யும் நிலை தொடரும் ஒரு சமூகத்தில்இ அறிவியல் எப்படி மக்களுக்கானதாக இருக்கும்?

நமது நாட்டுப் பொறியியல் கல்லூரிகளும் ஆங்கில மொழியில்​தான் கற்பிக்கின்றன. வெகுஜனப் பத்திரிகைகளில் அறிவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதினால்இ சில அறிவியல் வார்த்தைகளைஇ தகவல்களைத் தமிழ்ப்படுத்த முடிவது இல்லை. அந்த வார்த்தையை அப்படியே உபயோகிக்க வேண்டி இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான அறிவியல் பெயர்கள் கிரேக்கம்இ லத்தீன் போன்ற மொழிகளில் இருந்துதான் எடுத்தாளப்பட்டு இருக்கின்றன. அப்படிப் பயன்படுத்தியதாலேயே ஆங்கில மொழிஇ வளர்ச்சியும் பெற்றிருக்கிறது. அதேபோல்இ தமிழிலும் அறிவியல் பெயர்களைஇ அது இருக்கும் நிலையிலேயே நாம் எடுத்தாள்வதில் தவறு இல்லை.

இனி வரப்போகும் அத்தியாயங்களில் இதுபோன்ற சில சிக்கல்​கள் இருப்பதால்இ உங்களை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டிய கடமை இருப்பதாக உணர்கிறேன்!

'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என மனித வாழ்வின் அடிப்படையான அணுவையும்இ தமிழர் வாழ்வின் அடிப்​படையான குறளையும் இணைத்துப் பேசுகிறோம். குறள்போல அணு மிகச் சிறியது. ஆனால்இ மிகவும் பரந்தது. அணுபோன்று குறள் எளிமை​யானது. ஆனால்இ மிக மிக ஆழமானது. திருக்குறளை அணுக்குறள் என்பது எவ்வளவு பொருத்தமானதோஇ அதுபோல அணுவைக் குற்றணு என்பதும் சரிதான்.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாகஇ அணு என்றால் என்ன? அதன் கதை என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த அணுவின் கதை....

- அதிரும்...

நன்றி விகடன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.