Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச, வங்கி வேலை தருவதாக கூறி ஏமாற்றப்படும் தமிழ் இளைஞர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Apr 23, 2011 / பகுதி: செய்தி /

அரச, வங்கி வேலை தருவதாக கூறி ஏமாற்றப்படும் தமிழ் இளைஞர்கள்

தற்போதுள்ள நாட்டு நிலைமைகளின் அடிப்படையில் வெளிநாடு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து இளைஞர்கள் உள்ளுர் வேலைவாய்ப்பு தொடர்பாக சிரத்தைகொள்ளும் நிலைமையை சாதகமாக்கி தென்பகுதி அரசுசார் குழுக்களால் அரச மற்றும் வங்கிகளில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணம் பெறப்பட்டு ஏமாற்றப்பட்டுவருகின்றனர்.

அண்மைக்காலங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தினமும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு என செல்வதும் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விட்டது.

அமைச்சர்களின் கையாட்கள் எனவும் வங்கி அதிகாரிகளின் செயலாளர்கள் எனவும் கூறப்படுவோரால் பல லட்சம் பணம் பெறப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்லப்படும் அந்த இளைஞர்கள் வங்கிகள், அரச அலுவலகங்கள் முன் வைத்து அரச அதிகாரி வரவில்லை, அவருடைய மகன் இறந்துவிட்டார் என பல்வேறு காரணங்கள் சொல்லி வேறு ஒரு திகதி கொடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

நியமன கடிதம்அடுத்தவாரம் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், வீட்டுக்கு நியமன கடிதம் வரும் எனவும் சொல்லி அனுப்பப்படுபவர்களும் பலர் உள்ளனர். இவர்களில் பலருக்கு போலியான கடித தலைகளில் கடிதங்கள் ரைப் செய்யப்பட்டு போலியான கையொப்பம் இடப்பட்டு வழங்கப்படுகிறது.

இவற்றில் பல குறிப்பிட்ட வங்கிகளில் குறிப்பிட்ட கிளைகளில் வேலை வழங்குவதற்காக சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கொடுத்த கடிதங்கள் போன்றனவும் நகல் எடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இவ்வாறு வேலை தருவதாக தெரிவிக்கப்பட்டு பணம்பெறப்படுவதற்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஏராளமான முகவர்கள் நியமிக்கப்பட்டே பணம் பெறப்படுகிறது.

கொழும்பில் உள்ள பல்வேறு வங்கிகளின் தலைமையகங்கள் முன்பாகவும், அரச அலுவலகங்கள் முன்பாகவும் தினமும் பலநூறு பேர் இவ்வாறு சென்று காத்திருப்பதும் திரும்பி வருவதும் பல போடி ரூபாய் திட்டமிடப்பட்டு தமிழ்மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படுவதும் அரச தரப்புக்கு தெரிந்திராமல் இருக்க ஞாயம் இல்லை.

பொதுவாக தேர்தல்கள் அண்மித்த தர்ணங்களில் அரசு சார் குழுக்களால்ஓட்டுக்கான வேலைவாய்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படும் நடைமுறைகள் இல்லாது இவ்வாறான செயற்பாடு தொடர்வதானது தமிழ் மக்களை முற்றுமுழுதாக அழிக்கும் அரசின் இன்னொரு திட்டமிட்ட நடவடிக்கையாகவோ அல்லது கப்ப மன்னன் மேர்வின் சில்வா போன்றவர்களின் வடக்கு கிழக்கு மக்கள் மீதான விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கையாகவோ இது இருக்கலாம்.

நாம் எமாற்றப்படுகிறோம் என்பதே தெரியாமல் ஏமாறிக்கொண்டிருக்கும் சந்ததியாகவும் தட்டிக்கேட்பதற்கான நாதி இல்லாதவர்களாகவும் இருப்பதாலோ என்னமோ நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். விளிப்படைவதே தப்பித்துக்கொள்வதற்கு ஒரே வழி. இதற்கு தமிழ் தேசியத்திற்கான இணையதளங்களும் பத்திரிகைகளும் உடன் கைகொடுக்க முன்வரவேண்டும்.

pathivu

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவின் பொருளாதாரம் இப்ப தான் சரிய தொடங்கி இருக்கு. இப்பவே இந்த கஷ்டம் எண்டால்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.