Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது முற்றிலும் பொய் – டக்ளசும் சேர்ந்து கொண்டார்

Featured Replies

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார் ஈபிடிபியின் செயலரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.

‘ஏசியன் ரிபியூன்‘ இணையத்தளத்தின ஆசிரியருக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர்.

இவர்கள் சிறிலங்காவினதும், அதன் படைவீரர்களினதும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் பான் கீ மூனால் ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘.

இந்த நிபுணர் குழுவை நியமித்ததன் மூலம் பான் கீ மூன் ஐ.நாவின் வளங்களையும் நிதியையும் வீணடித்துள்ளார்.

தமது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர், சுயஇலாப நோக்கத்துடன் சில நாடுகளினதும் அமைப்புக்களினதும் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தான், சிறிலங்கா அதிபருக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் அவதூறு ஏற்படுத்துவதற்காக இந்த எழுத்தாளர்களை நியமித்துள்ளார்.

தருஸ்மன் அறிக்கையின் படி, எமது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை.

கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட 70 ஆயிரம் அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பிரபாகரனே பொறுப்பு.

நியுயோர்க்கிலுள்ள புலிகள் ஐ.நா செயலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நியுயோர்க்கில் வசிக்கும் சிலர் ஐ.நா செயலகத்திற்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் வெளிப்படையாக பழகுவதன் மூலம், சிறிலங்கா அரசாங்கத்தைக் குற்றம் சுமத்தும் இந்த அறிக்கையை வெளியிடச் செய்வதற்கு தம்மாலான முயற்சிகளை எடுத்துள்ளனர்.

அவர்கள் நினைத்ததை நடத்தியுள்ளார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் கைமாறியிருப்பதாக நாம் அறிந்தோம்.

மோதலின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் மிகவும் துன்பகரமான மற்றும் பயங்கரமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்ததாக தருஸ்மன் குழுவினர் சித்திரித்துக் காட்டியுள்ளனர்.

அவர்கள் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர்.

நான் ஒரு இலங்கைத் தமிழன். என்னை தமிழ் மக்களே வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர்.

எவ்வித சட்ட ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் குறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தருஸ்மன் அறிக்கையை நான் நிராகரிக்கிறேன்.

ஐ.நாவோ அல்லது ஏதேனும் நாடோ அப்பாவித் தமிழர்களுக்கு நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும், அழிவுகளுக்கும் தமது இரக்கத்தைக் காட்ட நினைத்தால் அவர்கள் இழப்புகளுக்கான நட்டஈடுகளை வழங்க முன்வர வேண்டும்.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110429103724

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.