Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்மை எதுவென விளக்க சீனா, ரஷ்யாவுடன் பேச்சு; தயார் என்கிறது கூட்டமைப்பு இந்திய உதவிகளையும் கோருகிறது

Featured Replies

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த கொழும்பு அரசின் நிலைப்பாட்டுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி உள்ள நிலையில், அந்த நாடுகளுக்கு உண்மை நிலையை விளக்கும் வகையில் அவற்றுடன் பேசத்தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, நிபுணர் குழுவின் அறிக்கையையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரு ராஜதந்திர அணுகுமுறையாக இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றது என்று அதன் இணைச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். அந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று யாழ். நகரில் இடம்பெற்றது. ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிரமுகர்களான சி.வீ.கே.சிவஞானம், க.கௌரிகாந்தன், பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராசா, "ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை அரசு மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. ஆனால், புலிகளைவிட அரசின் குற்றங்களாலேயே பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகமாகி உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. சர்வதேச உடன்படிக்கைகளிலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களிலும் கையெழுத்திட்டதையும் மீறியே அரசு இந்தக் குற்றங்களைச் செய்துள்ளது'' என்றார். நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளபடி இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து பதிலளிக்க வேண்டிய கடப்பாடு, கடமை அரசுக்கு உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார். "பணம் வழங்கி மக்களைத் திரட்டி நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும் அறிக்கைக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது'' என்றார் மாவை. இதேவேளை, ஐ.நா. அறிக்கைக்கு எதிராகத் தமது வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான ரஷ்யத் தூதர் விளாடிமிர் மிக்கலோவ், எனினும் அந்த அறிக்கையைப் பயன்படுத்தி பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை ஏதாவது கொண்டுவரப்பட்டால் ரஷ்யா வீற்றோவையும் பயன்படுத்தத் தவறாது என்றார்.

இந்த விடயத்தில் சீனாவும் இலங்கைக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை இலங்கையின் உள்விவகாரம் எனத் தெரிவித்துள்ள அது, வெளிச்சக்திகள் அதில் தலையிடக்கூடாது என்றும் கூறியுள்ளது. இந்தியா இந்த விடயம் குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும் எதிர்க் கட்சிகளிடம் இருந்தும் தமிழகக் கட்சிகளிடம் இருந்தும் இலங்கைக்கு ஒத்துழைக்கக்கூடாது என்ற கடும் அழுத்தம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை, தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா இனியாவது உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். "இந்தியாவை எம் பக்கம் ஈர்க்க வேண்டும். தமிழகம் அதற்கு உதவியாக இருக்கவேண்டும். இந்தியா தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஆதரவு தெரிவிக்கும் எனில் சர்வதேசமும் அது குறித்து கவனத்தில் கொள்ளும்'' என்றார்.

home

http://onlineuthayan.com/News_More.php?id=50659206602593836

  • கருத்துக்கள உறவுகள்

Intha Libya aana libyakai aapadichavanga Russia china ellam ethuvum panna mudia

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.