Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றாரியோ, கனடா மாநில தேர்தல் ஐப்பசி (ஒக்டோபர்) 2011

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தத் தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட இரண்டு தமிழர்களும், கணிசமான வாக்குகளைப் பெற்றபோதிலும் இரண்டாம் இடங்களை மட்டும் பெறக்கூடியதாக இருந்தது. மார்க்கம் யூனியன்வில் தொகுதியில் போட்டியிட்ட ஷான் தயாபரன், 11600 வாக்குகளைப் பெற்றார். ஸ்காபறோ ரூஜ் றிவர் தொகுதியில் போட்டியிட்ட நீதன் சன், 13130 வாக்குகளைப் பெற்றார்.

இருவருக்கும் பாராட்டுக்கள்.

இப்படியான தொடர் முயற்சிகள் அடுத்த தலைமுறைக்கு இங்கே ஒரு அரசியல் தலைமைக்கு வழிகோலும்.

எம்மவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டும்.

கட்சிகள் மத்தியில் எம்மவர்கள் பற்றிய மதிப்பையும் அதிகரிக்கும். இதனால் எமது நன்மைகள் கிட்டும்.

... வேலியில் நின்ற ஓணானை, மடிக்குள் தூக்கிப் போட்டால் ...

.... தற்போது புலத்துக்கு மீட்பவர்களாக வந்துள்ள / கொண்டுவரப்பட்ட (எவ்வாறு வந்தார்கள் / யாரால் அழைத்து வரப்பட்டார்கள் ?????.. ) இந்த தலைமைச்செயலக இறைதூதர்களுடனும், 85இற்கு பின் யாழை விட்டு ஓடிய பின் இணைந்து / இன்று தேசிய தலைமை இலக்குடன் அலையும் புணர்வாழ்வு பேரின்பம் பெற்றவர்களுடனும் இணைந்திருக்கும் ... புலத்து இறை அடியார்களை ... யுத்த நிறுத்த காலத்தில் இழுத்து வந்து தமிழ் பேருலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை .... வாங்கப்படவோ / விற்கப்படவோ முடியாததை பணத்துக்குக்காக கூறு போட்டு விற்ற புலத்து காஸ்ரோக்களையே சாரும்!!!!

... முன்பு ஒருதரம் குறிப்பிட்டதுபோல் ... யுத்த நிறுத்த காலத்தில் ..

* ஆயிரம் கொடுத்தவன், இங்கு ஆதரவாளன் பட்டம்!

* ஐயாயிரம் கொடுத்தவன், அந்த நாட்டு தலைமை பூசாரியுடன் நேரடியாக கதைக்கும் கவுரவம் கிடைக்கும்!

* பத்தாயிரம் கொடுத்தால், நாடு வரவேற்குமாம்!

* ஐம்பதுக்கு மேல் கொடுத்தால், தலைவருடன் இருந்து உணவருந்தும் கவுரவம்!!

... இருந்த உண்மை நிலைமை! ... எதிரியானவன் பல மில்லியன் கணக்கில் கொட்டி வாங்கிய ஆயுதம் கொண்டு செய்ய முடியாமல் இருந்ததை, சில ஆயிரங்கள் புலத்தினூடே எறிந்து சாதித்தான்!! ... பணம் .. பணம் .. பணத்துக்காக பிணங்களை எல்லாம் அரவணைத்தவர்கள் இவர்களே! ..

... அன்று விதைத்தவைகளை, இன்று இந்த புலத்துக்காஸ்ரோக்கள் அறுவடை செய்ய்யும் காலம்????!!!!! ... இன்றைய அறுவடைக்கு பலியாவது ... இந்த காஸ்ரோக்கள் மட்டுமல்ல ... புலத்தில் மட்டுமே குற்றுயிராகவாவது வாழும் தமிழ் தேசியமும்!!!!

இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் ஏதாவது நன்மை கிடைக்குமா ? உங்களது அனுபவத்தைக் கொண்டு பிரயோசனமாக உங்களது கருத்துக்களை எழுதலாமே ?

புலம்பிக்கொண்டிருப்பதற்கான காரணம் பல முறை எழுதியதுதான். எமது போராட்டம் ஒரு ஆறு ஏழு வருடங்கள் நடந்ததல்ல .ஏறக்குறைய முப்பது வருடபோராட்டம், இரண்டு தலைமுறைகளுடன் சம்பந் தப்பட்டது.முள்ளிவாய்க்கால் முடிவுடனாவது நாம் ஒரு பொது அரசியல் பாதையை தேர்ந்திருக்க வேண்டாமா?. அதைவிட்டு இருந்ததை விட கேவலமாக இன்னமும் முரண்பட்டு கனடாவில் இப்போ அவர்களுக்குள்ளேயே நீ சரி நான் சரி என ஆளை ஆள் போட்டு கொடுப்பதிலும் அடிபடுவதிலேயுமே காலம் போகின்றது.அதற்காக பணம் செலவழித்து பத்திரிகை ,வானொலிகள் கூட ஆளை ஆள் தூர்த்துவதில் தான் காலம் கழிகின்றது .அதைவிட கூட்டமைப்பை பற்றிய காட்டமான விமர்சனம் மூலம் தாம் தான் உண்மையான தேசியவாதிகள் என்ற போர்வை வேறு .

இவை எல்லாமே பணதிற்கும் ,பதவிக்குமான செயல்பாடுகளே ஒழிய எமது விடிவிற்கானதல்ல.இந்த தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்களுமே இதற்கு நல்லா உதாரணம் .இவர்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கு விளங்கும்.ஒரு கட்சி,கொள்கை என்று எதுவுமில்லாதவர்கள்.இனி இவர்கள் வேறு கட்சி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

இந்த நிலைக்கு எம்மை கொண்டுவந்தது முப்பது வருட போராட்டமும் ,அதை பாவித்து உலகமெங்கும் புலிகளின் பிரதிநிதிகளாகி புலம்பெயர் தமிழரின் தலைமையை கையிலெடுத்த சுயநல மொக்கு கூட்டம்.இவர்கள் இப்போதைக்கு அரசியலை விடப்போவதுமில்லை அடிபாட்டை விடப்போவதுமில்லை.இதன் முடிவு இதில் தோற்கும் கோஸ்டி அரசுடன் சேர்ந்து காட்டிக்கொடுப்பதிலேயே முடியும்.இவர்களுக்கு பின்னால் நிக்கும் அள்ளக்கைகளுக்கு எதுவுமே தெரியாது ,விளங்கவும் மாட்டுது.விஷயம் விளங்கிய தமிழன் அரசியலை விட்டு ஒதுங்கி கனகாலம்.(துட்டனை கண்டால் தூர விலகு கொள்கை ).பணமும் அதிகாரமும் அவர்கள் கையில் இருக்கு மட்டும் மாற்றம் கொண்டுவருவது மிக கஷ்டம் .இன்றும் ஒரு நோட்டிஸ் பார்தேன் .படங்களும் போட்டு யார் யார் கள்வர் என்றும் துணை போகாதீர் என்றும் கேட்டிருந்தார்கள்.இன்று கனடாவில் நடக்கும் அரசியல் இதுதான்.பார்த்து சிரிப்பதா அழுவதா என முடியாமல் இருக்கின்றது .

மேலே உள்ள நெல்லையனின் கருத்தும் இதற்கு ஒத்து போவதால் அதையும் இணைத்துள்ளேன் .

Edited by arjun

  • தொடங்கியவர்

வெற்றிபெற்ற லிபரல் கட்சியில் பலரும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள். பெரும்பான்மை இல்லாததால் அரசு நான்கு வருடங்கள் நின்றுபிடிக்குமா இல்லை முன்னதாக இன்னொரு தேர்தல் நடக்குமா என காலம் பதில் சொல்லும்.

அடுத்த முறை இவர்கள் போட்டியிட வாய்ப்புகள் குறைவு. அதேவேளை இந்த கட்சியிலும் இணைந்து தமிழர்கள் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதேவேளை எம்மவர்களில் மேலும் இளையவர்கள் தேர்தல்களில் ஈடுபடும் சாத்தியங்கள் உள்ளன.

  • தொடங்கியவர்

முள்ளிவாய்கால் தொடர்கின்றது.புலத்திலும்.

ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தால் மட்டும் காணாது, எல்லாத்துறைகளிலும் நாம் சிறப்பாக வாழ்ந்துகாட்டவேண்டும். பல்லின மக்களும் இந்த மாநில அரசியலில் உள்ளனர், நாமும் இருப்பது எமது தலைமுறையின் வாழ்வியலுக்கு அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.