Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய மத்திய அரசு விரும்பினாலும் இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு காப்பாற்ற முடியாது

Featured Replies

'இந்திய மத்திய அரசு விரும்பினாலும் இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு காப்பாற்ற முடியாது'

இலங்கை போர் குற்றச்சாட்டு தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளது. இதன் அர்த்தம், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றால் உள்நாட்டில் விசாரியுங்கள் என்பதாகும். இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், இருக்கின்ற அரசாங்கங்களை சாராத மனித உரிமை அமைப்புகள் இலங்கை பிரச்சினையை தமது கரங்களில் எடுத்துள்ளன. எனவே இனிமேல் இந்தியாவின் மத்திய அரசாங்கம் விரும்பினாலும் கூட கடந்த காலங்களை போல இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து காப்பாற்ற முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இறுதிக்கட்ட போரின் போது பத்தாயிரக்கணக்கான மக்கள் மரணித்தார்கள் என்ற உண்மை இன்று உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. எதுவுமே நடக்கவில்லை  என்று சொன்னால் அது, கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் திருட்டு பூனை, உலகமே இருண்டு விட்டது என்று நினைப்பதற்கு ஒப்பாகும். எனவே இறுதிக்கட்ட இழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டிய நிலைமை உருவாகி வருகின்றது. புலிகள்தான் அனைத்து கொலைகளையும் செய்தார்கள் என்று அரசாங்கம் சொல்லுமானால், அது தொடர்பிலும் உள்நாட்டில் விசாரணை நடத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.

கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பிலும், படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பிலும் நாங்கள் விசாரணைகளை கோரிய பொழுது அரசாங்கம் பல ஆணைக்குழுக்களையும், அரசாங்கத்தின் அமைச்சர்கள் அடங்கிய குழுக்களையும் நியமித்தது. ஆனால் அவை எதுவும் சர்வதேச விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அதனால்தான் அத்தகைய அனைத்து குழுக்களும் இன்று காணாமல் போய்விட்டன. எனவே தற்போதைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். உள்நாட்டிலேயே விசாரணைகளை ஆரம்பியுங்கள் என அரசாங்கத்தை சர்வதேசம் வலியுறுத்துகின்றது. அதாவது, நீங்கள் ஆரம்பிக்காவிட்டால் நாங்கள் ஆரம்பிக்கவேண்டிவரும் என்ற செய்தி சொல்லாமல் சொல்லப்படுகின்றது.

போர் குற்ற அறிக்கையின் அதிகாரப்பூர்வ தன்மைப்பற்றி தொடர்ந்து பேசி கொண்டிருப்பதில் பயனில்லை. இந்த அறிக்கையின் விபரங்கள் முழு உலகத்தையும் சென்றடைந்துவிட்டது. அத்துடன் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் எம்மை காப்பாற்றும் என்று கனவு காண்பதிலும் பிரயோசனமில்லை. பலம்வாய்ந்த நாடுகள் மனித உரிமை குற்றச்சாட்டுக்களை தங்களது சொந்த தேசிய நலன்களுக்காக பயன்படுத்திய காலம் இன்று மலையேறி கொண்டிருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் சாதாரண மக்கள் இலங்கையை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு, அந்த நாடுகளின் ஊடகங்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றன. அதேபோல் இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கின்ற அரசாங்கங்களை சாராத மனித உரிமை அமைப்புகள் இலங்கை பிரச்சனையை தமது கரங்களில் எடுத்துள்ளன.

எனவே இனிமேல் இந்தியாவின் மத்திய அரசாங்கம் விரும்பினாலும் கூட கடந்தகாலங்களை போல இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து காப்பாற்ற முடியாது.

இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய ஒரே வழி, குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நேர்மையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும்தான்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/21358-2011-05-14-07-36-16.html

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய ஒரே வழி, குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நேர்மையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும்தான்."

ஆகா!

  • தொடங்கியவர்

"இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய ஒரே வழி, குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை ஆரம்பிப்பதும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நேர்மையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும்தான்."

சீனா, பாகிஸ்தான், ஈரான் மேற்ரும் உருசியா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு மேலே கூறப்பட்டுள்ள இரண்டும் தேவையாக உள்ளது.

1. மகிந்த குடும்பம் உட்பட்ட அவர்களின் நீண்ட ஆட்சிக்காலத்தை இல்லாமல் செய்வது (போர்குற்றம்)

2. தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது ( தமது பூகோள நலன்களை பேணுதல்)

இந்த உலக நலன்களுக்குள் எமது தமிழ்த்தேசிய நலன்களை வெல்லவேண்டும்.

இந்தியாவினால் கண்ணை மூடிக்கொண்டு இலங்கையைக் காப்பாற்றிவிட முடியாது என்ற கருத்து உண்மையானது. அறிக்கை வெளிப்படுத்தப்படாதிருந்தால் இந் நிலை சாத்தியம். அதற்கான காலம் கடந்துவிட்டது. உள்நாட்டு விசாரணைகளும் சர்வதேச நிறுவனங்களை திருப்திப்படுத்துவனவாக இருக்க வேண்டும். உள்நாட்டு விசாரணை என்பது முதற்படி. அது படிப்படியாக சர்வதேச விசாரணைகளை நோக்கித்தான் செல்லும்.

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் (UN Security Council) நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேவேளை பல மனிதநேய அமைப்புக்களும் "இந்தியா இன்னொரு சீனா" என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

இலங்கை விடயத்தில் ஒரு நியாயமான தீர்வை முன்வைத்தும் முடிந்தளவுக்கு போர்க்குற்றவாளிகளை தண்டித்தும் அந்த எதிர்ப்பை குறைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.