Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் நீதியரசர் அசோக டி சில்வாவின் மிரட்டல்; மஹிந்தருக்கு அடுத்த தலையிடி

Featured Replies

ஈழநாதம்

கொழும்பு நிருபர்

திங்கட்கிழமை, மே 16, 2011

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சேவை நீடிப்பு வழங்கப்படாத நிலையில் அண்மையில் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவுக்கு ராஜதந்திரப் பதவி ஒன்றினை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு தலைமை தீர்மானித்திருந்த நிலையில், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தன.

.

அசோக டி. சில்வா பிரதம நீதியரசராகக் கடமையாற்றிய இறுதிக் காலப் பகுதியில் அவரால் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் எரிச்சலும் சீற்றமும் கொண்டிருந்த சிறிலங்கா அரசு தலைமை, அவருக்கான சேவை நீடிப்பை நிராகரித்திருந்ததுடன் ஓய்வு பெற்ற பின்னர் அவரை எந்த உயர் பதவியிலும் நியமிப்பதில்லை என்றும் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் அவருக்கு இராஜதந்திர பதவி ஒன்றினை வழங்க அதே தலைமை திடீரென முடிவு செய்தது.

..

தான் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் சர்வதேச நீதிமன்றங்களில் தோன்றி வழக்காடப் போவதாக அசோக டி சில்வா அண்மையில் திடீர் அறிவிப்புச் செய்ததன் காரணமாக அதிர்ந்து போன சிறிலங்கா அரசு தலைமை, அவரைச் சமாளித்து தனது வழிக்குக் கொண்டு வரும் வகையிலேயே இராஜதந்திர பதவியை வழங்கத் தற்போது முன்வந்தது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

.

அவ்வாறு அவர் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்காடும் பணியை ஆரம்பித்தால் சிறிலங்கா அரசுக்கு எதிராகத் தொடரப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் வழக்குகளுக்கு ஆதரவாக அவர் வாதிடலாம் அத்துடன் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றமை குறித்த தகவல்களையும் சர்வதேசத்தில் அவர் பகிரங்கப்படுத்தலாம். மேலும் இலங்கை அரசு தொடர்பில் சர்வதேச ரீதியாகப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் முடியும் என்பதற்குமாகவே அவற்றினைத் தடுக்கும் வகையில் இந்தத் திடீர் அக்கறை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

.

இது குறித்து ஜனாதிபதி செயலக வட்டாரங்களுடன் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த விடயங்களை மறுக்காத நிலையில், தற்போது சிறிலங்கா அரசுக்கும் அரசு தலைமைக்கும் இரண்டு சரத்களும் இரண்டு சில்வாக்களும் மேலதிக தலையிடிகளாக உள்ளனர் என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

.

முன்னாள் இரணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மற்றும் அண்மையில் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரே அந்த நால்வரும் எனத் தெரிவித்தார்.

.

இந்த நால்வரினாலும்; உள்ளுரிலும் சர்வதேசத்திலும் இலங்கை அரசுக்கும் அரசு தலைமைக்கும் பாரிய தலையிடி ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையும் உள்ளது.

.

இந்த அடிப்படையில் உங்களுக்குக் கிடைத்த தகவலை எவ்வாறு மறுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

.

களனி தொகுதியில் 25 தற்கொலையாளிகளைத் தான் தயார் செய்திருப்பதாகவும் அவர்களை பான் கீ மூனுக்கும் அவரது நிபுணர் குழுவைச் சேர்ந்த மூவருக்கும் எதிராகப் பயன்படுத்தப் போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்த கருத்துகள் சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை தெரிந்ததே.

Bookmark/Search this post with:

My link

என்னத்தைப் பயப்படுவது. ஆளைப் பிடித்து உள்ளுக்குள் போட வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.