Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நம்பிக்கை தந்த வெற்றி! - தமிழக ஆட்சி மாற்றத்தால் இலங்கைத் தமிழர்கள் உற்சாகம் -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

41385082.jpg

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்துள்ளதால் இலங்கைத் தமிழர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஜெயலலிதாவால் இலங்கை தொடர்பான இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் வரும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றன. ‘எங்களைக் காப்பாற்றுங்கள்’ என ஈழத் தமிழர்களும், ‘போரை நிறுத்த உதவி செய்யுங்கள்’ என்று தமிழகத் தமிழர்களும் மத்திய ஆட்சியாளர்களிடம் மாறி, மாறி வேண்டுகோள் விடுத்தபோதும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

ஈழத் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசின் தாக்குதல்களுக்கு பலியாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி டெல்லியில் தன் குடும்ப த்தினருக்கு பதவி வேண்டி காங்கிரஸை கெஞ்சிக் கொண்டிருந்தார். இந்த வருத்தமும், கோபமும் ஈழ மக்களுக்கு இன்னமும் தீரவில்லை. அதனால், நடந்து முடிந்த சட் டமன்றத் தேர்தல் முடிவுகளை அவர்கள் ஆர்வமாய் கவனித்தனர்.

இலங்கை தொலைத்தொடர்பில் தமிழகத் தேர்தல் முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. தேர்தல் முடிவுகளை வெளியிட இலங்கை வானொலிகளின் இடையே கடும் போட்டி நிலவியது. ரூபவாஹினி சேனலைத் தவிர, ஐ.டி.என். ஸ்ரீலங்கா உள்ளிட்ட சேனல்களிலும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பெரிய தோல்வியைச் சந்தித்தது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறுகையில், “தேர்தல் பிரசாரங்களின் போது ‘ஈழத் தமிழர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்’ என ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். எனவே ஈழத் தமிழர் பிரச்னைகள் தொடர்பாகவும், அரசியல் தீர்வு குறித்தும் ஜெயலலிதாவுடன் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும்.

மேலும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுத் தர இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி ஜெயலலிதாவை வலியுறுத்துவோம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் இரா.சிவசந்திரன், ‘‘ஈழத் தமிழர்கள் கடந்த 62 வருடங்களாக சிங்கள அரசிடம் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். உடன்படிக்கை என்ற பேரில் பலமுறை ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

உச்சகட்டமாக 2009 மே மாதம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் குண்டுகளாலும், கனரக ஆயுதங்களாலும் படுகொலை செய்யப்பட் டனர். உலக மனச்சாட்சியை உறுத்தும் இந்த சம்பவத்தை ஜ.நா. சபை அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கின்றது.

இன்று அ.தி.மு.க.வின் அமோக வெற்றி எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. இலங்கையில் தமிழரைக் கொன்று குவித்தவர் பக்கம் நின்று துரோகம் இழைத்த தி.மு.க.வை துடைத்து எறிந்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத்தமிழர் மீது அவர்கள் கொண்ட பந்தம், பாசம், உறவுதான் அதற்குக் காரணம்.

ஈழத்தமிழர்கள் நாங்கள் ஜெயலலிதா ஆட்சியை வாழ்த்துவதோடு எங்கள் விடுதலைக்காக அவரது உதவியை நாடி நிற்கின்றோம். ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சி, ஈழ த்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்கள் சுதந்திர ஈழத்தில் வாழ வழி ஏற்படுத்தித் தர வேண்டும். உலகெங்கும் நாதியற்று பரந்துள்ள தமிழரை தலைநிமிரச் செய்ய வேண்டும். அவர் செய்வார் என நம்புகிறோம்’’ என்றார் வார்த்தைகளில் நம்பிக்கை தெறிக்க.!

ஜெயலலிதாவுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவையும் வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ‘‘ஈழத்தில் நடந்த உரிமைப்போரில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் இறுதிப்போரில் மட்டும் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழத்தில் தமிழினம் ஒரு முக்கிய வாழ்வுரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆறரைக்கோடி மக்களின் தலைமையை ஏற்கவுள்ள தாங்கள் (ஜெயலலிதா), ஈழத்தமிழ் மக்களின் நீதிப் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பீர்கள் என நம்புகின்றோம்.

ஈழத்தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்பதை நீங்கள் அங்கீகரித்தீர்கள். போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அரசியல் தலைவர்களுள் தாங்கள் மிக முக்கியமானவர். தமிழ்நாட்டுத் தேர்தலின் பின்னரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தாங்கள் அறிக்கை வெளியிட்டிருந்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த தங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்படு வீர்கள் எனவும், வேண்டுமானால் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளதையும் நாங்கள் வரவேற்கிறோம்.

எனவே தங்களது எதிர்கால செயற்பாடுகள், ஈழத்தமிழ் மக்கள், மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகின்றோம்’’ என தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்றுள்ள நிலையில், ஈழத் தமிழர் நிலைப்பாட்டில் இதுவரை இந்தியா கடைப்பிடித்த வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றத்தினைக் கொண் டுவர வாய்ப்புள்ளதாக இலங்கை வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

“தமிழகத்தில் தான் சந்தித்த படுதோல்வியினை சரி செய்யவேண்டிய கட்டாயம் காங்கிரஸிற்கு உள்ளது. எனவே ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கும்’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள் ஈழத் தமிழர்கள்.

புதிதாக பதவியேற்கவுள்ள ஜெயலலிதா அரசு, சட்டமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதும் ஈழ ஆதரவாளர்களின் வேண்டுகோள். இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்காக ஜெயலலிதா அதைச் செய்வார் என நம்புவோம்!

ப. திருமலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா இந்த வெற'றியைத்தமிழர்களுக்குச் சரியாகப்பயன்படுத்தவில்லையெனின் அடுத்த தேர்தலில் இவரும் திமுக போல் ஓரம் கட்டப்பட்டு புதிதாக உருவாகும் நாம் தமிழர் இயக்கமோ அல்லது விஜயகாந்தோ ஆட்சியைப்பிடிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.