Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதா ரணில் உரையாடல் மகிந்தாவின் ஓய்வைக் குலைத்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ரணில் உரையாடல் மகிந்தாவின் ஓய்வைக் குலைத்துள்ளது.

Posted by சோபிதா on 23/05/2011 in செய்தி | 0 Comment

மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம்.

முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொடர்பில் கருணாநிதியின் மகள் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி இழுத்தடித்தபோதும், உயர் நீதிமன்றம் 43 வயதான கனிமொழியை திஹார் சிறையில் தள்ளியுள்ளது. சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறை போன்றது திஹார் சிறை. அது மட்டுமல்லாது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சோனியா காந்தி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகும் சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. புதுடில்லி மேற்கொள்ளும் தீர்மானங்களை வழிநடத்துவதில் சில தசாப்தங்களாக தமிழக அரசு காத்திரமான பங்கை கொண்டுள்ளது. அவர்கள் தேசிய நாடாளுமன்றத்திலும் காத்திரமான அழுத்தத்தை கொண்டுள்ளனர்.

தமிழக மக்களின் வாக்கு வங்கியை அதிகம் கவர்ந்துள்ள அ.தி.மு.கவின் பக்கம் சார்ந்து நிற்பதற்கு காங்கிரஸ் கட்சி விரும்புகின்றது. ஆனால் போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா மீதான விசாரணைகள் அவசியம் என ஜெயலலிதா உறுதியக உள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (19) ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தார். ஆனால் ஜெயலலிதா அங்கு இருக்கவில்லை. எனினும் பின்னர் ஜெயலலிதா ரணிலுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தார்.

ஜெயலலிதாவுடன் நீண்ட காலமாக ரணில் தொடர்புகளைப் பேணி வருகின்றார். ரணிலை தமிழகம் வருமாறும் அவர் அழைத்துள்ளார். எனினும் நீங்கள் ஓய்வாக இருக்கும்போது தான் வருகிறேன் என ரணில் பதில் அளித்திருந்தார். ஆனால் இந்த உரையாடல் மகிந்தாவின் ஓய்வைக்குலைத்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாகவே சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார். ஆனால் அது வெற்றிபெறவில்லை.

மகிந்தா அரசு வெளிநாடுகளில் மட்டுமல்லாது, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலையை சந்தித்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:eelam press.

முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ரணில் விக்கிரமசிங்கே சென்னை வருகிறார்?

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ரணிலும் ஏற்றுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

ரணில் சென்னை வருவது உறுதியானால், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் இலங்கைத் தலைவர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கே தரப்பில் கூறுகையில், சென்னைக்கு வருமாறு ஜெயலலிதாவிடமிருந்து ரணிலுக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் அதை ஏற்றுள்ளார். இருப்பினும் எப்போது முதல்வர் ஜெயலலிதாவை ரணில் சந்திப்பார் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/05/23/ranil-meet-tamil-nadu-chief-minister-jayalalitha-aid0091.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.