Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவதா? – பழ நெடுமாறன் கண்டனம்

Posted by சங்கீதா on 23/05/2011 in செய்தி | 0 Comment

நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதியானது என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிஐ கைது செய்திருக்கிறது. எனவே, சிபிஐ வேண்டுமென்று செய்தது எனக் குறைகூறுவது சரியல்ல.

கனிமொழி குற்றம் செய்யவில்லை என்று சொன்னால், அதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு வெளிவருவதுதான் சரியாக இருக்கும். கனிமொழி கைதுக்கு உள்நோக்கம் கற்பிப்பது குற்றம் உள்ள நெஞ்சின் குறுகுறுப்பைக் காட்டுகிறது.

தன் மீதும், தனது குடும்பத்தின் மீது வஞ்சகம் தீர்க்கும் படலத்தை சிறப்பாக சிலர் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று கூறும் கருணாநிதி, வஞ்சகம் செய்தவர்களை பகிரங்கமாக வெளியில் கூற வேண்டும்.

அலைக்கற்றை விவகாரத்தில் கைதாகி சிறையிலுள்ள கட்சியின் கொள்கை விளக்க பிரசார குழுச் செயலரான ஆ. ராசாவை பார்க்கச் செல்ல விரும்பாதவர், மகளைப் பார்க்க மட்டும் செல்கிறார்.

தமிழகத்தில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளுக்கு உரிய தண்டனையை அனுபவிக்கிறது. மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.

இலங்கைக்கு தமிழகத்தலிருந்து மின்சாரமா?

எனவே, புதிய அதிமுக அரசு நல்ல அரசாகத் திகழ வேண்டும். நெய்வேலியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் நிலக்கரியை வெட்டியெடுத்து, தமிழகத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல், தமிழர்களைப் படுகொலை செய்து, மிகப்பெரிய அநீதியை தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு வழங்குவது மிகப் பெரிய அநீதியாகும்,” என்றார் நெடுமாறன்.

source:eelam press.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதலாவது இடத்தில் மக்களின் தேர்தல் விடயமாக இருந்தது - மின்சாரப்பற்றாகுறை. அதன் காரணமாக தமிழகம் தனது தொழில்திறன் வலுவையும் ( porductivity) இழந்து வந்துள்ளது.

அப்படியிக்கும் பொழுது சிங்களத்திற்கு மின்வவலுவை வழங்க காரணம் நிச்சயம் காங்கிரஸ் ஆகத்தான் இருக்கமுடியும். இதன் மூலம் தமிழரின் வளர்ச்சியை குறைக்கலாம், சிங்களத்தை தனது அரவணைப்புக்குள் வைத்திருக்கலாம்.

பாவம் தமிழ்தேசியவாதம், முடிந்தால் உனக்கு மகாத்மா காந்திக்கு பக்கத்தில் ஒரு சிலை தான் மிஞ்சும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.