Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வெள்ளைக்கொடி' விவகாரத்தை அம்பலப்படுத்திய பிரசன்ன இலங்கையிலிருந்து தப்பினார்: மகிந்தவுக்கு புதிய நெருக்கடி

Featured Replies

சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுத்துள்ள வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தகவல் கொடுத்த ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடகவியலாளர் பிரசன்ன கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகியதையடுத்து சுவிட்டசர்லாந்துக்குத் தப்பிச் சென்று அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவரே வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவுக்கு முதன் முறையாகத் தகவலைக் கொடுததிருந்தார்.

வன்னி இறுதி யுத்தத்தின் போது கள நிலவரம் தொடர்பான தகவல்களை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்புவதற்காக இவர் இராணுவ ஆதரவுடன் வன்னிக்கு அனுப்பப்பட்டடிருந்தார்.

கோதபாய ராசபக்சவுடன் அவரின் அலுவலகத்தில் பிரசன்ன இருந்த போதே வன்னியிலிருந்த இராணுவ கட்டளை தளபதிக்கு வெள்ளைக்கொடியுடன் வரும் விடுதலைப்புலி தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார் என தெரியவருகிறது.

சரத் பொன்சேகாவிற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன பின்னர் இவ்விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறியிருந்தார். இந்த விடயத்தையே சண்டே லீடர் ஆசிரியரிடம் பேசும் போது தான் தனிப்பட்ட ரீதியில் கூறியதாக சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் ஊடகவியலாளர் பிரசன்ன ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராசபக்ச பிரசன்னாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் ஓ பிளேக்கின் உதவியுடன் நேபாளத்திற்கு வந்த பிரசன்னவுக்கு சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சுவிட்சர்லாந்திருந்து கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ஷ மற்றும் மகிந்த ராசபக்ஷ குடும்பத்தினரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இவர் அமெரிக்க மற்றும் சுவிஸ் அதிகாரிகளுக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவுக்கும் இந்த நாடுகள் ஊடாக சில ஆவணங்கள் உட்பட அறிக்கை ஒன்றையும் வழங்கியிருந்தார்.

சுவிட்சர்லாந்தில் அதிகாரிகளிடம் பிரசன்ன அளித்த வாக்கு மூலத்திலும் வெள்ளைக்கொடி விவகாரத்தை தான் சரத் பொன்சேகாவிற்கு கூறியதன் காரணத்திற்காகவே கோதபாய ராசபக்ஷ தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

தற்போது பிரசன்ன சுவிட்சர்லாந்து செங்காளன் மாநிலத்தில் அதிகாரிகளால் குடியமர்த்தப்பட்டுள்ளார். இவரிடம் வன்னியில் இறுதிக்கட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களும் உள்ளதாக தெரியவருகிறது. இலங்கையைவிட்டு இவர் தப்பிவந்திருப்பது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக மகிந்த குடும்பத்தினருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் எனக் கருதப்படுகின்றது.

http://pooraayam.com/mukiaya/2078-2011-05-27-02-29-52.html

Edited by ஊர்பூராயம்

இந்த தப்பிச்சென்ற ஊடகவியலாளர்களின் முழுப்பெயரை முடிந்தால் இணைத்துவிடவும். நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.