Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிடவுள்ள புதிய ஆதாரமான இராணுவத்தின் யுத்தக் குற்றக் காணொளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 வெளியிடவுள்ள புதிய ஆதாரமான இராணுவத்தின் யுத்தக் குற்றக் காணொளி!

புதன், 01 ஜூன் 2011 08:04

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் 14ம் திகதி புதிய யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிடவுள்ளது.

போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போடும் கொடூரக் காட்சிகள் அடங்கிய காணொளியை சனல் 4 வெளியிடவுள்ளது.

இம்மாதம் 14ம் திகதி வெளியிடவுள்ள புதிய யுத்தக்குற்றக் காணொளி வெளியீடு சுமார் 1 மணித்தியாலம் நடைபெறவுள்ளது. இந் நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மனிதஉரிமை பேரவையின் கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share0

tamilenn

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி இரவு 11.05 க்கு உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.

ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது. இது ஜெனீவாவில் உள்ள U .N அலுவலகத்தில் இத் திரைப்படம் ஜூன் 3 , 11 .00 மணிக்கு Room XXII (22) திரையிடப்படும்

மேலும் இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச் சாட்சியங்கள் போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போட்டும் இலங்கை இராணுவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது என சில இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இலங்கை அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றைய கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டு வருகின்ற போதிலும், அவை உண்மையானவை என்றும் இலங்கை அரசு பொய் கூறுகின்றது என்பதும் ஐ.நா முதல் யாவரும் அறிந்ததே.

மேலதிக விபரங்கள்:

http://akkinikkunchu.com/new/

http://www.channel4.com/info/press/news/un-premiere-for-sri-lanka-war-crimes-film

1. http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bckey=AQ~~,AAAAAEabvr4~,Wtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&bctid=969548726001

2. கோத்தாவிடம் உத்தரவுகளைப் பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களா புது ஆதாரம்? - நாம் தமிழர் பேரியக்கம்

இலங்கையில் ஈழத் தமிழினத்துக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும் ! அங்கே எமது இளையோர்களைக் கொண்ற சிங்கள வெறியர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெறவேண்டும் ! அதுவரை உலகத் தமிழர்கள் ஓயமாட்டார்கள். தற்போது நாம் இருக்கும் நிலை "சுடலை ஞானம்" என்ற நிலையாகும். புரியவில்லையா ? அதாவது யாராவது செத்துப்போனால் சுடலை சென்று அழுவதும், பின்னர் வீடு திரும்பியதும் குழித்துவிட்டு எமது வேலைகளைப் பார்க்கத் தொடங்கி நடந்தவற்றை மறந்து சிரித்து சல்லாபிக்கும் ஒரு நிலையில் நாம் நிற்கிறோம். உணர்ச்சி, பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, கொல்லப்பட்ட தமிழர்களின் நிலை இவை அனைத்தையும் நாம் மனதில் நிறித்தி எப்போதும் நீதி கிடைக்க உழைக்கவேண்டும். அதனூடாகவே விடுதலையும் கிட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.