Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியிலும் மன்னம் பிட்டியிலும் இனம் புரியாத இரு கொலைகள்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலும் மன்னம் பிட்டியிலும் இனம் புரியாத இரு கொலைகள்:-

13 ஜூன் 2011

கிளிநொச்சிப் பகுதியில் காவற்துறையினா ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்பகுதியிலுள்ள தேனீரகம் ஒன்றில் பணியாற்றி

வந்த 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சிப் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும்

27ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த உணவு விடுதிக்குச்

சென்ற காவற்துறையினர் அப்பகுதியில் அடாவடியில் ஈடுபட்டதாகவும் இதையடுத்து ஏற்பட்ட

கைகலப்பிலேயே 5 பேரும் தாக்கியதில் காவற்துறை கான்ஸ்ரபிள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து காவற்துறையினரின் சீருடைகள் என்பவற்றை

அப்பகுதியிலிருந்து அகற்றிய நபர்கள் அவரது சடலத்தை ஓட்டோ ஒன்றில்

ஏற்றிச்சென்று கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வீசியதாகத் தெரியவருகிறது. இவரிலிருந்து அகற்றப்பட்ட சீருடை அப்பகுதியிலுள்ள ஆட்கள்

நடமாட்டமற்ற மலசலகூடக் குழி ஒன்றில் வீசப்பட்டிருந்தது.

காவற்துறையினர் உயிரிழந்த

குறித்த காவற்துறை கான்ஸ்ரபிளின் மரணம் தொடர்பில் மேற்படி ஐவரையும் கைது

செய்தனர். விசாரணையை அடுத்து அவர்களால் வீசப்பட்டிருந்த உயிரிழந்த காவற்துறையினரின்

சீருடையும் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே விசாரணைகள் தொடர்கின்றன.

கிளிநொச்சியிலும் மன்னம் பிட்டியிலும் இனம் புரியாத இரு கொலைகள்:-

13-06-2011- 1:43வன்னிப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்ந்த பகுதிகளில் அண்மைக்காலமாக படையினர் மற்றும் காவற்துறையினர் தன்னிச்சையாக மக்களிடையே சென்று அவர்களை

அச்சுறுத்துவதும் அவர்களின் முறைப்பாடுகள் தொடர்பிலான சம்பவங்களின் மத்தியிலேயே

இந்தக் கொலை இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது.

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றதாகக் கூறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றில் பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 41 வயதுடைய ஆனந்த சமரக்கோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏ9 வீதியில் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வீதியோரமாக இன்று இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது முன்னர் உயிரிழந்தவரின் சடலம் பொதுமகன் ஒருவரின் சடலம் எனக் கூறி கிளிநொச்சி பொலிசால் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எனினும் தமது பொலிசார் காணாமல் போயுள்ளதாக பொலிசாரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பின்னர் அவரது சடலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்ரபிள் ஒருவருடைய சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. திடீர்ரென வீதி விபத்தில் இவர் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. எனினும் சுயாதீனத் தகவல்கள் இவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் அடிகாயங்கள் பரவலாகக் காணப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட சடலம் தற்போது கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றது. இரவு வேளைகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய வேளையில் இவர் படுகொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகங்களும் கிளிநொச்சி மக்களிடையே எழுந்திருக்கின்றது.

லெப்பிடினட் கேர்ணல் எம்.டி. லேதோர மரணம் குறித்து தீவிர விசாரணையாம்:-

தலைமைத்துவ பயிற்சியை முடித்து கொண்டு பல்கலைக்கழக மாணவர் வெளியேறும் வைபவத்தில் கலந்துக்கொண்டு விட்டு, திரும்பும் வழியில் தேசிய மாணவர் படையணியின் 13வது பிரிவின் கட்டளை அதிகாரி லெப்பிடினட் கேர்ணல் எம்.டி. லேதோர என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிகாரி நேற்றிரவு தம்புள்ள- மன்னம்பிட்டிய பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தம்புள்ள பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட இந்த இராணுவ அதிகாரியின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கண்ணாடி துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரன்தம்பை இராணுவ பயிற்சி பாடசாலையில் இருந்து, திரும்பிக்கொண்டிருந்த அவர், தான் இறங்க வேண்டிய இடத்தை கடந்து, சுமார் 3 கிலோ மீற்றருக்கு அப்பால் சென்று இறங்கியுள்ளார். இது குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.