Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களாக அல்லது இவர்களாக இருக்கலாம்

Featured Replies

அளவெட்டியில் தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களாக அல்லது இவர்களாக இருக்கலாம்

அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய படையினரை தம்மால் அடையாளம் காட்ட முடியும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இவர்களின் இந்த அறிவிப்பு குற்றவாளிகளை இனங்காண்பதற்கு மிகவும் உதவியாக அமையும்.

ஆனால் குற்றவாளிகளை இனங்காண்பதற்கு அவர்களைக் கைது செய்வது யார்? என்ற கேள்விக்குள் எல்லாமே மெளனமாகிவிடும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்திற்குள் நுழைந்து பொதுமக்களை கண்டபாட்டில் தாக்கியவர்களை இனங்காண்பதும் அவர்களைக் கைது செய்வதும் படையினருக்கு அவ்வளவு கடினமான காரியமன்று. ஏனெனில் அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் நடைபெறும் அத்தனை விடயங்களையும் புலனாய்வுக் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் கலாசாலை ஒன்றில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டைக் கூட எதற்காக நடைபெறுகிறது? ஏன் நடைபெறுகிறது? என துருவித்துருவி படையினர் ஆய்வு செய்துள்ளனர்.

இதுபோல வேறு சம்பவங்களையும் குறிப்பிட முடியும். இதன்மூலம் தமிழ் மண்ணில் மாணவர்கள் ஒரு புத்தக வெளியீட்டைக்கூட சுதந்திரமாக நடத்த முடியாது என்ற செய்தி நிரூபிக்கப்படுகின்றது.

இவையயல்லாம் பாதுகாப்புக் கருதிய நடவடிக்கை என்பதன் ஊடாக படையினர் இவற்றை நியாயப்படுத்தும் போது, யாரை யாரிடமிருந்து பாதுகாத்தல் என்ற வினா எழுவதில் தவறில்லை. மக்களைப் பாதுகாப்பதற்காகவே புத்தக வெளியீடு என்ற ஒரு வழமையாக நிகழ்விலும் தலையீடு இருக்குமாயின்,

அளவெட்டியில் நடந்த சம்பவம் முன்கூட்டியே அறியப்படாமல் போனமைக்கான காரணம்தான் என்ன?

அளவெட்டியில் நடந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை விசாரணைகள் மூலம் கண்டறியப்படும் வரை தாக்குதல் நடத்தியவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கப்போகின்றனர் என்பது மிகவும் பயங்கரமான நிலை.

எனவே இது விடயத்தில் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மிக விரைவாக விசாரணைகளை நடத்தி உரியவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எதுவாயினும் குற்றம் செய்தவர்களைத் தவிர வேறு எவரும் தண்டனை அனுபவிக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதும் அவசியம்.

அதேநேரம் குற்றவாளிகள் அவர்களாக இருக்கலாம். இவர்களாக இருக்கலாம் என்ற அனுமானங்கள், இன்னும் குற்றவாளிகள் உருவாகுவதற்கும் வாய்ப்பைத் தந்துவிடும்.

ஆகையால், குற்றவாளிகளை கண்டறிவது அவசியமும் அவசரமுமாகும்.

இல்லையேல் யாழ்ப்பாணத்தில் சுமுகநிலை என்பது கேள்விக்குறியாகிவிடும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20377

கூத்தமைப்பினர் இந்த விவகாரங்களை சர்வதேச பாராளுமன்ற அமைப்பிடம் கொண்டு செல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.