Jump to content

வானில் ஒரு யுகப்புரட்சி


Recommended Posts

Jun 26, 2011

பிரான்சை மையமாகக் கொண்டியங்கும் ஐரோப்பிய வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையம் [European Aeronautic Defence and Space Company (EADS)] வான் வழித் தட வரலாற்றில் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகியுள்ளது.

ஒரு விமானம் மணிக்கு 5000 கிவோமீற்றர் வேகத்தில் பறந்து 0%மான எரிபொருள் எச்சத்தை வான்வெளியில் கசிய விடுமாயின் அதுவே இன்றைய ஐரோப்பிய சூழல் பாதுகாப்பு மையத்தினதும் வான் போக்குவரத்துத் துறையினரும் கண்டு வரும் மாபெரும் கனவாகும்.

eads6.th.jpg

இந்தக் கனவிற்கு EADS ஒரு முழுமையான வடிவம் கொடுத்துள்ளனர். கனவு மெய்ப்பட்வேண்டும் என்ற பாரதி வாக்கு மீண்டும் பிரான்சில் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இதுவரை காலமாக அதியுச்ச வேகச்சாதனை படைத்த Supersonic Concorde விமானம் தனது சேவையை முற்றுமுழுதாக நிறுத்தியிருக்கும் நிலையில் Hypersonic விமானம் உருவாக்கும் நடவடிக்கையின் முக்கிய கட்டத்தைத் தாண்டியுள்ளனர்.

இந்த விமானம் Mach4 முதல் Mach5 வேகத்தில் அதாவது ஒலியின் நான்கு மடங்கு வேகத்தில் மணிக்கு 4800 முதல் 6000 கிலோமீற்றர்கள் பறக்கக்கூடியது. Concorde விமானம் Mach2.2 (2700 km/h) வேகத்தைத் தாண்டியதில்லை.

Hypersonic விமானம் Paris Tokyo தூரத்தை வெறும் இரண்டரை மணித்தியாலங்களுக்குள் கடக்கக்கூடியது. இந்தத் தூரம் தற்போதைய அதிவேகப்ப பயணத்தில் பண்ணிரண்டரை மணிநேரங்களில் மட்டுமே செல்லக்கூடியதாகவுள்ளது. இந்த மாதிரி வடிவம் நாளை Le Bourget விமானக் கண்காட்சியில் பிரான்சின் அதிபர் நிக்கோலா சார்க்கோசி அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதன் மாதிரி வடிவ இலக்கம் ZEHST, pour Zero Emission HyperSonic Transportation என வழங்கப்பட்டுள்ளது.

EADS மற்றும் பிரயாணிகள் போக்குவரத்து நிர்வாகம் (direction générale de l’aviation civile (DGAC), மற்றும் ORENA ஆகியோரின் கூட்டு முயற்சியில் 60 முதல் 100 பிரயாணிகள் பயணிக்கக் கூடியதான விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஜப்பானிய வான்வெளி தொழில்நுட்ப மையமும் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

இது பொதுமக்களின் சாதாரண பாவனைக்குப் பரவலாக 2050ஆம் ஆண்டில் பாவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது உயிரியல் வாயு (biocarburants) மற்றும் Hydrogène, Oxygène சக்திகள் மூலம் இயங்கும் சக்தி பிறப்பாக்கிகள் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகின்றது.

சாதாரண பயணிகள் விமானத்தினால் எட்ட முடியாத உயரமான கடல் மட்டத்திலிருந்து 32கிலோ மீற்றர் உயரத்தை இவ்விமானம் எட்டுமெனத் தெரிகின்றது. பயணிகள் விமானம் 11 கிலோமீற்றர் உயரத்தைத் தாண்டியதில்லை. 32கிலோ மீற்றர் உயரத்தில்ப பூமியின் வனிமண்டலத்திற்கு மேலேயே பறப்பதால் இந்த விமானம் சிறிதளவு எச்சத்தை வெளியேற்றினால் கூட அது எமது வளிமண்டலத்தை மாசுபடுத்தப் போவதில்லையென EADS தொழில்நுட்பப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விமானத் தயாரிப்பு முழுமூச்சுடன் இயங்குமானால் 2020ல் பரீட்சார்த்த விமானம் தயாரிக்கப்பட்டு 2030ல் முழுமையான சேவைக்கு வழங்கமுடியும் எனத் தெரிவித்துள்ளனர். இவ்விமானத்தின் பயன்பாடு முதலில் பெரும் தொழிலதிபர்களையும் முக்கிய பிரமுகர்கiயுமே சென்றடையும். ஆரம்பத்தில் இதன் பிரயாணச் செலவுகள் 6000 முதல் 8000 யூரோக்கள் வரை இருக்குமாதலால் சாதாரணப் பயணிகளை முதலில் சென்றடைவது கடினமாக இருக்கும்.

eads5.th.jpg

eads4.th.jpg

URL=http://img843.imageshack.us/i/eads2.jpg/]eads2.th.jpg

http://www.pathivu.com/news/17120/57/.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது. இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது. எங்களது எண்ணத்திற்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மிகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியும் ஆகியவற்றை தலைநகராக வைக்க வேண்டும்\” இவ்வாறு அவர் பேசினார்.   https://akkinikkunchu.com/?p=292308
    • தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு! தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம்  எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களிப்புக்கு  712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில்  6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  கூறினார். https://athavannews.com/2024/1400450
    • ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள-தேர்தல் ஆணைக்குழு! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் உள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு, கம்பஹா, பொலன்னறுவை, திருகோணமலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வன்னி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 40 வீதத்தை தாண்டியுள்ளது. இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 20 வீதத்தை தாண்டியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1400443
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.