Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

429 தடவைகள் நீதிமன்றில் ஆஜர்; ஆனால் இன்னும் இல்லை விடுதலை

Featured Replies

429 தடவைகள் நீதிமன்றில் ஆஜர்; ஆனால் இன்னும் இல்லை விடுதலை; 15 வருடங்களாக சிறையில் வாடும் மட்டு. வாசிகள்

429 தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் 15 வருடங்களாக மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர். இவர்கள் பற்றிய மனதை உருக்கும் கதை இது.

கர்ப்பிணியாக கைதுசெய்யப்பட்ட திருமகள் என்பவரும் இவர்களில் ஒருவர். சிறையில் பெற்றெடுத்த தனது குழந்தை இப்போது எங்கே, எப்படி இருக்கிறார் எனத் தெரியாமல் பித்துப் பிடித்த நிலையில் உள்ளார் என்று நாம் இலங்கையர் அமைப் பின் நிறைவேற்று குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பிறந்து கொழும்பு, தெமட்டகொடையில் வசித்துவந்த திருமகளும், அவரது கணவரும் கடந்த 1996 ஆம் ஆண்டு தெமட்டகொடவில் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் மேலும் மூவர் கைதாகினர்.கைதுசெய்யப்படும்போது திருமகள் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஐவரும் இன்று வரை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

1996ஆம் ஆண்டு முதல் இன்று வரை குறித்த ஐவரும் சுமார் 429 தடவைகள் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கர்ப்பிணியான திருமகள், சிறையில் இருந்தபோது அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 5 வயது வரை நான்கு சுவர் சிறையில் சிறுபிராயத்தை கழித்த திருமகளின் மகன், 5 வயதில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.

ஒப்படைக்கப்பட்ட சில தினங்களில் மகன் பாடசாலையில் சேர்க்கப்பட்டான் என்ற தகவல் திருமகளுக்குக் கிடைத்தது. ஆனாலும், அன்று தொடக்கம் இன்றுவரை மகன் தொடர்பாக வேறெந்த தகவலும் திருமகளின் காதுகளுக்கு எட்டவில்லை. திருமகள் அன்று தொடக்கம் பித்துப் பிடித்தவள் போல நான்கு அறை சிறையில் காலத்தை கடத்தி வருகிறார்.

உற்றார், உறவினர் இருந்தபோதிலும், சிறைச்சாலை வந்து பார்க்கும் அளவுக்கு எவரும் முன்வரவில்லை. அத்துடன், திருமகளின் கணவரும் அதே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவருடன் கைதான மூவரும் அவருடனேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 வருடங்களாக சிறைக்குள் வாழ்வைக் கழித்துவரும் திருமகள் உட்பட ஐவர் தெஹிவளை குண்டுத் தாக்குதலுக்கு உதவி புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் கைதுசெய்யப்பட்டு, 15 வருடங்களாக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டும், இன்றும் வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும்போது இன்று நீதி கிடைக்குமா? இன்றாவது விடுவிப்பார்களா என்ற எதிர்பார்ப்புகளுடன் செல்லும் திருமகளின் மனம் நீதிமன்றித்திலிருந்து வெளியேவரும்போது மரத்துவிடுகிறது. இவ்வாறே கடந்த 15 வருடங்களாக நிகழ்ந்து வருகின்றது. இவர்களை விடுதலை செய்வதற்கு 15 வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும், திருமகளின் இளமைப் பருவமும், சந்தோஷமும் சிறைச்சாலையிலேயே முடியும் நிலைமை ஏற்படுவதைத் தடுக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏக்கத்துடன் கேள்வி எழுப்புகிறார் திருமகள்.

http://onlineuthayan.com/News_More.php?id=70167388102485954

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.