Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இது எங்களின் நிலம் - வாழ்ந்தாலும் இங்குதான் மரணித்தாலும் இங்குதான்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 08:25 GMT ] [ தி.வண்ணமதி ]

ஐ.நா வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழேயே வாழுகிறார்கள்.

இவ்வாறு ஐநாவின் மனிதார்ந்த செயற்பாட்டிற்கான பணிகளை இணைக்கும் செயலகத்தின் இணையத்தளமான IRIN வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக நிறுவனங்களும் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துவந்தாலும்கூட மீள்குடியேறிய மக்கள் வாழ்வினைத் தொடர்வதற்குத் திண்டாடுவதோடு நிச்சயமற்ற எதிர்காலத்தினை எதிர்கொண்டு நிற்கிறார்கள்.

"ஐம்பது ஆண்டுகளில் நாங்கள் சம்பாதித்த அனைத்தையும் ஓரிரு மாதங்களில் நாங்கள் இழந்து விட்டோம்" என 52 வயதான சுப்பையா ஆறுமுகம் IRIN தளத்திடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த நாட்டினது வடக்குப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கிராமத்திற்கு இவர்கள் மார்ச் 2010ல் திரும்பியிருந்தனர்.

மே 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஏழு மாதங்கள் கடந்த பின்னர் வடக்கின் வசந்தம் என்ற மீளெழுச்சித் திட்டம் என்ற ஒன்றை டிசம்பர் 2009ம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்திருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் வடக்கில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் 120,000 குடும்பங்களில் 29000 குடும்பங்கள் நேரடியாகவும் 56,000 குடும்பங்கள் மறைமுகமாகவும் பயன்பெற்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறுகிறது.

ஆனால் அறுமுகத்தினைப் போன்ற பலருக்கு வடக்கில் மீள்கட்டுமானம் என்பது மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுகிறது.

இடப்பெயர்வுக்குமுன்னர் ஆறுமுகம் அதிகளவிலான கால்நடைகளைக் கொண்ட பண்ணை ஒன்றை வைத்திருந்தார். ஆனால் தற்போது இவர் தனக்கான வருவாயைப் பெறுவதற்குப் படாயப் படுகிறார். அவரிடம் சொத்துக்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. "எனக்கு இன்று வீடில்லை. எட்டுக் கோழியும் ஒரு துவிச்சக்கரவண்டியுமே எனக்குச் சொத்தாக உள்ளன" என்கிறார் ஆறுமுகம்.

அரை நிரந்தர வதிவிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடாக அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராலயம் வழங்கிய 230 டொலர் பணத்தினை வைத்தே கடந்த 15 மாதங்களும் தான் காலத்தினை ஓட்டியதாக ஆறுமுகம் கூறுகிறார்.

தொடர்ந்து உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் சிறிலங்கா அராசாங்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட காசுக்குவேலை நிகழ்ச்சித்திட்டமும் தமக்கு உணவளித்தாக இவர் கூறுகிறார். "வாழ்க்கையே ஒரு போராட்டம்" என மனம்நொந்து தனது கருத்தினைக் கூறினார் ஆறுமுகம்.

மீள்குடியேறிய மக்கள் தமக்கான உடனடி வருமானத்தினைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்த இந்தக் காசுக்குவேலைத் திட்டத்தின்கீழ் 1.6 மில்லியன் வேலை நாளுக்குப் பணம் வழங்கப்பட்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறுகிறது.

இந்தத் திட்டத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு குடும்பத்தவருக்கும் நாளொன்றுக்கு ஐந்து டொலர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிகழ்ச்சித்திட்டத்திற்காக உலக வங்கிய 5 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருந்தது.

ஐக்கிய அமெரிக்க உதவி நிறுவனமும் இதுபோன்ற காசுக்குவேலை என்ற திட்டத்தினை முன்னெடுத்திருந்தது. இதன் கீழ் 7,000 குடும்பங்களுக்கு 250 டொலர்கள் வீதம் வழங்கப்பட்டிருக்கிறது.

யூன் 24ம் நாளன்று ஐ.நா வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழேயே வாழுகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 12 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 0.50 டொலர்களைக்கூட வருமானமாகப் பெறுவதில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் 26 சதவீதமானோருக்கு இதுதான் நிலை.

ஏ9 நெடுஞ்சாலையிலிருந்து 20 கி.மீ தொலைவில் துணுக்காய் அமைந்திருக்கிறது.

துணுக்காயில் அதிகளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றபோதும் ஏ9 வீதியிலிருந்து துணுக்காய்க்குச் செல்லும் வீதி இன்னமும் செப்பனிடப்படவில்லை. குண்டும் குழியுமாகவே இன்றும் இருக்கிறது. துவிச்சக்கரவண்டிதான் இவர்களது போக்குவரத்தின் பிரதான துணை.

துணுக்காய்க்கு அருகேயுள்ள ஆலம்குளம் பகுதியில் வசித்துவரும் 62 வயதுடைய செல்வநாயகி செல்லத்துரை என்ற மூதாட்டி நிதிசார் சுமையினைச் சற்றேனும் தளர்த்தும் வகையில் ஏனைய ஐந்து பெண்களுடன் இணைந்து காய்கறிச் செய்கையில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தப் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களால் நாங்கள் எந்தப் பலனையும் பெறவில்லை என்கிறாள் இவள்.

"அருகிலுள்ள நகரத்திற்குச் சென்றுவருவதற்கு பல மணிநேரங்களைச் செலவிடவேண்டியிருக்கிறது. மின்சார இணைப்புக்களைப் பெறுவதற்கு எங்களிடம் போதிய வசதியில்லை" என செல்வநாயகி IRIN தளத்திடம் கூறினாள்.

"போர் இங்கு மூழுவதற்கு முன்னர் நாங்கள் வாழுவதற்கான வீட்டினையும் தேவையான நீரைப் பெறுவதற்கான கிணற்றையும் கொண்டிருந்தோம். தற்போது அவை எதுவுமே இல்லை" என செல்வநாயகி கூறுகிறாள்.

கூரைத் தகரங்களாலும் களிமண்ணாலும் அமைக்கப்பட்ட ஒரு அறையினைக் கொண்ட சிறியதொரு வீட்டில் இன்னமும் 12 பேருடன் செல்வநாயகி வாழ்ந்து வருகிறாள்.

இவளது கருத்தையே மீள்குடியேறியவர்களில் பொரும்பாலானவர்களும் கொண்டிருந்தனர். இடம்பெயர்வுக்கு முன்னதாக இவர்கள் வாழ்வு உறுதித்தன்மை கொண்டதாகவே இருந்திருக்கிறது. இந்த இடம்பெயர்வுக்கு முன்னான பல பத்தாண்டுகளாக இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவியதுதான் மக்கள் உறுதியானதொரு வாழ்வினைத் தொடர்தமைக்குக் காரணம்.

ஆலங்குளம் போன்ற கிராமங்களுக்கு அபிவிருத்தியென்பது இப்போதுதான் மெல்லக் கிட்டுவதாகவும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்திற்கான அபிவிருத்திப் பணியென்பது மிகப்பெரியளவில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதோடு அது மெதுவாகவே இடம்பெறுவதாகவும் கொடைவழங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

"மீள்குடியேறிய மக்களின் முழுமையான தேவைகள் என்ன என்ற மதிப்பீடு இன்னமும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இங்கொன்றும் அங்கொன்றுமாக முன்னெடுக்கப்பட்டுவரும் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களையோ அன்றி இருக்கும் தேவையினையோ முழுமையாகப் பூர்த்திசெய்யப்போவதில்லை" என உலக வங்கியின் கிராமிய அபிவிருத்தி வல்லுநரான சீனித்தம்பி மனோகரன் கூறுகிறார்.

இறுதிப்போரின்போது தங்களது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்த அறுமுகத்தினது குடும்பம் ஈற்றில் வன்னியின் வடகிழக்குக் கடற்கரையினை அடையும் வரைக்கும் 11 முறை இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

போரின் இறுதி நாட்களில் ஆறுமுகத்தினது ஒரேயோரு மகன் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கத்திடம் சரணடைந்த இவர் தற்போது தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

போரின் இறுதி வாரங்களில் உணவுக்காக் காத்திருந்தபோது அறுமுகத்தினது மருமகன் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். "அங்காங்கே சிதறிக்கிடந்த சதைத் துண்டுகளைத் தவிர அவரது உடல் என எதுவுமே இருக்கவில்லை" என்கிறார் ஆறுமுகம்.

இவ்வாறாக மீள்குடியேறிய ஒவ்வொருவரும் வறுமைக்கோட்டின் கீழ் கடுமையான துன்பங்களுக்கு முகம்கொடுத்து நிற்கின்றபோதும் ஒரு விடயத்தினை மாத்திரம் அனைவரும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள்.

"இது எங்களின் நிலம். வாழ்ந்தாலும் இங்குதான் மரணித்தாலும் இங்குதான். இதுதான் எங்களின் விருப்பம்" என்கிறார் ஆறுமுகம்.

http://www.puthinappalakai.com/view.php?20110707104226

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.