Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' தமிழனின் தன்மானத்தையும் தமிழ் தேசியத்தையும் விற்றுப் பிழைத்தவன் உன் தந்தை' என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாறாத அவப்பெயரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் ஏழாலைக் கூட்டத்தில் சரவணபவன் முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

' தமிழனின் தன்மானத்தையும் தமிழ் தேசியத்தையும் விற்றுப் பிழைத்தவன் உன் தந்தை' என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாறாத அவப்பெயரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் ஏழாலைக் கூட்டத்தில் சரவணபவன் முழக்கம்

[Friday, 2011-07-15 20:30:55]

"தன்னுடைய சுயநலத்துக்காகவும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் தமிழனின் தன்மானத்தையும் தமிழ் தேசியத்தையும் விற்றுப் பிழைத்தவன் உன் தந்தை" என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாறாத அவப்பெயரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

எத்தனை சோதனைகள் வந்தாலும் தமிழன் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் இழந்து வாழ மாட்டான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து நமது ஒன்றுபட்ட சக்தியை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவோம் வாரீர் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அழைப்பு விடுத்தார்.

நேற்று முன்தினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு ஸ்ரீ முருகன் சனசமூக முன்றிலில் நடைபெற்ற கூட்டமைப் பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே சரவணபவன் இந்த அழைப்பை விடுத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் கூறியதாவது;

இன்று நடைபெறுவது கட்சிகளுக்கிடையிலான போட்டி அல்ல. திட்டமிட்டு தமிழர்களை அடக்கி ஒடுக்க முயலும் அரசுக்கும்மானமுள்ள தமிழர்களுக்கும் இடையிலான போட்டி. ஆரோக்கியமான போட்டிகளை வரவேற்கின்றோம். ஆனால் அடக்கு முறைகளுக்கும் அடா வடித்தனங்களுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை.

நம்மை நாமே அழித்து ஒழிப்பதற்கு வீடெரிக்கும் அரசனுக்கு நெருப்பை எடுத்துக் கொடுக்கும் துர் மந்திரி போல் இன்று தமிழ்த் தேசியத்தையும் தமிழரின் தன் மானத்தையும் அடவு வைத்து அரசுக்கு துணை போகின்றார் தன்னையும் தமிழன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. வெற்றிலை ஒரு மங்களகரமான புனிதப் பொருள். ஆனால் அதனையே அமங்கலமாக்கி அழிவுக்கு வழிதேடுகின்றார் டக்ளஸ். சர்வதேசமும் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கின்றது.

இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்னரும் பல லட்சம் உயிர்களைப் பறிகொடுத் துள்ளோம். நாம் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சம் அல்ல, அதன் விளைவுதான் இன்று போர்க்குற்ற அறிக்கை. தந்தை செல்வா தீர்க்க தரிசனமாகக் கூறினார் "தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்'' என்று அந்த வார்த்தை பொய்யாகவில்லை. ஆண்டவன் வடிவில்தான் ஐ.நா. நிபுணர் குழுவின் போர்குற்ற அறிக்கையும் முள்ளிவாய்க் கால் மனிதப்படுகொலை சனல் 4 ஒளி நாடாக்களும். இந்த அவலப் படுகொலைகளையும், சித்திரவதைகளையும், நமது பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டதையும் பார்த்து உலகமே கண்ணீர் வடிக்கிறது. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இல்லை இல்லை இலங்கையில் எந்த ஒரு தமிழனும் கொல்லப் படவில்லை என்று அரசின் ஊது குழலாக ஒலிக்கின்றார்.

முள்ளி வாய்க்காலில் நமது உறவுகளும், இரத்தங்களும் உயிருடன் நசித்துக் கொல்லப்பட்டதை யாராலும் மறக்கமுடியுமா. ஆனால் இந்த டக்ளஸ் உள்ளங்கையால் மறைக்க நினைக்கின்றார்.

எந்த ஓர் இடத்தில் அறுதிப் பெரும்பான்மை பலம் இருக்கின்றதோ அங்கே சர்வாதிகாரம் தலை தூக்கும். சிறு பான்மை இனங்கள் பாதிக்கப்படும். இந்தத் துர்ப்பாக் கிய நிலைதான் இன்று இலங்கையில் காணப்படுகின்றது. எனவே இலங்கையில் பறிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள், அரசியல் சுதந்திரம் சுயமாக செயற்படும் அதிகாரம் எல்லாம் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் திட்டவட்டமாக சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இதைத்தானே நாங்களும் கேட்கின்றோம். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்ததாக அன்று முல் லைத்தீவு அரச அதிபராக இருந்தவரும் இன்று யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியாக இருப்ப வருமான திருமதி இமெல்டா சுகுமார் உறுதிப்படுத்தி உள்ளார். ஆண்டகை யோசப் ராயப்பர் 40 ஆயிரத்துக்கும் அதிக மான சிவிலியன்கள் கொல்லப் பட்டுள்ளனர் என சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால் தன்னையும் ஒரு தமிழன் என்றும் தமிழர்களின் சுய உரிமைக்காக போராடியவர் என்றும் பீற்றித் திரியும் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவில் 70 ஆயி ரம் பேர்தான் வாழ்ந்தனர் என்று கூறுகின்றார். அப்படியானால் எஞ்சியவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டியவர்கள் என ஏற்கனவே திட்டமிடப் பட்டதா. தனது பதவிக்காக வும் சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே காட்டிக் கொடுக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் வெட்கம் கெட்ட செயலை எந்தவோர் உண்மையான தமிழனும் அங்கீகரிக்க மாட்டான். தன்னை இழந்து, தன் மானத்தை இழந்து, தன் கட்சியையும் அதன் சின்னத்தையும் இழந்து இன்று அன்னிய கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் ஒட்டிக்கொண்டு ஓட்டுக் கேட்கின்றார்.

ஜனாதிபதி உட்பட கெபினட் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று யாழ்ப்பாணத்தில் கூடாரம் அடித்துள்ளனர். அடிக்கல் நாட்டுகின்றனர், பாதைகளை திறக்கின்றனர், நிவாரணங்களை வழங்குகின்றனர், தொழில் வாய்ப்புக்களை வழங்க உத்தரவாதம் அளிக்கின்றனர். முழு அரச இயந்திரமும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்புக்கெதிரான பிரசார நடவடிக்கைகளில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இவர்கள் ஒன்றும் நமக்குப் புதிதாக செய்து விடவில்லை. மூடிய பாதைகளை இவர்களேதிறக் கின்றார்கள். இவர்களால் அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் பாலங்களுக்கும் அடிக்கல் நாட்டுகின்றனர். எமது உடைமைகளை அழித்தவர்கள் அதற்கு நிவாரணம் வழங்குகிறார்கள்.

அன்று திட்டமிட்டு அழித்தவர்கள் இன்று கூட்டம் போட்டு அளிக்கின்றனர். இதைப் பார்த்துக் கொள்வோம். ஆனால் நாம் நமது தன்மானத்தையும், மனச்சாட்சியையும் விற்றுவிடக்கூடாது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் எப்படியாவது என்ன விலை கொடுத்தாவது வெற்றி பெறவேண்டும். தமிழர்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என வெளியுலகுக்கு காட்ட வேண்டும். அதன் மூலம் ஐ.நா. நிபுணர் குழுவின் போர்குற்ற அறிக்கை இலங்கையின் மனிதப் படுகொலை தொடர்பான சனல் 4 என்பன வெல்லாம் பொய்யானவை எனக் காட்ட முயல்கின்றனர். இன்று நமக்கு கடவுள் போல் கை கொடுப்பவை இவை தான் என்பதை மறந்து விடக் கூடாது.

அரசின் கைக் கூலிகளான ஈ.பி.டி.பியினர் கடைசி ஆயுதமாக உங்களைப் பயமுறுத்தலாம். அடாவடித் தனங்களை மேற்கொள்ளலாம். உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.

இவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். நீங்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். எமது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழன் தன்மானம் உள்ளவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என சரவணபவன் எம்.பி. குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46565&category=TamilNews&language=tamil

இது வெறும் தேர்தல் காலப் புஸ்வானப் பேச்சோ! இருந்தாலும் நல்லா இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு எல்லாம் வீரமாகவும் உணர்வு பூர்வமாக இருக்கு ஆனால் நீங்கள் எப்படி ? உங்கள் கடந்தகாலம் ?....? நம்பலாமா ?...?...?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.