Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார் மகிந்த

[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:43 GMT ] [ தா.அருணாசலம் ]

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சிறிலங்காவுக்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது தனிப்பட்ட அழைப்பை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கையளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றுக்காலை ‘இந்து‘ நாளிதழின் ஆசிரியர் என்.ராம், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேசியது குறித்து இந்து ஆசிரியரிடம் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை தமிழ்நாடு முதல்வர் சிறிலங்கா வரத் தயாராக இல்லாவிட்டாலோ அல்லது வேலைப்பளு அதிகமாக இருந்தாலோ நாடாளுமன்றக் குழுவொன்றை அனுப்பி வைக்கலாம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மத்திய அரசுடன் அவர் இதுபற்றி பேசி முடிவெடுக்க முடியும் என்றும், நாடாளுமன்றக் குழுவை வரவேற்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த நாடாளுமன்றக் குழுவில் தனியே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் இடம்பெறக் கூடாது என்றும் அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச நிபந்தனை விதித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கலை நியாயப்படுத்தும் வகையில் சிறிலங்கா அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தெற்கில் அம்பாந்தோட்டை, கொழும்பு என்று மாவட்டங்கள் தோறும் படைமுகாம்கள் உள்ளதாகவும், அதுபோலவே வடக்கு, கிழக்கிலும் படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110723104339

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்தியை இணைக்கும் போது,

அந்தச் செய்தி முன்பு, வேறொருவரால்... இணைக்கப் பட்டதா என்று பார்த்து இணையுங்கள் தமிழரசு.

இதனால்... அடிக்கடி செய்திகளை பூந்து, படிப்பதால் கண் பார்வை கெட்டுப் போகும் போலை கிடக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்தியை இணைக்கும் போது,

அந்தச் செய்தி முன்பு, வேறொருவரால்... இணைக்கப் பட்டதா என்று பார்த்து இணையுங்கள் தமிழரசு.

இதனால்... அடிக்கடி செய்திகளை பூந்து, படிப்பதால் கண் பார்வை கெட்டுப் போகும் போலை கிடக்குது.

தமிழ் சிறி நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனாலும் சில சமயங்களில் இப்படியான தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது இதற்காக சில சமயங்களில் எச்சரிக்கபட்டுள்ளேன். ஒரே விடயமாக இருக்கும் ஆனால் தலைப்பு வெவ்வேறாக இருக்கும் எனக்கு பிடித்த தலைப்பு சரியான பொருத்தம் போன்று காணப்படுவதினால் மீள் பிரசுரம் செய்கின்றேன் சில சமயம் எனக்கு தொடர்ந்து இணைப்புக்களை ஏற்படுத்த முடியாமல் ௬டப்போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய ஆர்வம் எனக்கும் புரிகிறது தமிழரசு.

கறுப்பி, இணைப்பதையும் நீங்கள் இணைப்தையும் மாறி, மாறி... பார்க்க...

விசர் பிடிச்சுடும். நாங்கள் எழுத்துக் கூட்டி வாசிக்கிற ஆட்கள் என்ற படியால்.... சரியான கஸ்டமாய் இருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய ஆர்வம் எனக்கும் புரிகிறது தமிழரசு.

கறுப்பி, இணைப்பதையும் நீங்கள் இணைப்தையும் மாறி, மாறி... பார்க்க...

விசர் பிடிச்சுடும். நாங்கள் எழுத்துக் கூட்டி வாசிக்கிற ஆட்கள் என்ற படியால்.... சரியான கஸ்டமாய் இருக்குது.

நான் எல்லா செய்திகளையும் இணைப்பதில்லை முக்கியம் தேசியம் சம்மந்தமானது எங்களின் போராட்டம் இவைகளை முதன்மைபடுத்திய செய்திகளைத்தான் இணைப்பதுண்டு இதில் தொடர்ந்தும் என்மீது எச்சரிக்கை விடப்படும் போது இயல்பாகவே இணைப்புகள் செய்யமுடியாது போய்விடும் தமிழ் சிறி பின்பு கறுப்பியே மொத்தமாக இணைப்பை மேற்கொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எல்லா செய்திகளையும் இணைப்பதில்லை முக்கியம் தேசியம் சம்மந்தமானது எங்களின் போராட்டம் இவைகளை முதன்மைபடுத்திய செய்திகளைத்தான் இணைப்பதுண்டு இதில் தொடர்ந்தும் என்மீது எச்சரிக்கை விடப்படும் போது இயல்பாகவே இணைப்புகள் செய்யமுடியாது போய்விடும் தமிழ் சிறி பின்பு கறுப்பியே மொத்தமாக இணைப்பை மேற்கொள்வார்.

இதுக்கெல்லாம்.... கவலைப் பட்டு செய்திகளை இணைப்பதை நிறுத்தி விடாதேங்கோ....... தமிழரசு.

மட்டுறுத்தினரையும், விட்டுப் பிடிக்க வேணும்.

இல்லாட்டி..... அவங்கள் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.