Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு போரின் வெற்றி மமதையில் இருக்கிறது நிரந்தரத் தீர்வை முன்வைக்க அது தயாரில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசு போரின் வெற்றி மமதையில் இருக்கிறது நிரந்தரத் தீர்வை முன்வைக்க அது தயாரில்லை

Monday, August 1, 2011, 7:55சிறீலங்கா

இலங்கை அரசு யுத்தத்தை வெற்றிகொண்ட மமதையில் இருக்கிறதே தவிர, தமிழ் மக்களின் மனங்களை வென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அது தயாரில்லை.மேற்கண்டவாறு யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு கடந்த சனியன்று சென்னை பெரியார் திடலில் இடம்பெற்றது. இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை மற்றும் அரசியல் தீர்வு என்னும் தலைப்பில் இந்தச் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது.

மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் உட்படப் பலர் இந்தச் சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினர். சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது உரையில் தெரிவித்தவை வருமாறு:

அல்லலுறும் எமது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் எமக்கு ஆதரவாக நடைபெறுகின்ற இந்தச் சிறப்பு மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்காக இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முன்னெப்பொழுதையும்விட இப்பொழுது நாங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். இராணுவத்தினர் மிகவும் வீரத்துடன் போராடி வடக்கு, கிழக்குப் பிரதேசத்தை வெற்றிகொண்டுள்ளனர் என்பதால் தமது சொற்படியே தமிழ் மக்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை அரசு சொல்கின்றது.

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகவே இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். எமது மனிதாபிமான நடவடிக்கையில் ஒரு பொதுமகனும் மரணிக்கவில்லை என்று அரசு சொல்கிறது. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், வன்னியில் சுமார் 4.25 இலட்சம் மக்கள் இருந்தனர், அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அனுப்பிவையுங்கள் என்று நாங்கள் கோரினோம். ஆனால் அரசு அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக அங்கு 75ஆயிரம் மக்களே உள்ளனர் என்று சொன்னதுடன் வெறும் 45ஆயிரம் பேர்களுக்கு மாத்திரமே உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்பிவைத்தது. ஆனால் போர் முடிவுற்று வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு சுமார் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்திருந்தனர். இதனைக் கொண்டு எஞ்சியவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்தறிந்துக்கொள்ளலாம்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலை நாங்கள் ஒரு சின்ன விடயமாகவே நோக்கினோம். ஆனால் அரசு இத்தேர்தலில் தனது முழு வளங்களையும் பயன்படுத்தியது. ஜனாதிபதி மூன்று நாள்கள் வடபகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். சுமார் 15இற்கும் அதிகமான அமைச்சர்கள் வடபகுதியில் முகாமிட்டிருந்தனர்.

அரசு, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்கள் எங்களுடன்தான் இருக்கின்றனர், சர்வதேசம் சொல்வதுபோல் இங்கு எவ்விதப் போர்க்குற்றங்களோ, மனிதஉரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று காட்டுவதற்கு முயற்சிக்கும் நோக்கில் எங்களது கைகளைக் கொண்டே எங்களது கண்களைக் குத்துவதற்கு முற்பட்டது.

எமது மக்கள் தங்களின் சோகம், கோபம் என்பனவற்றைக் கொட்டும் இடமாகவும் தாங்கள் இன்னமும் சுயமரியாதையை இழக்கவில்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றும் விதமாகவும் இத்தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டனர். அதன் விளைவாகவே அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வடக்கு, கிழக்கில் இருபது சபைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைத்தனர். எமது மக்கள் ஒரு நிரந்தர அரசியல் தீர்வையே விரும்புகின்றனர் என்பது இத்தேர்தலின் மூலம் சர்வதேச சமூகத்துக்கு நன்கு விளக்கப்பட்டுள்ளது.

ஒன்பது சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன என்று பெயரே தவிர, அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நான்கு மணிநேரமாவது விவாதம் நடைபெற்றிருக்குமா என்பதுகூட சந்தேகமாக உள்ளது.இலங்கை அரசு யுத்தத்தை வெற்றிகொண்ட மமதையில் இருக்கிறதே தவிர, தமிழ் மக்களின் மனங்களை வென்று அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அது தயாரில்லை. யுத்த வெற்றியைக் கொண்டாடுகின்ற இலங்கை அரசை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் காணுமாறு சர்வதேசமும் குறிப்பாக இந்தியாவும் வலியுறுத்த வேண்டும். அதற்கு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களே என்றும் இந்தியாவின் உற்ற நண்பர்கள் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். யுத்தத்தை நடத்துவதற்கு இந்தியாதான் பூரண ஒத்துழைப்பை வழங்கியது என்று இலங்கை அரசு கூறுகிறது. எமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் இந்தியா உதவவேண்டும். அதனை விரைவுபடுத்த உங்களது ஆதரவுக் குரல் ஒலிக்க வேண்டும்.

இது வெறுமனே தமிழர்களின் பிரச்சினை என்று பாராமல் இது ஒரு தேசிய இனத்தின் பிரச்சினை. இந்த இடத்தில் எவராக இருந்தாலும் நாங்கள் இப்படித்தான் செயற்படுவோம் என்பதைக் காட்டுமுகமாக அகில இந்திய ரீதியிலும், சர்வதேச மட்டத்திலும் எமது விடிவுக்காக நீங்கள் அனைவரும் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் இப்படி அவர் கூறினார்.

http://www.tamilthai.com/?p=23011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.