Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Aug 03 ஜெயலலிதாவின் மன உறுதியைப் பார்த்து வியந்தேன். வைகோ

Featured Replies

இணைய தள இளைஞர்களுடன் சந்திப்பு,கல்லூரி மாணவ, மாணவிகளிடம் குறுந்தகடு கொடுப்பது,கட்சி பொதுக்கூட்டம் என பிஸியாகவே இருக்கிறார் வைகோ. இவற்றுக்கு நடுவே தாயகத்தில் பேட்டிக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட அவர், சளைக்காமல் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவரது பேச்சில் நிதானமும் சாதுரியமும் தெரிந்தது. ஈழப்பிரச்னை பற்றி பேசிய போது, அவரது கோபம் வெளிப்பட்டது. இனி அவரிடம் பேசியதிலிருந்து...

தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா?

‘‘அரசியலில் 48 ஆண்டுகளாக இருக்கிறேன். எங்கள் குடும்பம் காங்கிரஸ் இயக்கத்தை ஆதரித்து வந்தது. கல்லூரியில் சேர்ந்த பின்னர் அண்ணாவின் எழுத்து, பேச்சால் ஈர்க்கப்பட்டு தி.மு.க.வில் இணைந்தேன். தி.மு.க.வில் இருந்த போது 24 முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். என் மீது கொலைப் பழியை போட்டு தி.மு.க.வில் இருந்து வெளியேற்றினார்கள்.

2006-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்த போது, பெரிய தொகையை வாங்கிவிட்டேன் என்று பழி சொன்னார்கள். ஆனால், அன்றிலிருந்து ஐந் தாண்டுகள் அ.தி.மு.க.வோடு கூட்டணியில் இருந்தோம். சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வோடு எங்கள் கட்சியினரும் புறக்கணிப்பில் பங்கேற்றார்கள்.கஷ்டத்திலும் நஷ்டத் திலும் அவர்களோடு இருந்த எங்களை கௌரவமாக நடத்த வேண்டாமா? அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. தேர்தலில் எங்களுக்கு குறைவான இடங்களே தருவதாகச் சொன்னார்கள். இதையடுத்து, கூட்டணியில் இருந்து விலகுவது என கட்சியினரோடு கலந்து பேசி முடிவு எடுத்தேன். இந்த முடிவை சரிதான் எ ன்று 70 முதல் 75 சதவிகித மக்கள் ஆதரித்தார்கள். இதை நான் கூட எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன் என்ற பழிச்சொல், எங்களின் முடிவால் துடைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவு எடுத்ததற்காக எந்த கட்டத்திலும் வருத்தப்பட்டதில்லை.’’

தேர்தல் அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டீர்களா? கல்லூரி மாணவர்களைச் சந்திப்பது, இணைய தள இளைஞர்களைச் சந்திப்பது என்று வேறு பாதையில் செல்வது ஏன்?

‘‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை சேனல் 4 வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சிங்கள ராணுவம் போர் விதிகளை மீறியுள்ளது. ‘ராஜபக்ஷேவை போர்க் கு ற்றவாளியாக அறிவிக்க வேண்டும்’ என உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழர் பிரச்னை தொடர்பாக பிரஸ்ஸல்ஸில் பேசிய போது, தனி ஈழம் ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்று வலியுறுத்தினேன். அதனை அங்கு இருந்த அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இனி சிங்களவனோடு தமிழர்கள் சேர்ந்து வாழ முடியாது. எனவே, பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழத்தை உருவாக்க வேண்டும். தெற்கு சூடானில் இப்படித்தான் நடந்தது. ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகத்தையும், இலங்கையில் நடந்த இன அழிப்பு போரையும் காணொளி ஆக்கியிருக்கிறேன். அதை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைச் சந்திக்கிறேன்.

என்னுடைய கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என இதைச் செய்யவில்லை. அதனால்தான் கட்சிக் கொடி எதையும் பிடிக்காமல், தனியாகப் போய் குறுந்தகடுகளை விநியோகம் செய்கிறேன். கல்லூரி மாணவர்கள் பிரியமுடன் வந்து வாங்கினார்கள். மாணவிகள் வரிசையில் நின்று வாங்கினார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது வரையில் ஒரு லட்சம் குறுந்தகடுகள் விநியோகித்துள்ளேன். முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை நீத்த போது எழுதிய மரண சாசனத்தில், ‘ஈழத் தமிழர் பிரச்னையை கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்று சொன்னார். அதை நிறைவேற்ற கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறேன். இந்த விஷயத்தில் இணையதள இளைஞர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுடனும் கலந்து பேசியிருக்கிறேன்.’’

ஈழத் தமிழர்களுக்காக அதிகம் பேசும் நீங்கள்,இங்குள்ள தமிழர்களுக்காகப் பேசுவதில்லை என்ற விமர்சனம் உள்ளதே...?

‘‘கூட்டங்களில் பேசும்போது பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரைதான் ஈழத் தமிழர் பிரச்னை குறித்துப் பேசுகிறேன். பத்திரிகைகள் இதைத்தான் பெரிதாக போடுகி ன்றன. அந்தக் கூட்டங்களில் எல்லாம் காவிரிப் பிரச்னை குறித்தும் முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் ஜீவாதார பிரச்னை குறித்தும் பேசுகிறேன். அண்ணாவின் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்போதைய பிரதமரிடம் வலியுறுத்தி அதனை எங்கள் கூட்டத்தில் அறிவிக்க வைத்தேன். சில நாட்களுக்கு முன்பு கூட ஓய்வு பெற்ற பொறியாளர் தயாரித்த முல்லைப் பெரியாறு தொடர்பான சி.டி.யை வெளியிட்டோம். அந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினாலும், க ட்சி சாயம் இருக்கக் கூடாது என்பதற்காக எங்கள் கட்சிக் கொடி இல்லாமல் பார்த்துக் கொண்டேன். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடிக்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்த்து நானே உச்ச நீதிமன்றத்தில் தன்னந்தனியாக போராடிக்கொண்டு இருக்கிறேன். என்.எல்.சி. நிறுவனத்தை தனியாருக்குக் கொடுக்க முயன்ற போது, தனியொருவனாக பிரதமரைச் சந்தித்துப் போராடி அதை வாபஸ் பெற வைத்தேன். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக மக்கள் பிரச்னைகளுக்காக போராட மறுமலர்ச்சி தி.மு.க. ஒருபோதும் தயங்கியது இல்லை.’’

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரோடு முதல்வர் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பீர்களா?

‘‘அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஒரு மணிநேரத்திலேயே நான் அதனை வரவேற்றுள்ளேன். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம். அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதே போல இந்தியாவும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பேசிய முதல்வர், ஏன் ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தை நினைவுபடுத்த வேண்டும்? ‘புலிகளுக்குத் தடை விதித்தது நான்தான்’ என்று ஏன் சொல்ல வேண்டும்? விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க முதல்வர் முன் வரவேண்டும்.’’

அ.தி.மு.க. அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

‘‘புகார்களின் அடிப்படையில் வழக்குப் போடுகிறார்கள். வழக்குகளை சட்டப்படி சந்திப்பதாக முன்னாள் முதல்வர் சொல்லியிருக்கிறார். தவறு செய்தால், ஊழல் செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் வந்திருக்கிறது. அதே நேரத்தில் மதுக்கடைகளால் ஒரு தலைமுறையே அழிந்து வருகிறது. மதுவும் ஒழிக்கப்பட வேண்டும். இலவசங்களுக்குக்

கொடுக்கும் நிதியை நிறுத்திவிட்டு, நல்ல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க வேண்டும். அதேபோல அரசு மருத்துவமனைகளையும் பலப்படுத்த வேண்டும்.’’

ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன?

‘‘எதற்கும் கலங்காத அவருடைய மன உறுதி எனக்குப் பிடிக்கும். சட்டப்பேரவையில் தன்னந்தனியாகப் போய் பேசிய தைரியத்தைக் கண்டு நானே வியந்து போயி ருக்கிறேன்.’’

தி.மு.க.வின் தோல்வியை திராவிட இயக்கங்களின் வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

‘‘அண்ணா உருவாக்கிய திராவிட இயக்கம் இன்று பல வடிவங்கள் எடுத்துள்ளது. நாங்கள் அடர்த்தியான கொள்கை உரமிக்க திராவிட இயக்கமாக வளர்ந்து வருகிறோம். தி.மு.க.வின் தோல்வியால் திராவிட இயக்கங்கள் வீழ்ந்துவிடாது.’’

தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து உங்கள் கருத்து என்ன?

‘‘93-ம் ஆண்டு என்னை வெளியேற்ற முக்கிய காரணம் அவரது வாரிசைக் கொண்டு வர வேண்டும் என்பதே. அது இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தி.மு.க.வின் உள்விவகாரம் பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஊழலும் அவர்களது தோல்விக்கு ஒரு காரணம். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்திய அரசு செய்த துரோகத்தில் தி.மு.க.வுக்கும் பங்கு இருக்கிறது. ஈழத்தமிழரைக் காப்பாற்ற தி.மு.க. தவறிவிட்டது.’’

தேர்தலில் போட்டியிடாத நீங்கள் ஒரு பார்வையாளராக, தேர்தலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘தமிழக வளர்ச்சியைக் கவனிக்க தி.மு.க. தவறிவிட்டது. ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறியது, ஐ.மு. அரசின் துரோகத்துக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டது. சொந்த குடும்ப ஆதிக்கத்தை முன்னிறுத்தியது ஆகியவற்றால் மக்களிடம் ஏற்பட்ட ஆத்திரம் வெள்ளமாகத் திரண்டு தி.மு.க.வைத் தோற்கடித்துவிட்டது.’’

கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன?

‘‘ஓய்வறியாத உழைப்பும் எழுத்தாற்றலும்.’’

உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

‘‘எண்ணற்ற இன்னல்களைக் கடந்து மறுமலர்ச்சி தி.மு.க. தலை நிமிர்ந்து நிற்கிறது.இளம் தலைமுறையினரின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. ஊழலற்ற ஆட் சியை மக்கள் விரும்புகிறார்கள். ஒளிமிக்க எதிர்காலத்தைத் தருவோம் என்று நம்புகிறார்கள். நேர்மையான, ஜாதி, மத பேதமற்ற அரசியல் பாதையை அவர்களுக்குக் காட் டுவோம்.’’

Thanks to Kumudam reporter.

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=31880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.