Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்டு உழைப்பதே தமிழர்களை தலைநிமிர வைக்கும்! DR. சாந்தகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ctc_006-150x150.jpgஒரு தமிழ் அமைப்பு நல்லதைச் செய்தால் அதனை மற்றைய தமிழ் அமைப்புக்கள் மனதார ஏற்று அந்த அமைப்புக்கு ஆதரவு வழங்கும் மனப்பாd;மையை வளர்த்தால் தான் தமிழ்ச்சமுதாயம் தனது குறிக்கோளை அடைய முடியுமென கனடியத் தமிழ்க் காங்கிஸின் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் சாந்தகுமார் மானஈட்டு வழக்கு சம்பந்தமான நிகழ்வில் பேசும்போது தெரிவித்தார்.

கனடியத் தமிழ்க் காங்கிரஸின் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு எதிராக கடுமையான தொனியில் செயற்பட்டு ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் பயங்கரவாதிகள் என அடையாளமிட முனையும் றோகான் குணவர்த்தன என்ற சிங்கள இனவாதிக்கு எதிராக மான நஸ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்குச் சம்பந்தமாக வலுச் சேர்க்கும் நிகழ்வு சனிக்கிழமை ரொறன்றோவில் இடம்பெற்ற போதே மேற்படி கருத்தை டாக்டர் சாந்தகுமார் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், ஒரு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு நல்லவிடயத்தை செய்யும் போது அதனை தாங்கள் செய்ய வேண்டும் என மற்றொரு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு முட்டிமோதுவது அறவிலித்தனமான செயலெனவும் இவ்வாறான போட்டி அரசியலிற்குள் தொண்டார்வமாக வந்த சமுகத் தொண்டர்களைத் தள்ளாமல் அமைப்புக்கள் செய்வது சரியாக இருந்தால் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனக் கனடாவின் தமிழ்ச் சமூகத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சந்தாகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விழாவின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட சட்டவியலாளர் திருவாட்டி பார்பரா ஜக்மன் அங்கு பேசுகையில் றொகான் குணவர்த்தன பயங்கரவாதம் சம்பந்தமான நிபுணரே அல்லவெனவும் அவர் இவ்வாறு தன்னைக் கூறிக்கொள்வதற்கு அருகதையற்றவர் என்றும் தெரிவித்ததோடு,

தமிழினம் துண்பங்களைத் தொடர்ந்து தாங்கி வருவதே அது தொடர் இழப்புக்களைச் சந்திப்பதற்குக் காரணம் எனவும், எதையுமே கேட்காமல் விடுவதே இறுதியில் தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியாகக் கூட அமைந்து விட்டதெனவும் குறிப்பிட்டதோடு தமிழர்கள் அநீதிகளை எதிர்க்கும் இராஜதந்திர மற்றும் ஊடகப் போரில் வெற்றி பெற்றேயாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விழாவில் முக்கிய பிரமுகராக உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் திரு.பொன் பாலராஜன் அவர்கள், றொகான் குணவர்த்தன தமிழப் போராட்ட்த்திற் எதிரான பிரச்சாரச் செயற்பாட்டின் மிக முக்கியமானவ்ர். ஈழ விடுதலைப் போராட்ட்த்தை பயங்கரவாதமென இல்லதாதும் பொல்லாதுமாக உண்மைக்குப் புறம்பானதாக சர்வதேச நாடுக்ளிற்குப் பரப்புரை செய்தவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் ஈழத்தமிழர் போராட்டத்தை இவர் போன்றவர்களின் நடவடிக்கைகள் பாதிக்க அனுமதிக்க முடியாது என்றும் இதன் அடிப்படையில் நாடு கனடியத்தமிழர் போரவை எடுத்த இந்த முயற்சிக்குப் பாராட்டும் ஒத்துழைப்பையும் சகல தமிழார்களும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு றொகான் குணவர்த்தனவிற்கு எதிரானா வெற்றி கனடியத்தமிழர் போரவையின் வெற்றியாக அமையாது இது கூட்டுமொத்த ஈழத்தமிழர்களின் வெற்றியாகும். என்றும் இந்த முயற்சிக்கு இதர தமிழ் அமைப்புக்களும் அமைப்பு வெறுபாடுகளைத்தாண்டி இதற்கு அனவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் பேசிய கனடியத் தமிழ்க் காங்கிரஸின் சட்ட ஆலோசகரான திரு. ஹரி ஆனந்தசங்கரி பேசுகையில், இவ்வாறு நாங்கள் எங்களிற்கு எதிராக பொய்யான காழ்ப்புணர்வைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளடைவில் ஒட்டு மொத்த சமுதாயமுமே பணயம் வைக்கப்படும் என்பதை விளக்கியதோடு, தங்களிற்காக வாதாட அமைக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகள் குழு கனடிய ரீதியல் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதைத் சுட்டிக்காட்டினார்.

இவ்விழாவில் பேசிய தமிழ் சட்டத்தரணியான திரு. நாதன் சிறீதரன் அவர்கள் “தமிழர்கள் ஒன்றுபட்டுச் செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவை என்றும், அவ்வாறு ஒவ்வொரு அமைப்பும் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு இதர தமிழ் அமைப்புக்கள் தாமாக ஆதரவு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ctc_006.jpgctc_001.jpg

http://www.tamilthai.com/?p=24770

... ஒன்றுபட்டு ஒரே அமைப்பாக ...!!!???? ஐயகோ வேண்டவே வேண்டாம்!!!! ... ஒரே இலக்கை வைத்து செயற்படுங்கள், புரிந்துணர்வுடன்!!! ... அதுவே போதும்!!!

ஓர் விருட்சம் மட்டுமே இருந்து ... சரிக்கப்பட்ட பின் ... பட்ட அனுபவங்கள் போதும்!!!!

மேலும் எந்தப்புற்றில் எந்தப்பாம்பு என்று இன்னும் இனம்காண முடியாத நிலை!!! ... நாளை கையை உயர்த்திக் கொண்டு அஸ்டாங்கமாக வீழ்ந்து சரணடைய முற்பட்டால் .... அண்ணர் கேபியை போல் ... இனியும் தாங்காது எம் ஈழத்தமிழினம்!!!

... ஒன்றுபட்டு ஒரே அமைப்பாக ...!!!???? ஐயகோ வேண்டவே வேண்டாம்!!!! ... ஒரே இலக்கை வைத்து செயற்படுங்கள்இ புரிந்துணர்வுடன்!!! ... அதுவே போதும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.