Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்தியாகம்: செங்கொடி உடல் நாளை அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தியாகம்: செங்கொடி உடல் நாளை அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

  • Monday, August 29, 2011, 11:12

காஞ்சீபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் செங்கோடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி,

தமிழர் நலனுக்கு ஆதரவான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை தூக்கிலிடக்கூடாது என்று தமிழ் நாடு முழுதும் நடந்து வரும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார்.

நேற்று காலை காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் தாலுகா அலு வலகம் வந்த அவர் திடீ ரென தன் மீது மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி, அதே இடத்தில் பலியானார். சிவகாஞ்சிபுரம் போலீசார் அவரது கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

செங்கொடியின் கைப்பை உடல் அருகில் கிடந்தது. போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, அதனுள் அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்ததை கண்டனர். அந்த கடிதத்தில் தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் என்று செங்கொடி எழுதி இருந்தார்.

இதன் மூலம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக செங்கொடி உயிர்த்தியாகம் செய்திருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் இதுவரை எத்தனையோ உயிர் தியாகம் நடந்துள்ளது. ஆனால் தமிழனுக்காக ஒரு வீரப்பெண்மணி உயிர் தியாகம் செய்தது இதுதான் முதல்முறை. கடைசி வரை இது போன்ற உயிர் தியாகங்கள் போராட்டத்தின் முடிவுகள் அல்ல.

நமது கொள்கைக்காக கடைசி வரை போராடி வெல்ல வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இளைய சமுதாயம் உயிர் தியாகம் செய்யாமல் போராடி ஜெயிக்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக 3 பேரின் தூக்கு தண்டனையை கருணை உள்ளத்தோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செங்கொடியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் உள்ள பெரியார் தூண் அருகில் செங்கொடி உடல் வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் திரண்டு வந்து செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை 4 மணி வரை செங்கொடி உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அதன் பிறகு அவரது சொந்த ஊரான கீழ்கதிர்பூர் கிராமத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்படும். இன்றிரவு முதல் நாளை காலை வரை உறவினர்கள் அஞ்சலிக்காக செங்கொடி உடல் வைக்கப்பட்டிருக்கும். நாளை பகல் 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.

அதன் பிறகு செங்கொடி உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும். இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்

இது தொடர்பான செய்திகள் :

மூவர் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி இளம் பெண் தீக்குளித்து இறந்தார். (Photo in)

மருத்துவமனையில் உடலை பெற்றதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் – அரசியல் தலைவர்கள் (Audio & Photo in)

http://www.tamilthai.com/?p=25314

எங்கள் மத்தியில் உயிர்களை துச்சமென எண்ணி மக்களுக்காக போராட மறுக்கும் தலைவர்கள் உள்ளவரை, செங்கொடி போன்ற உணர்வாளர்களுக்கு எம்மால் ஆறுதல், அனுதாபம் மட்டுமே சொல்லமுடியும்.

Edited by akootha

sengkodi.pngCandle_5.gif

sengkodi.pngCandle_5.gif

... கள்ளமற்ற முகம், பார்க்க முடியவில்லை!!!!! இனியும் வேண்டாம், இது போன்ற தற்கொடைகள்!!!, இவர்கள் இருந்திருந்தால், இன்னும் கூட சாதித்திருப்பார்கள்!!! .... சீமான், வைகோ போன்றவர்கள் இவற்றை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.