Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை நடாத்துமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை நடாத்துமாறு கோரிக்கை

02 செப்டம்பர் 2011

இலங்கையில் காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். காணாமல் போனோர் குறித்த உலக தினத்தையிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் அதிகம் காணாமல் போனவர்களின் பட்டியல் உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனத்தையோ மதத்தையோ பாராமல் எங்களுடைய பிள்ளைகளைக் கண்டு பிடிக்க உதவுங்கள் என்று தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போனோர் நினைவு தினமான ஓகஸ்ட் 30 அன்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் - இவர்களில் பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள்- ஒன்றிணைந்து இந்நினைவு தினத்தை கொழும்பில் நடாத்தின.

அதன் போதே நீண்ட பல வருடங்களாக இடம் பெற்ற இனமுரண்பாட்டுக் காலகட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டது.

மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவச் செயற்பாட்டாளரும், காணாமல் போனோரைத் தேடும் குடும்பங்களின் தலைவருமான பிறிற்றோ பெர்ணாண்டோ தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த காலத்தில் தெற்கில் காணாமல் போனோர் தொடர்பாக நாம் பெரும் பணி ஆற்றியிருக்கிறோம். எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கள் சொந்த நாட்டை நேசிக்காதவர்களைப் போன்று நமது பணிகளைப் புறக்கணித்து வருகிறார்.

தமது அன்புர்க்குரியவர்கள் காணாமல் போனதால் இந்தத் தாய்மார் உகுக்கும் கண்ணீரை நாம் போதியளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன, முஸ்லிம்களாக இருந்தாலென்ன, அவர்கள் எவராக இருந்தாலென்ன அவர்கள் இந்த நாட்டின் தாய்மார்கள். நாங்கள் இது தொடர்பில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

ஐநா அறிக்கைத் தரவுகளின்படி இலங்கை காணாமல் போனோர் அதிகம் உள்ள நாடுகளில் இரண்;டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 30 வருடங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அரசம் கிளர்ச்சியாளர்களும் தான் இந்தக் காணாமல் போதல்களுக்குக் காரணம்.

இதேவேளை யதார்த்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாக அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பெண்களுடைய உறுதியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். இந்தக் குழு காணாமல் போனவர்கள் குறித்து விரைவாகவும் பயன்விளைவுமிக்கதாகவும் காணாமல் போன ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாவும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமால்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்தோடு பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் சட்டத்தன் கீழ்ப்பட்டதாகவும் அரசியலமைப்புக்கு முரணாகாத விதத்திலும் அமைதல் வேண்டும். அதனடிப்படையில் இந்தச்சம்பவங்களுக்குக் காரணமான தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66530/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு, காணாமல் போன் தமிழர்கள் (இந்து+கிறிஸ்தவர்+முஸ்லிம்) ஒன்று சேர்ந்தால் அரசிற்கு நல்ல நெருக்கடியை கொடுக்கலாம், & சர்வதேசத்தின் கவனத்தையும் திருப்பலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.