Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை அடிமைப்படுத்த நினைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – சுரேஷ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on September 8, 2011-2:51 am No Comments

suresh-parliment-150x150.jpg

இராணுவத்தால் உருவாக்கப்பட்ட கிறீஸ்பூதம் என்ற மர்ம மனிதப் பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், அதனைத் தடுக்கத் தவறினால் மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் வெடிக்கும். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த நினைத்தால் தமிழ் மக்கள் ஒருபோதும் அடங்கிப் போகமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இப்படிக் கூறினார்.சுரேஷ் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதும் வடக்கு,கிழக்கில் தொடர்ந்தும் இராணுவம் ஆட்சி புரிகின்றது. நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணம் இலங்கையில் ஒரு பகுதியாக இல்லையா? ஏன் இந்தப் பாரபட்சம்?

கடந்த ஜூலை மாதம் மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதங்களின் அச்சுறுத்தல் படிப்படியாகப் புத்தளம், கிழக்கு மாகாணம் எனப் பரவி இப்பொழுது யாழ்ப்பாண மக்களையும் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்கள் பெண்களைத் தேடித் தேடித் தாக்குகின்றனர். இம்சிக்கின்றனர். இப்பிரதேச மக்கள் மிகவும் பீதியுடன் வாழ்கின்றனர். கோயில்களிலும் பாடசாலைகளிலும் கூட்டம் கூட்டமாகத் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்த மக்களை நேரடியாகச் சென்று பார்த்தேன். அவர்கள் கூறுவது எல்லாம் எங்களுக்கு இராணுவம் வேண்டாம். அவர்கள் எமது பிள்ளைகளைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகின்றனர். பெண்களை

சீரழிக்கின்றனர் என்று வேதனைக்குரல் எழுப்புகின்றனர்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கிறீஸ் பூதம் என்று ஒன்று இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் பொதுமக்களால் விரட்டிச் செல்லும் இந்த மர்ம மனிதர்கள் இராணுவ முகாம்களுக்குள் சென்று மறைகின்றனர். இராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது. மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் எல்லோருமே மனநோயாளர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுகின்றனர்.

இந்த மர்ம மனிதர்களைப் பிடிக்க முயற்சிக்கும் பொதுமக்களை இராணுவத்தினர் கைதுசெய்து சித்திரவதை செய்கின்றனர். நாவாந்துறையில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். கை, கால்கள் முறிக்கப்பட்ட அவர்கள் இப்பொழுதும் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.சிறுபான்மை மக்களைத் தொடர்ந்தும் ஒரு அச்ச சூழலில் அடக்கி, ஒடுக்கி வைப்பதே இந்த அரசின் நோக்கம்.

ஐக்கியத்துடன் வாழ விரும்பும் தமிழ் மக்களை அடக்கி அடிமைப்படுத்த முனைகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் மகாவலித் திட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். தனியான ஒரு செயலாளர் பிரிவை உருவாக்கும் பொறுப்பு அநுராதபுர அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை மேலும் பலப்படுத்தி உள்ளார் ஜனாதிபதி. யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயப் பீதி நீக்கப்படவேண்டும். சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்படவேண்டும் என அங்கு வாழும் மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

உண்மைநிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் ஜனாதிபதியை சந்தித்துப் பேசவும், தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தவும் தீர்மானித்துள்ளனர். மர்ம மனிதப் பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறினால் அங்கு மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

http://www.saritham.com/?p=33649

Edited by தமிழ் அரசு

சுரேஷின் போராட்டம் எப்ப வெடிக்கும் என்று சொன்னால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.