Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி.

11 செப்டம்பர் 2011

பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்களின் எண்ணிக்கை நான்காக உயந்துள்ளது. சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மதுரை மருத்துவமனையில் சிறிது நேரத்தின் முன்னர் உயிரிழந்தார். இதனால் கடும் பதட்டம் நிலவுகிறது. ஆங்காங்கே பேருந்துகள், வணிக நிறுவனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் தென் மாவட்டங்கள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓட வில்லை.

தென் மாவட்டங்களில் கலவர அபாயம் - முழு பதட்டம்.

இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று பரமக்குடியிலும் மதுரையிலும் எழுந்த கலவரத்தில் மூன்று தலித்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது. பரமக்குடி, பார்த்திபனூர், மதுரை என முக்கியப் பகுதிகளில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியத் தலைவர்கள் சிலைகள், பதட்டமான பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் இடங்களில் கலவரத் தடுப்புப் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரைக்கு தெற்கே பேருந்துகள் அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி - தென் மாவட்டங்கள் முழுக்க பெரும் சாதிக்கலவர அபாயம்

தலித் மக்களுக்காக போராடி கொலை செய்யப்பட்ட தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் இன்று பரமக்குடியில் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் போது பெரும்பலான தலித் தலைவர்களும் அங்கு கூடி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.இந்நிலையில் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற ஜாண்பாண்டியனை தூத்துக்குடியில் மறித்துத் தடுத்த போலீசார் பரமகுடிக்குச் செல்ல தடை விதித்தனர். இதை அறிந்த தலித் மக்கள் ஜாண்பாண்டியனை விடுவிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் செய்தவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க அது கலவரமாக மாறியது. இதை ஒட்டி பரமக்குடியிலும், மதுரையிலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் தென் மாவட்டங்கள் முழுக்க பெரும் சாதிக்கலவர அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, பேருந்து போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பரமக்குடி: பரமக்குடியில் இன்று நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியின்போது பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து பொலிசார்; நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

போலீஸார் மீது கூட்டத்தினர் நடத்திய பெரும் தாக்குதலில், சென்னை துணை ஆணையர் செந்தில்வேலன் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். 2 பொலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன் தூத்துக்குடியிலிருந்து கிளம்பினார். அப்போது வல்லநாடு பகுதியில் அவரை பொலீஸார் தடுத்து தூத்துக்குடி கொண்டு சென்றனர். அவர் கைதும் செய்யப்பட்டார்.

இதையடுத்து பரமக்குடியில் கூடியிருந்த ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர். ஐந்து முட்சந்தி சாலையில் சாலை மறியலில் குதித்த அவர்கள் பொலீஸார் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். போத்தல்;களையும், கற்களையும் வீசி பொலீஸாரைத் தாக்கினர். மேலும், அந்தப் பகுதி வழியே சென்ற வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். 2 பொலீஸ் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர்.

இதையடுத்து பொலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். அப்படியும் கூட்டத்தினர் கலையவில்லை. இதையடுத்து கண்ணீப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் கூட்டம் கலையாமல் தொடர்ந்து பெரும் தாக்குதலில் இறங்கியதால் பொலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் கூட்டத்தினர் கலைய மறுத்து தொடர்ந்து தாக்குதலில் இறங்கியதால் பொலீஸார் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் பரமக்குடியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.

துணை ஆணையர் காயம்

முன்னதாக கூட்டத்தினர் நடத்திய தாக்குதலில் சென்னையிலிருந்து பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த துணை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி டிஎஸ்பி உட்பட் சில பொலீஸார் படுகாயமடைந்தனர்.

மதுரையிலும் துப்பாக்கிச் சூடு-ஒருவர் காயம்

இதேபோல மதுரையிலும் கலவரம் வெடித்தது. அங்கும் பொலீஸாருக்கு போராட்டக்காரர்கள் கட்டுப்பட மறுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் பொலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.

தென் மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த சம்பவங்களைத் தொடர்நது தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளில் பொலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.