Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவில் தமிழீழக்கொள்கை உயிர்ப்புடன் இருப்பதால் புலிகளும் இருக்கின்றார்களாம் நெதர்லாந்து வக்கீல்களின் கபடம்

Featured Replies

விடுதலைப்புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவில் தணியவில்லை அவர்கள் உயிர்ப்புடன் இருக்கின்றார்கள் என கபட நோக்கோடு நெதர்லாந்து அதிகாரிகள் கூரியுள்ளார்கள். இதுபற்றி அசோசியேட்டட் பிரஸ் எழுதியுள்ளது.

.

2009 மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் இடையேயான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத்தொடர்ந்து எந்தவிதமான தாக்குதலினையும் புலிகள் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு கூறியிருக்கின்றார்கள். சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு. அலன் கீனன் எனும் சர்வதேச நெருக்கடிகள் குழுவின் ஆலோசகர்தான் மேற்கண்டவாறு கூறினார்.

.

ஆனால் நெதர்லாந்து வக்கீல்களோ தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என நிரூபிப்பதற்காக இல்லாத பொல்லாத கதைகள் எல்லாவற்றையும் கூறி விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் இருக்கின்றார்கள் என வாதிடுகின்றனர். இது பற்றி அசோசியேட்டட் பிரெஸ் ஊடகம் எழுதியுள்ளது.

.

இந்த நெதர்லாந்து வக்கீல்கள் புலி ஐரோப்பாவில் இருக்கின்றது என்பதற்கு காட்டும் ஆதாரங்கள் யாவை தெரியுமா?

1. புலிகள் 2010 இலும் பணம் சேகரித்துள்ளார்கள். நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரில் ஒருவரான ஐரோப்பிய நிதிப்பொறுப்பாளர் சந்திரன் என்பவரின் வீட்டில் தே நீர் குவளைக்குள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த யூஎஸ்பி இனுள் 2010 ஆம் ஆண்டிற்கான பணம் வசூலித்த விபரங்கள் சில இருந்ததாக கூறுகின்றனர் நெதர்லாந்து வக்கீல்கள்.

.

2. பயங்கரவாத புழுகர் ரொஹான் குணரட்னவின் அறிக்கையினையும் கோடிட்டுக்காட்டுகின்றனர்.

.

3. ஐரோப்பாவில் தமிழீழம் என்ற கருத்து இப்பவும் உயிர்ப்புடன் உள்ளனவாம் ஆதலால் புலியும் இருக்குதாம்.

.

4. ஐரோப்பாவில் புலிகள் தடை செய்யபப்ட்டிருக்கின்றார்கள் அது 2010 இலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேலோட்டமாக பல கருத்துக்களை முன்வைத்து ஐரோப்பாவில் புலிகள் இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் பணம் சேகரிக்கின்ரார்கள், ஆயுதம் வாங்குகின்ரார்கள், கடனட்டை மோசடி செய்கின்ரார்கள், ஆட்களைக்கடத்துகின்றார்கள் என பட்டியலிட்டுக்கொண்டு போகின்றனர் நெதர்லாந்து வக்கீல்கள்.

.

ஐரோப்பாவில் தமிழ் மக்கள் பணம் சேகரித்து தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு அனுப்புகின்றார்கள். சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடாக அனுப்ப முடியாத காரணத்தினால் பல்வேறு வழிகளை கையாளுகின்றனர். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கே தவிர விடுதலைப்புலிகளுக்கு அல்ல. சிறிலங்காவில் விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக சிங்கள அரசு பல தடவை கூறியுள்ளது. ஆனால் இதனை ஏன் நெதர்லாந்து வக்கீல்கள் நம்பவில்லை. ரொஹான் குணரட்ன சொல்வதை நம்பும் வக்கீல்கள் இந்த விசயத்தினை ஏன் நம்பவில்லை.

.

இதே வேளை சர்வதேச நெருக்கடிகள் குழு, உலக தமிழர் பேரவைத்தலைவர் ஆகியோர் ஐரோப்பாவில் இருக்கின்ற மக்கள் தாயகத்தில் இருக்கின்ற மக்களுக்கு உதவுவதாக கூறியுள்ளனர். இதனை ஏபி பிறஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஏன் நெதர்லாந்து வக்கீல்கள் நெருக்கடிகள் குழுவின் அறிக்கையினை கவனத்தில் கொள்ளவில்லை.

.

மேலும் நெருக்கடிகள் குழுவின் அறிக்கையில் விடுதலைப்புலிகள் அங்கு ஒரு ஆயுதப்போராட்டத்தினை மீண்டும் தொடங்கும் சாத்தியம் இல்லை என கூறியுள்ளனர். அருட்தந்தை இம்மானுவல் அவர்களும் கூறியுள்ளார். ஆனால் நெதர்லாந்து வக்கீல்கள் புலிகள் மீண்டும் போராட்டத்தினை ஆரம்பிக்கபோவதாகவும் அதற்காக பணம் சேகரிப்பதாகவும் அப்பட்டமான பொய்யினை கூறுகின்றனர்.

.

இந்த வருடம் நெதர்லாந்து பொலிசார்கள் மற்றும் யூரோ பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் சிறிலங்காவிற்குச்சென்றனர். அங்கு சிறையில் உள்ள விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்கள் சிலரை சந்தித்து விசாரித்துள்ளனர். சிறையில் உள்ள புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர்கள் சிலரையும் சந்தித்துள்ளனர். அவர்களிடம் நெதர்லாந்து பொலிசார் கேட்டகேள்விகளில் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் யார் யார் இருக்கின்றார்கள்? மீண்டும் புலிகள் சண்டை செய்வார்களா?வெளி நாடுகளில் உங்களுக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பதே.

.

ஆனால் சிறையில் உள்ளவர்கள் தமக்கு எதுவும் தெரியாது என்றும் தாம் இனி போராடப்போகமாட்டோம் எனவும் கூறியுள்ளனர். வெளி நாடுகளில் உள்ள எவரும் தொடர்பு கொள்வதில்லை என்றும் கூறியுள்ளார்கள். இந்த கேள்விகளில் இருந்தே என்ன தெரிய வருகின்றது என்றால் விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப்போராட்டம் செய்யப்போகின்றார்கள் என்பதனை எப்படியாவது உண்மையாக்கிவிடவேண்டும் என்பதே.

.

நெதர்லாந்து அதிகாரிகள் மற்றும் வக்கீல்கள் இன்னும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்கள். புலிகள் மீண்டும் போராட தொடங்கி விடுவார்களோ என்று தமக்கு கவலையாக உள்ளார்களா.

.

புலிகள் என்ன அல் கைடாவா? அலல்து புலிகள் வெளி நாட்டில் என்ன குற்றம் செய்தார்கள். சிங்களத்திற்கு எதிராக புலிகளோ மக்களோ போராடினால் நெதர்லாந்திற்கு என்ன பிரச்சினை. நெதர்லாந்து அதிகாரிகளை சிறிலங்கா சென்றபோது சிங்கள அரசு வாங்கிவிட்டார்களா?

.

லியாம் பொக்ஸ் போன்றவர்களே பிரிட்டனில் தனது அரசாங்கத்திற்கு ஒழித்தோடி மஹிந்தவிற்கு என்னென்ன செய்துள்ளார் என்ற தகவல்கள் இப்போ வெளியாகின்றன. அதே போல் நெதர்லாந்து அதிகாரிகளுக்கும் ஏதாவது வாணிப நோக்கம் உண்டா? நெதர்லாந்தில் தமிழர் குழுக்கள் நிச்சயமாக மிகப்பெரிய லொபி வேலைகளைச்செய்யவேண்டும் இல்லாவிடில் அது தமிழர்களின் போராட்டத்திற்கு பல தடைகளைக்கொண்டுவரும்.

.

தமிழீழம் உயிர்ப்புடன் இருப்பதால் புலிகளின் செயற்பாடு இருக்கின்றது என கூறும் அதிகாரிகளால் ஆபத்து.

மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.