Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டொரு நாட்களில் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விடும் என்று நம்பப்படுகிறது.

Featured Replies

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பான வல்லுனர் ஜிம் மக் டொனால்ட், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையம் மூலம் அமெரிக்க அதிபருக்கு மனு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தார்.

வெள்ளை மாளிகையின் இணையத் தளத்தில் இதுபோன்ற மனுக்கள், குறிப்பிட்டளவு கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அமெரிக்க அரசு அந்த விவகாரத்தைப் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளும்.

சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவளிக்கக் கோரும் மனுவில் 5000 பேர் கையொப்பமிட்டால், அதுபற்றி பரிசீலிக்கத் தயார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

5000 பேரின் கையொப்பங்களை இலக்கு வைத்து இதுதொடர்பான மனுவை, ஜிம் மக் டொனால்ட் வெள்ளைமாளிகை இணையத்தளத்தில் கடந்த மாத இறுதியில் சமர்ப்பித்திருந்தார்.

இந்தமனுவில் இன்று காலை 8.15 மணி வரை 4877 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இந்தமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இன்னமும் 123 பேரின் கையொப்பங்களே தேவைப்படுகின்றன.

கையொப்பமிடுவதற்கு ஒக்ரோபர் 29ம் நாள் வரை காலஅவகாசம் உள்ள போதும், இரண்டொரு நாட்களில் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விடும் என்று நம்பப்படுகிறது.

இதனால் அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் வெள்ளை மாளிகையினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை தோன்றியுள்ளது.

இதனால் சிறிலங்கா அரசு கவலையடைந்துள்ளது. அத்துடன் இது தமக்குப் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று கொழும்பு கருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைகளுக்குப் பின்னால், போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றி, தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள மருத்துவர் ஒருவரும் இருப்பதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கக் கோரும் வெள்ளைமாளிகைக்கான இணையதள மனுவில் ஒப்பமிட இந்த இணைப்பில் அழுத்தவும்.

https://wwws.whitehouse.gov/petitions/%21/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg?utm_source=wh.gov&utm_medium=shorturl&utm_campaign=shorturl

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92450

இலக்கை தாண்டியும் கையொப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, எனவே தொடருவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போன்ற பல அரசியல் போராட்டங்களை தமிழ் ஈழ ஆதரவாளர்கள் தொடர வேண்டும்.

ஸ்ரீ லங்கா காரர்களின் யுக்தியாக "தலைமை தேவை" என்று தமிழ் ஊடகங்களுக்குள்ளால் பரப்புரை செய்து நம்மை திரும்பவும் தலைமைக்கு அடிபட வைக்க முனைகிரார்கள். இதனால் தமிழீழ கோசத்தை குறைக்கலாம். தமிழ் ஈழ ஆதரவாளர்களை தளர்வடைய செய்யலாம்.

ஈழத்தமிழர் நிஜ புலிகள் போல், தாமே தலைமை தாங்கி தமிழ் ஈழத்திற்காக காரியங்களை செய்கிறார்கள். சிறு சிறு குழுக்களின் இந்த அரசியல் போராட்டங்கள் நல்ல பலனை கொடுக்கின்றன. இதில் அதிசயம் என்ன வென்றால், எமக்கு இப்போது வெளிநாட்டில் வாழும் தமிழக உறவுகளும் சேர்ந்து கை கொடுக்கின்றன.

கனடா பாராளுமன்றத்தில் ஐந்து விகிதமானவர்களே வந்தார்கள் என்று கவலை வேண்டாம். அது, கொழும்பு தமிழ் மென்டாலிட்டி மற்றும் தமிழரை தளர்வடைய வைக்க வந்த செய்தி . ஐந்து விகிதமானவர்கள் பார்த்ததே பெரிய விடயம். இனி அந்த ஐந்து விகிதம் மற்றையயோருக்கு ஸ்ரீ லங்கா இன வெறியரை பற்றி கூறுவார்கள்.

எமக்கு ஒரு ஸ்ரீ லங்கா காரன் உள்ளுக்கு போனாலே போதும். மற்றைய சிங்கள குட்டிகள் வாலை சுருட்டுவார்கள். மற்றும் தமிழ் பேசும் ஸ்ரீ லங்கா ஒட்டுண்ணிகளும் பொத்திக்கொண்டு இருப்பார்கள்.

மின்வலையில் இருந்து வாசித்த இந்த கதை.... தாயக தமிழ் மக்களை தன் பிள்ளை என உரிமைகோரும் ...

சொலமன் மன்னரின் முன்னால் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு பிள்ளைக்கு உரிமை கோரி இரண்டு தாய்மார்கள் அரசனிடம் நீதி கோரினார்கள். சொலமன் மன்னருக்கோ ஆச்சரியம். ஒரே பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் எப்படி இருக்க முடியும்? என்று அரசவை குழப்பமுற்றது.

அந்தப் பிள்ளையை நானே பெற்றேன் என்று ஒரு தாயும், இல்லை… இல்லை, அந்தப் பிள்ளைக்கு நானேதான் தாய் என்று மற்றவரும் அடம் பிடித்தனர். முடிவாக, சொலமன் மன்னன் ஒரு தீர்ப்பை வழங்கினான். அந்தப் பிள்ளையை இரு கூறாக்கி, இருவரிடமும் பகிர்ந்து கொடுக்கக் கட்டளையிட்டான்.

போர் வீரன் ஒருவன் வாளை உருவி, அந்தப் பிள்ளையை இரு கூறாகப் பிளப்பதற்குத் தயாரானான். உடனே, ஒரு தாய் மன்னனின் காலில் வீழ்ந்து, ‘மன்னா! அது என் பிள்ளையே இல்லை… அதனை அவளிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கதறினாள். மற்றப் பெண்ணோ, மன்னனின் கட்டளையை நிறைவேற்றப்போகும் போர் வீரனையும், அவனது கையில் பயத்துடன் வீறிடும் குழந்தையையும் பார்த்துப் பழிவாங்கும் நிறைவுடன் சிரித்தாள்.

மன்னன் எழுந்தான், வீரனைத் தடுத்து நிறுத்தினான். தன் காலில் வீழ்ந்து கதறிய அந்தத் தாயை ஆதரவுடன் தூக்கி நிறுத்தினான். பிள்ளையை அவளிடமே கொடுக்கும்படி உத்தரவிட்டதுடன், கொடூர வஞ்சகப் பெண்ணைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.

இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுச் சம்பவம். அதே போன்றதொரு அதிர்ச்சியான நிலையைத்தான் தற்போது புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளார்கள் சிங்கள சதிவலைகள் மூலம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.