Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

220000 கோடி வரவு செலவுத் திட்டத்தில் கல்வி சுகாதாரத்திற்கு 3வீதம் மட்டுமே - எரான் விக்ரமரத்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2012 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், ஒதுக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாவில், கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்காக 3 சதவீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 10 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு அபிவிருத்தியடைவதாக அரசாங்கம் கூறினாலும், வீதிகளை அமைத்தாலும், நாட்;டில், வறுமையை ஒழிக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அத்துடன் நாட்டில் வறுமையை ஒழிக்க அரசாங்கத்திடம் எவ்விதமான வேலைத்திட்டங்களும் இல்லை எனவும் விக்ரமரத்ன கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏழ்மையும், வறுமையும் அதிகரித்துள்ளமை பாரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது.வருமானம் மற்றும் செலவினங்கள் ஆகிய இரண்டை மாத்திரம் அடிப்படையாக கொண்டு, வறுமையயின் உண்மையான நிலைமையை கணக்கிட முடியாது.

இலங்கையர் ஒருவர் மாதாந்தம் தன்னிறவு அடைய 3 ஆயிரத்து 200 தேவை என புள்ளிவிபரங்கள் தெளிவுப்படுத்தியுள்ளன. நபர் ஒருவர், தன்னிறவு அடைய 3 ஆயிரத்து 200 ரூபாவை மாதந்தம் செலவிடுவதால் மாத்திரம், வறுமை குறைந்து விடும் என்று வாதிட முடியாது.

இலங்கையர்களில் பெருபாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும், பிள்ளைகள், பெற்றோர், உறவினர்களினால் சம்பாதித்து அனுப்பி வைக்கப்படும் பணத்தை கொண்டே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில், 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையான கால பகுதியில் இலங்கையில் வறுமையானது 15 சத வீதத்தில் இருந்து 7 வீதமான குறைந்துள்ளது என நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்து கூறிய போதிலும், அந்த கதையை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்;டில் வறுமையை ஒழிக்க வேண்டுமாயின், கல்வித்துறைக்கு பெரும் தொகையான பணத்தை ஒதுக்கீடு செய்து, சகல மக்களினதும், இயலுமை மற்றும் புத்திசாலித்தனத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும்.

எனினும் 2012 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள 2 லட்சத்து, 20 ஆயிரம் கோடி ரூபாவில், கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்காக 3 சத வீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட குறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கான குறைநிரப்புப் பிரேரணை நேற்று (18) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

2012 ஆண்டில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள மொத்த வருமானம் 1115 பில்லியன் ரூபாவாகும். அத்துடன் அடுத்த வருடத்திற்கான செலவு 2220 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் சமர்பிக்க உள்ள வரவு செலவுத் திட்ட யோசனை மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் யோசனை அல்ல என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் வரவு செலவுத் திட்ட யோசனைகள் மக்களின் கருத்துக்கள் யோசனைகள் பெறப்படாமல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச பொருளாதார ஆலோசகர்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச ஆலோசனைகளின் பிரகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் இரத்துச் செய்யப்படும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதியமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் முறை வாசிப்பு நவம்பர் 22 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.