Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது பல்கலைக்கழக மாணவன் மீது நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Beatined%20Student%204_CI.jpg

யாழ்பல்கலைக்கழக மாணவர் மீது நடாத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியாக மற்றுமொருமாணவனும் இனந்தெரியாத நபர்களின் மிலேச்சதனமான தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.மேற்படி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளவர் கலைப்பீட நான்காம் வருடத்தைச்சேர்ந்த செல்வன் இராஜவரோதயம்.கவிராஜன் எனும் மாணவனாவார் .22.10.2011 அன்று உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பரந்தன் பூநகரி வீதியால் தனது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இரவு 8.45மணியளவில் ஆட்டோவில் வந்த தாக்குதலாளிகள் சரமாரியாக கற்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

Beatined%20Student%203.jpg

மாணவர் ஒன்றியத்தலைவர் தாக்கப்பட்டு பல்கலைக்கழக வகுப்புப்பகீஸ்கரிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ள அதே காலப்பகுதியில் இம்மாணவன் தாக்கப்பட்டுள்ளதோடு மாணவர் தாக்கப்படுவது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வடபகுதி இராணுவத்தளபதி மற்றும் யாழ்ப்பாணப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் இடம் பெற்ற பேச்சு வார்த்தையில் மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி தமது கல்விச் செயற்பாட்டைத் தொடரலாம் என்று வடபகுதி இராணுவத்தளபதி உறுதி மொழி வழங்கி சுமார் 48 மணித்தியாலத்திற்குள் மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளது பலத்தசந்தேகத்தையும் மறுபுறம் வேதனையையும் தருகின்றது.

Beatined%20Student%201.jpg

Beatined%20Student%202.jpg

மேலும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பகீஸ்கரிப்பை இடைநிறுத்துவது தொடர்பாக மாணவர் ஒன்றியம் சாதகமாக பரிசீலித்து வரும் இச்சூழ்நிலையில் மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளமையால் இது தொடர்பாக ஆழமாக ஆராய வேண்டி உள்ளது. எனவே இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு பாதுகாப்புத்தரப்பினர் உறுதி மொழி வழங்கிய பின்னரும் இப்படியான உயிர் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்கின்ற நிலையில் எவ்வாறு எமது மாணவர்கள் தமது கல்வியை சுமூகமாகத்தொடர முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

எனவே தமிழ் பேசுகின்ற மாணவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வ தேச நாடுகளை மனிதாபிமான அடிப்படையில் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

25.10.2011

யாழ்பல்கலைக்கழக மாணவர்ஒன்றியம்,

யாழ்ப்பாணம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69176/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.