Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழுக்காக ஒரு பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30.jpg 02.11.11 மற்றவை ல உலக நாடுகளுக்குச் செல்வதைத் தன்னுடைய இயல்பாக வைத்துக் கொண்டிருப்பவர் ‘புதிய பார்வை’ ம. நடராசன். எப்போதும் அந்தந்த நாடுகளின் தனித்துவம், வரலாறு, கலாசாரம், உணவுமுறை என்று பலவற்றைப்பற்றி புள்ளிவிவரங்களுடன் பேசும் அவர், சமீபத்தில் எட்டு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம். சுவிட்சர்லாந்து, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய் என்று பல நாடுகளுக்குப் போயிருந்தேன். சில மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்திருந்ததால் போய்விட்டு வந்தேன்.

பொதுவாக, இம்மாதிரி வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர் உணரும் பிரச்னை, அந்தந்த நாடுகளின் பிரத்யேகமான உணவுப் பழக்கங்30a.jpgகள். பல நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இதுவரை எனக்கு அந்தப் பிரச்னை வந்ததே இல்லை. எங்கு போனாலும் இந்திய உணவைத் தேடிக்கொண்டிருக்க மாட்டேன். சீனாவுக்குப் போனால் சீனர்களின் உணவைத்தான் விரும்பிச் சாப்பிடுவேன்.

நம்முடைய உணவுமுறையை விட வெளிநாட்டவர்களின் உணவுப் பழக்கம் மேலானது என்பதுதான் என்னுடைய கருத்து. காரணம், இங்கு அளவுக்கு மீறிய எண்ணெய், காரம், உப்பு என்று அனைத்தையும் நம்முடைய உணவில் பயன்படுத்துகிறோம். அதனால் உடலில் பல தொந்தரவுகளை அனுபவிக்கிறோம். அங்கு அப்படியில்லை. அவற்றை மிகவும் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பிய நாடுகளுக்குப் போகும்போதெல்லாம் எனக்கு வயிற்றுக்கோளாறு வந்ததே இல்லை.

ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்கப்படும் ஸ்ட்ராஸ்பர்க் நகருக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த பழமையான கோட்டையைப் பார்த்தேன். பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அவ்வளவு அருமையாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள்.

ஆட்சியாளர்கள் பயன்படுத்திய கட்டில்கள், குழந்தைகளைப் பராமரித்த இடங்கள் எல்லாவற்றையும் பார்த்த போது எனக்கு ஆயிரமாண்டைக் கடந்த தஞ்சைக் கோயில்தான் நினைவுக்கு வந்தது. ஆனால் அங்குள்ள கோட்டைகளை அவர்கள் பராமரிக்கிற அளவுக்கு நம்முடைய வரலாற்று அடையாளங்களான கோட்டைகளை நாம் பராமரிக்கிறோமா என்கிற கேள்வியும் எழுந்தது.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்குப் போயிருந்தேன். மிகச்சிறப்பான வரலாற்றுப் பின்னணி அங்கிருக்கிறது. கடல் அங்கு இயற்கையாக உள்வாங்கியதைப்போல அழகாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் இங்கு பழமையான சர்ச்சுகளும், இருக்கின்றன. ஆசியத் துவக்கமாக இருக்கிற அந்த நாடு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது.

அங்கு இருக்கிற பழமையான வீடுகளைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார்கள். இரண்டு, மூன்றடுக்குகளாக அந்த வீடுகள் கட்டப்பட்டிருக்கி30b.jpgன்றன. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடுகளை இப்போதும் அழகாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த வீடு 1451 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருந்தது. அதன் தொன்மை இன்னும் கலையாமல் இருக்கிறது. மலைப்பகுதியில் இருக்கும் அந்த வீடுகளை எந்த நிலநடுக்கமும் எதுவும் செய்யமுடியவில்லை.

அங்கு ‘‘வெப்மேட்ரிக்ஸ்’’ தொடர்பாக ஒரு கருத்தரங்கு நடந்தது. ஐம்பது நாடுகளுக்கு மேற்பட்டவர்கள் அதில் கலந்து கொண்டார்கள். விஞ்ஞான வளர்ச்சி மற்றும் இணையதளத்தின் வளர்ச்சி குறித்தும், ஸ்டெம்செல்கள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது. பழங்காலக் கல்வெட்டுகள், தாமிரப் பட்டயங்களில் இருந்த எழுத்துக்கள் வலைதளங்கள் மூலமாக இப்போது எப்படியெல்லாம் நவீனமாக மாறியிருக்கிறது என்பது குறித்துப் பேசினேன்.

தமிழினக் கொடுமைக்கு எதிராக ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். அங்குதான் மனித உரிமைகளுக்கான உலகநாடுகள் சபை இருக்கிறது. ஐ.எல்.ஓ போன்ற முக்கியமான தொழிற்சங்க அமைப்புகளும் இருக்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் ஜெனிவா. 1903-ல் ஹென்றி என்பவர்தான் யுத்தம் நடக்கும்போது பாதிக்கப்படும் மக்கள், பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக ‘ரெட் கிராஸ்’ என்ற சர்வதேச அமைப்பை உருவாக்கியவர். மனித உரிமை ஆணையம் இருக்கிற இடத்தில் அவருக்கான சிலையை அமைத்திருக்கிறா30c.jpgர்கள். அந்த இடத்தைப் பார்வையிட்டேன்.

இன்றைக்குத் தமிழகத்தில் தூக்குதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்து கொண்டிருக்கிறதே - அதற்கான முதல்குரல் எழுந்த இடமும் ஜெனிவாதான். ஹென்றிதான் அதற்காக முதலில் இருந்து போராடியவர். தூக்கு தண்டனையை எதிர்த்து அப்போதே ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடத்திய பிறகே பிரான்சும், சுவிட்சர்லாந்தும் தூக்கு தண்டனையை ரத்து செய்தன. தற்போது இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும் இங்கே நடந்திருக்கிறது.

ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் இலங்கைப் பிரச்னை தொடர்பாக நடந்த மாநாட்டுக்கு இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்க என்னை அழைத்திருந்தார்கள். என்னுடன் மற்ற சில எம்.பி.க்களும் வருவதாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அவர்களால் வர முடியாமல் போனதால் நான் மட்டும் கலந்து கொண்டேன்.

அதில் நான் பேசும்போது ‘‘இலங்கையில் இனப்படுகொலை நடந்து ஒரு லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். எண்பதாயிரம் பேர்வரை விதவைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான புனரமைப்பு வேலை நடக்கவில்லை. இந்தியா போன்ற நாடுகளும், மற்ற நாடுகளும் தரும் பணத்தை இலங்கை அரசு வாங்கிக்கொண்டு சிங்கள ராணுவ வீரர்களின் நலனுக்காகப் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இன்றுவரை தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்கள் புனர்வாழ்வுக்காகப் பயன்படுத்தவில்லை. நேரடியாக இலங்கைக்கு ஒரு குழுவினர் சென்று பார்த்தால்தான் இந்த உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்’’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.

இப்போதும் ராணுவத்தினரின் கண்காணிப்பில் தமிழர்கள் நடமாடவேண்டிய சூழ்நிலை, தமிழ் இளைஞர்கள் திடீரென்று காணாமல் போய்விடும் அவலம், 30d.jpgவெள்ளைக்கொடியோடு இறுதி யுத்தத்தின் போது சரணடைய வந்தவர்களைக் கூட சுட்டுக்கொன்ற கொடுமை, தொடர்ச்சியான கைதுகள், இதற்கிடையில் தமிழ்மக்கள் பீதியில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம், தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களை வலுக்கட்டாயமாகக் குடியமர்த்துகிற ஆக்கிரமிப்பு என்று பலவற்றையும் குறிப்பிட்டுப் பேசினேன். இதையெல்லாம் இலங்கை அரசு மூடிமறைத்து இன அழிப்பை மறைத்து நெருக்கடி நிலை என்ற பெயரில் காட்டாட்சி நடத்துகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஆதாரத்துடன் பேசியபோது அதற்கு நல்ல எதிர்வினை இருந்தது. ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்பதுதான் அனைவருடைய கருத்தாக இருந்தது.

இலங்கையில் நம்முடைய தமிழினம் அழிக்கப்பட்டதற்கு எதிராகப் பலநாடுகளில் எதிர்ப்புக் குரல் எழுந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து சென்ற தமிழனாக நம்முடைய குரலையும் பதிவு செய்வதற்குத்தான் இந்த வெளிநாட்டுப் பயணம் உதவியிருக்கிறது என்பதில் எனக்கு ஒரு திருப்தி..

படங்கள் : நோயல் கார்க்கி - குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.