Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடை செய்யப்பட்ட இணையங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட இணையங்கள்

இலங்கையில் தொடர்ந்து முடக்கப்படும் ஊடக சுதந்திரம். தற்போது 5 இணையங்களுக்கு தடை - லங்கா சீறி ஆசிரியர் பெனட் ரூப சிங்கே பொய் வழக்கில் கைது!

தடை செய்யப்பட்ட இணையங்கள் :

www.lankaenews.com

www.srilankamirror.c om

www.srilankaguardian .com

www.paparacigossip9. com

www.lankawaynews.com

www.lankaenews.com - LEN

http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2011/11/08/Videos-related-the-blockage-of-restrictions-on-media.aspx

தடை செய்யப்பட்ட இணையங்கள்

இலங்கையில் தொடர்ந்து முடக்கப்படும் ஊடக சுதந்திரம். தற்போது 5 இணையங்களுக்கு தடை - லங்கா சீறி ஆசிரியர் பெனட் ரூப சிங்கே பொய் வழக்கில் கைது!

????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்படும் அபாயத்தில் இலங்கையின் செய்தி இணையங்கள்

November 8th, 2011 10:24 AM0 Comments

Web-Sites-140x140.jpg

இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்தவொரு இணையத் தளங்களும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் அல்லது அதற்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசாங்கம் எச்சரித்திருக்கிறது.

இலங்கை குறித்த செய்திகளைத் தரும் பல இணைய தளங்களை அதிகாரிகள் தடை செய்த நிலையிலேயே இந்த மிரட்டல் இடம்பெற்று வருகிறது என பிபிசி செய்திச் சேவை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் இணையத் தளங்கள் தணிக்கை செய்வது ஒரு நிலை நிறுத்தப்பட்ட போக்காக இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை அதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது என்று சர்வதேச அளவில் செயல்படும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

குறைந்தது ஆறு இணைய தளங்களை, கடந்த சில நாட்களாகவே, பார்க்க முடியாமல் இலங்கை அரசு தடுத்திருக்கிறது.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இணைய தளம், மற்றும் இந்த ஆண்டு முன்னதாக தீ வைக்கப்பட்ட செய்தி நிறுவனத்தின் மற்றுமொரு இணைய தளம் ஆகியவை இதில் அடங்கும்.

ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் குறித்து தரக்குறைவான தனிப்பட்ட விமர்சனத்தில் ஈடுபட்டதால் இந்த இணைய தளங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகத் ஊடக அமைச்சகச் செயலர் லங்காதீபா பத்திரிகைக்கு பேட்டி அளித்த போதே தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனை முட்டாளதனமானது என்று கூறிய மூத்த எதிர்க்கட்சிப் பிரமுகரான, மங்கள சமரவீர, அரசாங்கம் “பயப்பீதியில்” செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான இணைய தளமான, தமிழ்நெட், 2007ஆம் ஆண்டிலிருந்தே ஏறக்குறைய தொடர்ச்சியாக இலங்கை அரசால் தடுக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தை விமர்சித்த பிற இணைய தளங்கள் அவ்வப்போது தடை செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

களத்தில் ஆயுத ரீதியிலான போர் இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டாலும், தமிழ்ப் பிரிவினைவாதத்தில் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் மக்கள் தொடர்பு இயக்கத்தால் பிரச்சாரப்போர் என்பது தொடர்வதாக அரசாங்க ஆதரவாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இணைய தள செய்தியாளர்களும், ஊடகங்களும், இன்னும் இலங்கை அரசால் வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்படுவதாகவும், இந்தச் செயல்களைச் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதாகவும் பரிஸிலிருந்து இயங்கும் “ எல்லைகளற்ற செய்தியாளர்கள்” என்ற ஊடக சுதந்திர அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் இணைய தளங்கள் தணிக்கை செய்யப்படுவதை அனுமதித்ததற்காக, இலங்கையின் இரு பெரும் தொலைபேசிச் சேவை நிறுவனங்களை, இந்த அமைப்பு கடந்த காலங்களில் விமர்சித்திருந்தது

http://www.vanakkamnet.com/web-sites/

மாபியா பாணி அரசாங்கத்திற்கான அறிகுறி: மங்கள சமரவீர

தனது உத்தியோகபூர்வ இணையத்தளமான லங்காவேநியூஸ் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பல்வேறு இணையத்தளங்களில் மேற்படி இணையத்தளமும் ஒன்றாகும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறினார்.

இதனால் நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வை இரத்துச் செய்வதற்கு கட்சி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஐ.தே.க. ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டமையானது லிபியாவிலிருந்த, தற்போது ஸிம்பாப்வேயில் உள்ளதைப் போன்ற மாபியா பாணி அரசாங்கத்திற்கான தெளிவான அறிகுறியாகும் எனவும் மங்கள சமரவீர விமர்சித்தார்.

இத்துரதிஷ்டவசமான நிலைமை குறித்து பிரபல பௌத்த பிக்குகளும் ஏனைய சமயத் தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் மாபியாக்களுக்கு எதிராக அடுத்த வருடத்தை ஆர்ப்பாட்ட வருடமாக்குவதற்கு ஐ.தே.க. திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirr...9-14-52-08.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.