Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகளைத் திருப்பியனுப்பும் சுவிஸ் நீதிமன்ற முடிவானது ‘ஆபத்தானது’ – அகதிகள் அமைப்புகள் கண்டனம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் பின்னர் சுவிற்சர்லாந்தில் தஞ்சம் கோரிச் சென்ற தமிழர்களின் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு சுவிஸ் சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் ஆதரவு வழங்கியதை அகதி அமைப்புக்கள் கண்டித்துள்ளன.

சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், தற்போது அங்கே அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கேற்ற பாதுகாப்பான சூழல் காணப்படுவதாகவும், இதனால் சிறிலங்காவின் ஒரு பகுதியைத் தவிர ஏனைய இடங்களைச் சேர்ந்தவர்களை மீளவும் அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதென இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தீர்மானித்திருந்ததாக சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் தற்போதும் சிறிலங்காவில் நிலைப்பாடு உறுதித்தன்மையற்றதாக இருப்பதாக சுவிஸ் அகதிகள் சபை சுவிஸ் அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தது.

அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான தீர்வை சுவிஸ் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் அச்சுறுத்தப்பட்ட மக்களிற்கான அரச சார்பற்ற நிறுவனமும் சுவிஸ் சமஸ்டி நிர்வாக நீதிமன்றில் எதிர்த்திருந்தது.

சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் எதிர்க்கட்சியினரின் ஆதரவாளர்கள் என அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதைத் தாம் அறிந்துள்ளதாகவும் இந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதால் குறிப்பாக பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டுள்ளதால்- இந்த நேரத்தில் தஞ்சம் கோரி சுவிஸ் வந்த சிறிலங்கர்களை மீண்டும் அவர்களது நாட்டிற்கு அனுப்புதல் என்ற நீதிமன்றத் தீர்மானமானது ‘ஆபத்தானது’ என அச்சுறுத்தப்பட்ட மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அந்நாட்டின் எதிரிகளாகவே கருதப்படுகின்றனர். அத்துடன் அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசசார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அதிகளவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களே சுவிற்சர்லாந்திலிருந்து மீண்டும் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படுபவர்களாக உள்ளனர்.

‘சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றவர்கள் அதிகம் ஆபத்தைச் சந்திக்கின்றவர்களாக உள்ளனர் என்ற விடயம் உண்மையில் அதிர்ச்சி தரவல்லதே. இவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் என்னால் இதனை விளங்கிக் கொள்ள முடியவில்லை’ என அச்சுறுத்தப்பட்ட மக்களுக்கான அமைப்பின் இயக்குனர் கிறிஸ்ரோப் வியட்மெர் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் வாழும் மிகப் பெரிய புலம்பெயர் மக்களில் சிறிலங்கர்களும் உள்ளடங்குகின்றனர். கடந்த ஆண்டின் இறுதியில் சுவிற்சர்லாந்தில் அகதித் தஞ்சம் விண்ணப்பித்த சிறிலங்கர்களில் 2100 பேர் நிலுவையிலிருந்தனர். கால்நூற்றாண்டாக தமிழ்ப் புலிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மே 2009 இல் அரசாங்கம் வெற்றி பெற்றதுடன் நிறைவுக்கு வந்தது.

யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் என 2011 இல் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளகப் பாதுகாப்பு என்பது முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னி தவிர ஏனைய இடங்களில் பாதுகாப்பு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது சுவிசில் அரசியல் தஞ்சம் கோரியவர்களில் சிறிலங்காவின் வன்னியைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த நாட்டில் வேறு பிரதேசங்களில் சென்ற வாழமுடிந்தால் மட்டுமே அவர்கள் திருப்பி அனுப்பப்பட முடியும் என ஒக்ரோபர் 27 அன்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதேபோல் சிறிலங்காவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் குறிப்பாக ஏதாவது பாதிப்பைக் கொண்டிருந்தால் மட்டுமே அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது தடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

சிறிலங்காவிற்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போது அவர்களது வாழ்க்கை நிலை, தற்போதைய தங்குமிடம் போன்றவற்றையும் குடிவரவு அதிகாரிகள் தமது கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையுள்ளது.

சுவிசில் அகதித் தஞ்சம் கோரிய தமிழ் மக்கள் மீண்டும் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதை எதிர்த்து மீண்டும் ஏப்ரலில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் சுவிஸ் நாடாளுமன்றின் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல், கைது செய்யப்படுதல் போன்ற ஆபத்துக்களைச் சந்திப்பவர்களாக உள்ளனர் எனவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

‘சமஸ்டி நிர்வாக குடிவரவு அலுவலகம் இந்த விடயத்தை மிகவும் அவதானமாகக் கையாளும் என நாம் நம்புகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் உண்மையில் அச்சுறுத்தப்படுவதால் அது தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படும்’ என வியட்மர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுவிஸ் அரசாங்கம் மீது தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தனது நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டு சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் ‘நிறைய’ உள்ளன எனவும் வியட்மர் தெரிவித்தார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் காணாமற்போயுள்ளதாகவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் வியட்மர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போதும் மனித உரிமைச் சூழலானது நிச்சயமற்றதாக உள்ளதாக சுவிஸ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது.

இப்பிரதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்படுபவர்கள் தமது வாழ்வைக் கொண்டு நடாத்துவதில் மிகவும் கடினங்களை எதிர்நோக்குவர். யுத்தம் முடிவுற்றதிலிருந்து இப்பிரதேசங்களில் வீடுகள் பல மீளவும் புனரமைக்கப்படாமல் உள்ளன.

வெளிநாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுடன், சிலர் தடுத்து வைக்கப்படுகின்றார்கள் என்பதை சுவிஸ் அகதிகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.

‘இவ்வாறான நிலைப்பாடுகளைக் கவனத்தில் எடுக்குமிடத்து, சிறிலங்காவில் நீண்ட காலமாக உறுதியான பாதுகாப்பு மிக்க சூழல் நிலவாமையாலும், வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படுபவர்கள் அங்கு அச்சுறுத்தப்படுவதாலும் நீதிமன்றம் தளது தீர்வை மீளவும் ஆராயவேண்டும்.

எந்தவொரு அகதிகளும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக சிறிலங்காவின் வடக்கு அல்லது கிழக்குப் பிரதேசங்களிற்கு அனுப்பப்பட முடியாது’ எனவும் இதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள அகதிகள் தொடர்பாக மிகக் கவனமாக ஆராய்ந்து அவர்களின் நிலைப்பாடுகளை மீளவும் பரிசீலித்த பின்பே உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் சுவிஸ் அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது

http://www.tamilthai.com/?p=30085

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.