Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு

Featured Replies

வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ. ரி.எம். பி. பீ வராவெவ,எம்.இஸட் ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரெட்ரிகா ஜேன்ஸ், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட பலர் சாட்சியமளித்தனர்

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/31050-2011-11-17-18-32-21.html

  • தொடங்கியவர்

வெள்ளைக்கொடி வழக்கு தீர்ப்பையடுத்து அமைதியை குழப்ப எவரும் முற்பட்டால் அதிகாரத்த பயன்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

வெள்ளைக்கொடி வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்போது நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள புதுக்கடைப் பகுதியின் அமைதியை குழப்புவதற்கு எவராவது முயற்சித்தால் குற்றவியல் நடைமுறைக் கோவையின் 90 ஆவது பிரிவின் கீழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  வாழைத்தோட்ட பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் பொன்சேகாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் பட்டாசு கொளுத்துவதற்கும் தேங்காய் உடைப்பதற்கும் சிலர் தயாராகிவருவதாக தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது என வாழைத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் தாக்கல் செய்த மனுவொன்றில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்தே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/31051-2011-11-17-18-54-36.html

  • தொடங்கியவர்

வெள்ளைக்கொடி வழக்கில் பொன்சேகா குற்றவாளி ; 3 வருட சிறை, அபராதம்

வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என கொழும்புமேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவருக்கு மூன்று வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொன்சேகாவுக்கு 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

http://www.tamilmirr.../31069--3-.html

Edited by akootha

  • தொடங்கியவர்

வெள்ளைக் கொடி வழக்கு: பொன்சேகா மேன்முறையீடு செய்வார்

வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆட்சேபித்து, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மேன்முறையீடு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியென அறிவித்த அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/31086-2011-11-18-11-03-33.html

  • தொடங்கியவர்

இந்த வழக்கில் பொன்சேகா யுத்த குற்றங்கள் தொடர்பாக 'பொய்யான' கூற்றுக்களை வெளியிட்டார் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. [ தீர்ப்பு வழங்கிய பென்ச் இலிருந்த நீதிபதிகள் மூவரில் ஒருவர் சரத் ஃபொன்சேகா குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது ( http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/11/111118_fonsekasentence.shtml) ]

அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் கசிய விடப்பட்டுள்ள அறிக்கையில் 'யுத்த குற்றங்களை ஏற்று' சிலர் தண்டிக்கப்பட உள்ளனர்.

வாழ்க புத்த தர்மம், வளர்க நீதி, வாழ்க மகிந்த சிந்தனைகள் :wub:

  • தொடங்கியவர்

பொன்சேகா நிரபராதி என தீர்ப்பு கூறிய நீதிபதி மீது தொந்தரவு: ரணில் குற்றச்சாட்டு

வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான 3 குற்றச்சாட்டுகளிலும் அவர் நிரபராதி என தீர்ப்பு கூறிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.பி.பீ. வராவெவ மீது ஏற்கெனவே தொந்தரவுகள் ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறியுள்ளார்.

தெமட்டகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேற்படி தீர்ப்பின் பின்னர், நீதிபதி வராவெவவின் கணினி சேதமாக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவகாரத்தை தமது கட்சி நாடாளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். நீதிமன்ற தீர்ப்பு வழங்கும்போது நீதிபதிகள் குழாமின் தீர்ப்புகள் வித்தியாசமானவையாக இருந்தால் அனைத்து தீர்ப்புகளும் நீதிமன்றத்தில் வாசிக்கப்படுவது மரபாகும் எனவும் ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி வராவெவவின் தீர்ப்பை வாசிக்க அனுமதிக்யகப்படவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/31172-2011-11-20-14-42-15.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.