Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமரிக்கா வந்த கூட்டமைப்பினரிடம் இருந்து உள்வாங்கபட்ட சில விடயங்கள்:-

Featured Replies

அமரிக்கா வந்த கூட்டமைப்பினரிடம் இருந்து உள்வாங்கபட்ட சில விடயங்கள்:-

சம்பந்தர் ஐயா சாகும்வரை தலைவராகவே இருக்க விரும்புகிறார்

தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற பதத்திலும் பார்க்க தமிழரசு கட்சியைதான் நேசிக்கின்றனர்.இதனால் மாணவர் சமுதாயத்தை இணைப்பதில் சிக்கல் தோன்றியுள்ளது.இவர்களிடம் இதுவரை சரியான சட்ட வல்லுனர்கள் அல்லது சட்ட ஆய்வாளர்கள் இல்லை.மேற்குலகம் தமிழருக்கு ஒரு சரியான தீர்வை வழங்க பலமட்டங்களிலும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது.காரணம் இலங்கை அரசு காலாகாலமாக கூறிய வார்த்தை தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்க புலிகள் தான் முட்டுகட்டையாகவிருக்கிறார்கள் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடு படுகிறார்கள்.அவர்கள் கூற்றுபடி மேற்குலகம் புலிகளையும் வன்னிமக்களையும் அழிக்க துணைபோனது.இதுவரை எந்த சுகபோகங்களும் ஏன் சாதாரண வாழ்க்கைகூட தமிழருக்கு கிடைக்கவில்லை.இப்போ இலங்கை அரசு ஏமாற்றுகிறது.இதற்கு இந்தியா துணை போகின்றது,என்ற தொனியில் மேற்குலக அறிக்கை வெளியாகியுள்ளது.( நோர்வேயினால் வெளிவந்த அறிக்கை)இப்போ சிக்கலில் இந்தியா முறையாக மாட்டிவிட்டது.இந்தியாவுக்கு இரண்டு நிலை,ஒன்று தமிழருக்கு அதிகாரம் பெற்றுகொடுக்க வேண்டும் அல்லது தமிழர் பிரச்சனையை விட்டு ஒதுங்க வேண்டும்.ஆனால் இந்தியா கடைசிவரை ஒதுங்காது.இந்தியா ஒதுங்கினால் தமிழருக்கு அதிகப்படியான தீர்வுகிடைக்கும்.மீண்டும் விடுதலைபுலிகள் கை ஓங்கிவிடும்.இப்படியான இக்கட்டில் இலங்கை அரசை கொண்டு அற்ப சொற்ப தீர்வுகளை வழங்கத்தான் இந்தியா முயற்சிக்கும்.ஏற்கனவே அமரிக்க தூதரகம் யாழில் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து அங்குள்ள நிலைமைகள் நாளுக்கு நாள் உள்வாங்க படுகின்றன.ஒரு சில புத்திஜீவிக்கள் காணாமல் போயினர் (திடீரென வெளி நாடு போய்விட்டார்கள்) இவற்றையெல்லாம் பழங்கள் ஏற்றுகொள்வதாயில்லை.மேற்குலகு தீர்வை பெற்றுகொடுக்கும் போது தனக்கு சாதகமான அரசு அமைவதைத்தான் விரும்புவார்கள்.அதற்காகத்தான் இப்படியான முன் ஏற்பாடுகள்.இதைவிட மத்திய அமெரிக்க நாடுகளில் பல தமிழ் இளைஞர்களுக்கு பல்கலைகழகங்களில் அரசியல் மற்றும் அது சம்பந்தமான விரிவுரைகள் வழங்கப்படுகின்றன.ஆனால் இது யாரால் வழங்கப்படுகின்றது என்பது தெரியாது.இன் நிலை தொடர்ந்தால் இலங்கையில் மீண்டும் தமிழர்கள் அப்புகாத்துமார்களின் ஆட்சியில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும் (சேர் பொன் ராமனாதன்,ஜி.ஜி பொன்னம்பலம் காலம்)என்னை பொறுத்தவரையில் அங்குள்ள பல்கலைகழக மானவர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களை அரசியலில் ஈடுபடுத்தவேண்டும்.இதெற்கெல்லாம் இருப்பது மூன்று மாத காலம் தான்.இந்த மூன்று மாத காலத்தில் இவர்களின் செயற்திறன் எவ்வாறு இருக்க போகிறது கேள்விக்குறியே.இலங்கை அரசு போர் முடிந்தவுடன் ஒரு தீர்வை வழங்கியிருந்தால் இன்றைக்கு இந்தியா நடுத்தெரு நாராயணண் ஆகியிருக்காது.மார்ச் மாதா ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு ஒரு அரைகுறை திர்வு வழங்கப்பட்டால் இந்தியா தொடர்ந்து இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கும்.இல்லையேல் கழற்றிவிட வேண்டும்.கூட்டணியினர் இந்திய அரசுக்கு அடிமைப்பட்டு போதிய அதிகாரம் அற்ற தீர்வை பெறுவார்களாயின் எல்லாம் பாழ் தான்.ஆகவே தற்போதைய நிலை மிகவும் மோசமானது,தை மாதம் வழங்கப்படும் அரைகுறை தீர்வை பெற்றுகொள்ளுமா? அல்லது எம் உயிர் போனாலும் பரவாயில்லை மக்களுக்கு ஒரு வாழ்கு கிட்டவேண்டும் என்று மூத்த பழங்கள் போராடுவார்களா? தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்வார்களா?

By BLUEBIRD

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.