Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது! உள்துறை அமைச்சகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Transitional_logo.gif

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத எவரும் இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுத் தங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குடிமக்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்படிப் பதிவு செய்யாதவர்கள் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவார்கள். எனவே, உங்கள் உங்கள் பகுதிகளிலுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையோ அல்லது அவர்களது அலுவலர்களையோ தொடர்பு கொண்டு விண்ணப்பிப்பதன் மூலம் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன், நிதி வழங்கல் முறைகளிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு டொலர் வரித் திட்டத்தில் இணைந்து கொள்ளாதவர்கள், தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முன்வரும்போது, அதனை முற்றாகச் செலுத்தியவராக இருக்க வேண்டும்.

அப்படி, முழுத் தொகையையும் செலுத்தாதவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நாதம் ஊடக சேவை-

http://www.seithy.co...&language=tamil

அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு எனபது ஒரு நிலப்பரப்பில் அதன் எல்லைக்குள் வாழும் மனிதர்களின் சமூக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிற சட்டங்களை இயற்றவும் மற்றும் அதை நடைமுறைப்படுத்தவும் அச்சட்டங்களை மீறுகிறவர்களை தண்டிக்கவும் அதிகாரம் கொண்டுள்ள ஓர் அமைப்பு ஆகும். மனிதகுலத்தின் மிகப்பழைய மற்றும முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] நவீன அரசின் உறுப்புகள்

பொதுவாக ஒரு நவீன அரசில் நேரடி மற்றும் மறைமுக உறுப்புகளாக பின்வருவன அமைகின்றன.

[தொகு] நேரடி உறுப்புகள்

  1. சட்டம் இயற்றுகிற நிறுவனம்(எ.கா பாராளுமன்றம)
  2. சட்டத்தை நடைமுறைப்படுத்த நிறுவனம் (எ.கா. அமைச்சகங்கள்)
  3. சட்ட நடைமுறையாக்கத்தைக் கண்காணிக்கும் நிறுவனம் (எ.கா நீதிமன்றம்)

[தொகு] மறைமுக உறுப்புகள்

  1. பண்பாட்டு நிறுவனங்கள் (எ.கா சாதி, மதம்)
  2. அறிவுத்துறை நிறுவனங்கள் (எ.கா கல்வி)
  3. பொருளியல் நிறுவனங்கள் ( எ.கா. பணம்)

[தொகு] வகைகள்

பல வகை அரசுகள் புழக்கத்தில் உள்ளன

  1. முடியரசு
  2. அரை முடியரசு
  3. பாராளுமன்றக் குடியரசு
  4. சமவுடைமை அரசு

ஒர் அரசு உருவாக முக்கியமான 4 அம்சங்கள் - 1) நிலம் அல்லது ஆள்புல எல்லை 2) மக்கள் 3) இறைமை 4 அரசாங்கம் 5) சர்வதேச அங்கீகாரம்.

நாடு கடந்த தமிழீழ அரசு

<a data-cke-saved-href="http://tawp.in/r/1fib" href="http://tawp.in/r/1fib" title="இப்பக்கத்தின் குறுந்தொடுப்பு" "style="font-size:12px;" style="text-decoration: none; color: rgb(6, 69, 173); background-image: none; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: initial; background-position: initial initial; background-repeat: initial initial; ">கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இரு

நாடு கடந்த தமிழீழ அரசு (Provisional Transitional Government of Tamil Eelam) என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது[1].

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81

நாடு கடந்த திபெத்திய அரசு

திபெத்தின் நாடுகடந்த அரசின் புதிய பிரதமராகப் பதவியேற்ற லோப்சங் சங்கை சீனாவின் குடியேற்றவாதத்துக்கு எதிராகப் போராட விருப்பதாக சூளுரைத்தார். பதவியேற்பு விழா நேற்று திங்கட்கிழமை இந்தியாவின் தரம்சாலா நகரில் நாடு கடந்த திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா முன்னிலையில் நடந்தது.

http://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.