Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக மனித உரிமைகள் நாளில் நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய உறுதியெடுப்போம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/Ko_nwhZCd38

தமிழர்கள் மீதான போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவின் அரச, இராணுவ தலைவர்களை சர்வதேச விசாரணையின் முன் நிறுத்துவதற்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

டிசம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளில், இதனை மீளவும் வெளிபடுத்திக் கொள்வதோடு நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய திடசங்கற்பம் பூண்டுகொள்வோமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

TGTE_logo_150H.jpg

63வது அனைத்துலக மனித உரிமைகள் நாளாகிய (10-12-2011) இன்று உலகம் முழுவதும் பல்வேறு விடயங்கள் நாடுகளினாலும், அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நாளை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியைக் கோரி, நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் உத்தியோகபூர்வ அறிக்கையொன்று பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் துயரங்களை சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு கொண்டுவரும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும், சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று தனது நன்றியை தெரிவிப்பதோடு

,இச்செயற்பாடுகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது முழுமையான உறுதுணையை வழங்குமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிலங்கா அரசாங்கத்தின் அரச, இராணுவ தலைவர்களை போர்க்குற்ற விசாரணைகளுக்கு முன் கொண்டு வரும் தமிழர்களின் முயற்சியில் இந்த ஆண்டு, ஒரு சிறப்பான ஆண்டாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை, பிரித்தானியாவின் சனல்4 தொலைகாட்சியின் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்படம் ஆகியன, தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் படுகொலையை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியதோடு, சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் வலியுறுத்தியிருந்தது என்பதனை குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சுதந்திர தமிழீழம் நோக்கிய எமது நீதிக்கான எமது பயணத்தில், பயனுள்ள பல முன்னேற்றங்களை அiயும் ஆண்டாக 2012 அமையுமென நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2012 மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தி;ன் கூட்டத்த் தொடரில், சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதற்குரிய செயற்திட்டங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதென்பதனை இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டாம் உலகப் போரில் 60 லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்றதன்; காரணமாக மனித உரிமைகள் ஒரு முக்கியமான விடயமாக கருதப்படுகிறது. யூதர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பல லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுபோலவே தமிழர்களும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக சிறிலங்கா பேரினவாத அரசுகளினால் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள் என நா.த.அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத இனத்தின் மீது ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட இன்படுகொலையே இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக காரணிகளில் ஒன்றாக அமைந்தது. இதேபோல, ஈழதமிழ் மக்களை எதிர்கொள்ளும் அநீதிக்கும், சிறிலங்காவின் இனப்படுகொலைக்கான தீர்வாக, தமிழீழ் எனும் தமிழர் தேசம் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக உருவாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அணைத்தலக மனித உரமைகள் நாள் அறிக்கையில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நாதம் ஊடகசேவை -

http://meenakam.com/...red/2011/12/10/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.